எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கூற்றை ஈரான் மறுத்துள்ளது. அந்தப் பகுதி ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டில்தான் தொடர்ந்து இயங்கி வருவதாக அந்நாட்டின் உயர் அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் பசீஜ் படைப்பிரிவுத் தலைவர் ஹுசைன் தாயேப் பேசுகையில், “இன்று ஹார்முஸ் ஜலசந்தி இஸ்லாமிய குடியரசான ஈரானின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. […]

தாய்லாந்து புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் கஞ்சா பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளன. டாடா குழுமத்திற்குச் சொந்தமான இந்த இரண்டு விமான நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட விமானிகள் பணிபுரிகின்றனர். விமானப் போக்குவரத்துத் துறை விதிகளின்படி தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் […]

வரும் சர்வதேச விளையாட்டு அட்டவணையை முன்னிட்டு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன்படி, முதன்முறையாக நடைபெறவுள்ள ‘பிஃபா ஆசியான் கோப்பை’ (FIFA ASEAN Cup) கால்பந்து தொடரிலிருந்து இந்திய ஆண்கள் அணி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 முறை உலக சாம்பியனான சக்திவாய்ந்த பிரேசில் அணிக்கு எதிராக, வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புரீதியான போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ளதால், இந்த விலகல் […]

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்தப்பட்ட கட்டடத்துக்கு, இந்தாண்டு ரூ.28,000 சொத்து வரி வந்துள்ளதால் பாதிக்கப்பட்ட கட்டிட்ட உரிமையாளர் ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது போல பலருக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட சொத்து வரியை விட கூடுதலாக […]

சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’-ல், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் புதியதாக 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய புதிய தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே மாநிலத்திற்குள் ரூ.1,02,514 கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் ரூ.4,476 கோடி மதிப்பிலான 8 புதிய […]

கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 80 அடியைக் கடந்து உயர்ந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அடைந்துள்ளனர். அணைக்கு வரும் நீரின் வரத்தைப் பொறுத்து நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் 79.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி […]

பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் வளர்த்து வரும் லார் கிப்பான் வகை குரங்கு குறித்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் அவருக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நடிகர் விக்ரம், லார் கிப்பன் (Lar Gibbon) என்ற சிறிய வகை அரிய குரங்குடன் விளையாடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. விக்ரமின் முடியைப் பிடித்து இழுத்தபடி அந்த அரிய வகை குரங்கு அவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் […]

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்று அண்மையில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திடீரென பல்லாயிரக்கணக்கான சொத்து உரிமையாளர்களுக்கு வரி மறுமதிப்பீடு குறித்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருவதால் பொதுமக்களும் சொத்து உரிமையாளர்களும் கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். முன்னதாக கணக்கிடப்பட்ட போது குறைவாக வரி மதிப்பிடப்பட்டிருந்த சுமார் 3.5 லட்சம் சொத்துக்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு மட்டுமே இந்த மறுமதிப்பீடு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் […]

காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவைக் கண்டித்து, கன்னட அமைப்புகள் வியாழக்கிழமை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த பந்த் போராட்ட அறிவிப்பு இருந்தாலும், கர்நாடகா முழுவதும் பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவைகள் வழக்கம்போலவே இயங்கி […]

லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை அன்று ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஒன்றிய பிரதேசத்தில் நான்கு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்த இரண்டாவது நிலநடுக்கம் காலை 9.54 மணியளவில் ஏற்பட்டது. இது வடக்கே 36.765 அட்சரேகையிலும், […]