அரசாங்க உதவித் தொகையைச் சார்ந்து வாழக்கூடிய வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களின் மீது கடுமையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், உலகெங்கிலும் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் குடியேற்ற விசா நேர்காணல்களை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விசா நேர்காணலைத் திட்டமிட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் சந்திப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. அமெரிக்கக் குடியேற்றச் சட்டத்தின் […]
ஹைதி நாட்டின் தலைநகருக்கு அருகில் உள்ள கென்ஸ்காஃப் கிராமத்தின் மீது ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஹைதியில் நடந்த மிகப்பெரிய பெருந்திரள் கடத்தல்களில் இதுவும் ஒன்றாகும் என்று அஞ்சப்படுகிறது. தேவாலயம் ஒன்றில் பாதுகாப்புத் தேடித் தஞ்சம் புகுந்த 22 பேர் உட்பட குறைந்தது 47 பேர் […]
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள இந்திய வணிக சமூகத்தினரிடையே உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக விளங்குவதாகவும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது நிகரற்ற வாய்ப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் பாரிய அளவு, நிலையான வளர்ச்சி, இளைய சமுதாயம், அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மூலதனச் சந்தைகள் ஆகியவை கனடிய முதலீட்டாளர்களுக்கு எளிதில் கிடைக்காத […]
அமெரிக்காவில் விசா விதிகள் கடுமையாக்கப்பட்டதன் எதிரொலியாக, நடப்பாண்டில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ‘காமன் ஆப்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காமன் ஆப்’ என்பது அமெரிக்கா மற்றும் பிற 18 நாடுகளில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும். கடந்த 2024-2025 கல்வி ஆண்டைக் காட்டிலும், 2025-2026 கல்வி ஆண்டில் அமெரிக்காவில் சேர விரும்பும் […]
கன்னட நடிகர் யஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள ‘டாக்சிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து யஷ் திரைக்குத் திரும்பியுள்ளதால், இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இப்படத்தில் யஷின் திரை ஆளுமை, டார்க் மற்றும் ஹை-ஆக்டேன் […]
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் (PIMS) மருத்துவமனையில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள மகப்பேறியல் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவின் நர்சரிப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஏசியின் கம்ப்ரசர் வெடித்ததே இந்தத் தீ […]
மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தடுத்தல் மற்றும் பூச்சிக்கொல்லியின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்துகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நெல், பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியான கார்போசல்ஃபான் (Carbosulfan) மீது மத்திய அரசு முழுமையான தடையைப் பரிந்துரைத்துள்ளது. இதன் நச்சுத்தன்மை மற்றும் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகள் குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை […]
ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசிலுக்கு எதிரான பெரிதும் எதிர்பார்க்கப்படும் மோதலுக்கு முன்பு, இந்திய ஆண்கள் கால்பந்து அணி மற்றொரு முக்கியமான சர்வதேச போட்டியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. பிஃபா சர்வதேச போட்டியின் போது செப்டம்பர் 26 அன்று பனாமா அணியை இந்தியா சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பனாமா அணிக்கு எதிரான போட்டியின் மைதானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, மேலும் அது […]
வர்த்தகப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், எஃகு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா அரசுபதிலடி வரிகளை விதித்துள்ளது. இந்த வர்த்தக மோதலில் கனடா தனது இலக்காக 700-க்கும் மேற்பட்ட அமெரிக்க தயாரிப்புகளைக் குறிவைத்துள்ளது. இந்த வரி விதிப்புப் பட்டியல் தொழில்துறைப் பொருட்களைத் தாண்டி, கடல் உணவுகள், சீஸ், ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் டாய்லெட் பேப்பர் போன்ற […]
குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி மருந்துகள் குறித்து பெற்றோரிடையே உள்ள முக்கிய கவலையைத் தீர்க்கும் வகையில், இந்தியாவில் புதிய மருந்து பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், குளோர்பெனிரமைன் மாலெட்டும் (chlorpheniramine maleate) பெனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடும் (phenylephrine hydrochloride) கலந்த கலவை மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த மருந்துக் கலவையை இந்த வயதுப் பிரிவினருக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற […]

