ஐரோப்பாவில் கடந்த ஜூன் மாதம் நிலவிய வரலாறு காணாத தீவிர வெப்ப அலை காரணமாக, வழக்கமான அளவை விடக் கூடுதலாக சுமார் 16,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய இறப்பு கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைக் கடந்தபோது, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி போன்ற வட ஐரோப்பிய நாடுகளில்தான் இறப்புகள் கணிசமாக அதிகரித்தன. இப்பகுதி மக்கள் இதுபோன்ற கடுமையான வெப்பத்திற்குப் பழக்கப்படாதவர்கள் என்பதும், அங்கு குளிர்சாதன […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியின் வாழ்வையும், அவர் உலகிற்குப் போதித்த அகிம்சை வழியையும் போற்றும் வகையில் இந்தச் சிறப்புத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திர இயக்கத்தின் சிற்பியான மகாத்மா காந்தி தனது வாழ்க்கையில் 21 ஆண்டுகள் […]
எந்தவொரு அணி விளையாட்டுப் போட்டியிலும் உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டங்கள் எப்போதுமே சவாலானவையாகவே இருக்கும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்தல்வீன் நகரில் உள்ள வாகெனார் ஹாக்கி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. டோக்கியோ மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் […]
இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடியது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், பிரதமருக்கு அருகில் நின்று தேசியக் கொடியேற்ற உதவிய பெண் ராணுவ அதிகாரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்தப் பெண் ராணுவ அதிகாரியின் பெயர் கேப்டன் சோனியா சிங் சவுகான் என்பதாகும். இவர் நாடு முழுவதும் இணையத்தில் அதிக அளவில் […]
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபுளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 5.58 […]
சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்துள்ள தலைப்பாகைகள் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. ராஜஸ்தானி பாந்தனி, லெஹரியா ஸ்டைல்கள் மற்றும் மூவர்ண வடிவங்கள் என 2014 முதல் 2026 வரை அவர் அணிந்த தலைப்பாகைகளின் சிறப்பம்சங்களின் தொகுப்பு இதோ. 2026-ஆம் ஆண்டு தனது 13-வது தொடர் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற […]
அருணாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 5 ராணுவ வீரர்கள் உள்பட பலர் மாயமாகியுள்ளனர்; இந்த பேரிடரில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை மற்றும் கடுமையான நீர் தேக்கத்தையும் பொருட்படுத்தாமல், அண்டை முாம்களில் இருந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் […]
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வீடியோவில், த்ரிஷா நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோருக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இந்த விழாவிற்காக த்ரிஷா மஞ்சள் நிற […]
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதனையடுத்து சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாடாளுமன்றத்திலும் […]
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மக்கள் அனைவருக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்யிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்ட […]

