குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு, சிட்னியில் உள்ள வேவர்லி உள்ளூர் நீதிமன்றம் 1,500 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.01 லட்சம்) அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர் ஒரு வருடத்திற்கு வாகனத்தில் பிரீதத்லைசர் லாக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறை நாட்களில், சோதனைச் சாவடிக்கு அருகில் தனது […]

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 பேர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இரு மாநிலங்களுக்கு இடையேயான பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் காட்டமாகத் தெரிவித்துள்ளார். சாமராஜநகர் துப்பாக்கிச் சூடு […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கத் தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் ‘சேவ் அமெரிக்கா’ (SAVE America Act) சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்காக, இந்தியாவின் தேர்தல் புகைப்பட அடையாள அட்டை நடைமுறையை அவர் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் […]

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு லைகா தயாரிப்பில் முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் படம் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. படப்பிடிப்பும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றது. […]

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. […]

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நீதிமன்ற நண்பரும் மூத்த வழக்கறிஞருமான விஜய் ஹன்சாரியா அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். வழக்கறிஞர் சினேகா கலிதா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 96 பக்க அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த பல புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் […]

அந்தமான் தீவுகளுக்கு தேன்நிலவு சென்ற இடத்தில், மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்ட காரணத்தால் கணவர் அவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா என்பவருக்கும், ராம்பகர்தால் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் மே 30, 2023 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் வீட்டார் ரூ.20 லட்சம் ரொக்கம், ஒரு கார் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பிலான வரதட்சணைப் பொருட்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், […]

ஜூன் மாதம் கையெழுத்தான 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையின்றி வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தான் எவ்வித அவசரத்திலும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். Fox News செய்தியாளர் டிரே யிங்ஸ்ட் உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய தொலைபேசி உரையாடலின் ஹார்மூஸ் நீரிணை கட்டுப்பாடு குறித்து ஈரானும் ஓமனும் நடத்தி […]

டெல்லியில் நடைபெற்று வரும் 2026 பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி கணக்கைத் தொடங்கி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 17) இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிர்க்கான முதல் சுற்றுப் போட்டியில், அயர்லாந்தின் சோபியா நோபிளை எதிர்த்து சிந்து களம் கண்டார். ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற அனுபவம் கொண்ட சிந்து, ஆரம்பம் முதலே போட்டியில் தனது […]

நிதின் நவீன் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டு மத்திய அமைப்புக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பில் மொத்தம் 13 தேசிய துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பைஜயந்த் ஜெய் பாண்டா, ரேகா வர்மா மற்றும் தாரிக் மன்சூர் ஆகியோர் துணைத் […]