கடந்த ஆண்டு கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பான முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்டிவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று […]
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு ரீதியாக தற்போது 78 மாவட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. முன்னதாக, தேர்தலுக்கு முன்பாகவே அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அப்போது 6 மாவட்டங்கள் மட்டுமே புதிதாகப் பிரிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன. இதனிடையே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட தோல்வி குறித்து […]
சுதந்திர தின விழாவையொட்டி போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரை அமைந்துள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகியவற்றில் உரிய வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே, வாகனங்களில் செல்லமுடியும். உரிய அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் செல்ல தடை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில், பள்ளிச் சீருடையில் இருந்த இரு மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை உடனடியாக தலையிட்டு தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீருடை அணிந்த நிலையில் மாணவிகள் மது அருந்தும் காட்சிகள் […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்பட்டது. இந்நிலையில், நாளை நடக்க உள்ள சுதந்திர […]
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மும்பையில் உள்ள ‘பார்லே அக்ரோ’ (Parle Agro) நிறுவனத்தின் கிடங்கில் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள காலாவதியான Frooti மற்றும் Appy Fizz பானங்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மும்பை செம்பூர் பகுதியில் உள்ள பிரயாக் நகரில் அமைந்த பார்லே அக்ரோ நிறுவனத்தின் கிடங்கில் கடந்த ஆகஸ்ட் 13 மாலை 6 மணிக்கு […]
எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கூற்றை ஈரான் மறுத்துள்ளது. அந்தப் பகுதி ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டில்தான் தொடர்ந்து இயங்கி வருவதாக அந்நாட்டின் உயர் அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் பசீஜ் படைப்பிரிவுத் தலைவர் ஹுசைன் தாயேப் பேசுகையில், “இன்று ஹார்முஸ் ஜலசந்தி இஸ்லாமிய குடியரசான ஈரானின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. […]
தாய்லாந்து புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் கஞ்சா பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளன. டாடா குழுமத்திற்குச் சொந்தமான இந்த இரண்டு விமான நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட விமானிகள் பணிபுரிகின்றனர். விமானப் போக்குவரத்துத் துறை விதிகளின்படி தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் […]
வரும் சர்வதேச விளையாட்டு அட்டவணையை முன்னிட்டு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன்படி, முதன்முறையாக நடைபெறவுள்ள ‘பிஃபா ஆசியான் கோப்பை’ (FIFA ASEAN Cup) கால்பந்து தொடரிலிருந்து இந்திய ஆண்கள் அணி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 முறை உலக சாம்பியனான சக்திவாய்ந்த பிரேசில் அணிக்கு எதிராக, வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புரீதியான போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ளதால், இந்த விலகல் […]
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்தப்பட்ட கட்டடத்துக்கு, இந்தாண்டு ரூ.28,000 சொத்து வரி வந்துள்ளதால் பாதிக்கப்பட்ட கட்டிட்ட உரிமையாளர் ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது போல பலருக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட சொத்து வரியை விட கூடுதலாக […]

