சென்னை புறநகர் பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பார்களுக்கு சீல் வைக்கும் பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மது பான கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மதுபான பார்களுக்கு சீல் வைக்கும் பணிகள் இன்று மதியம் முதல் தொடங்கி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பிறகும், பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை. குறிப்பாக சென்னை, வேலூர் உள்ளிட்ட இங்ளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிது. இதனால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 15 இடங்களில் இன்று வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. குறிப்பாக […]
கடந்த 5 ஆண்டுகளாக 6,35,000 பேரின் பான் அட்டைகளை முறைகேடாகப் பயன்படுத்தி அதன் மூலம் 2,660 போலி நிறுவனங்களை உருவாக்கி, பல கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி வரியை ஏமாற்றி வந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த பகீர் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மொத்த வரி ஏய்ப்பு தொகையை இன்னும் கண்டறியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது ரூ. 10,000 கோடிக்கு மேல் இருக்கும் […]
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிட்லப்பாக்கம் சபரி தெருவை சேர்ந்தவர் மணி பிரசாந்த் (21) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பணியாற்றிய பெண் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மணிபிரசாந்த், நண்பர்களுடன் வெகுநேரம் நடனமாடியுள்ளார். அப்போது திடீரென மணி பிரசாந்திற்கு வாந்தி மற்றும் […]
பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாடகி உபாத்யாயின் இடது தொடையில் அடிபட்டு, பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் […]
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரத்தில் ராட்சத விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அந்த விளம்பர பலகை திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விளம்பர பலகை கட்டும் பணியின் போது, அந்த விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. விளம்பர பலகை சரிந்து […]
ஆதார் நிர்வாகக் குழுவான UIDAI, மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்திய மக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14ம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளித்துள்ளது. முன்னதாக ஆதாரை புதுப்பிக்க ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜூன் 14 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்துக் […]
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசிடமிருந்து அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகும் போது அதை எதிர்க்க வேண்டும் என கெஜ்ரிவால் […]
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கி, முதல் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்திய தகவல் […]
இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் சொகுசு கார் விவகாரம் தொடர்பாக அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் கடந்த 2010ம் ஆண்டு மசராட்டி என்ற இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி, வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்து விட்டது. மேலும் ரூ.13,07,923 நுழைவு வரி […]