இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையில் அடுத்த கட்டப் பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில், மும்பையில் நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025 நிகழ்ச்சியில், இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) இணைந்து தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) யுபிஐ சேவையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இனி யுபிஐ மூலம் பணம் செலுத்த, ரகசிய PIN எண்ணை உள்ளிடுவது அல்லது தொலைபேசியை எடுத்துச் செல்வது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, பயனர்கள் முகம் அல்லது […]

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான காலக்கெடு நெருங்கி வருவதால், பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருபுறம் கூட்டணி வியூகம், மறுபுறம் தீவிர தேர்தல் பரப்புரை என களப்பணிகளில் இறங்கியுள்ளன. திமுக மற்றும் அதிமுக இடையே மட்டுமே போட்டி என்ற நிலை மாறி, விஜய்யும் அரசியல் களத்தில் நுழைந்துள்ளதால், இம்முறை தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத பரபரப்பை எட்டியுள்ளது. இந்தச் சூழலில், அதிமுக தேசிய கட்சியான பாஜகவுடன் […]

தமிழக அரசியல் களத்தில் வாரிசு அரசியலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, நெல்லை மாவட்டத்தில் முக்கிய அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளார். அவர் வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் அப்பாவு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ.) இருக்கிறார். இவர் 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாகவும், 2001-இல் சுயேட்சையாகவும், 2006 மற்றும் […]

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 24 வயதான சந்தோஷ், சூலூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு முன்பு இவருக்கும், தேவி என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஜாதகம் பொருந்தாத காரணத்தினால், இருவரின் வீட்டாரும் வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். தேவி கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (26) என்பவரைத் திருமணம் செய்துகொண்டு […]

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமன்றி, ஒரு முக்கியமான முதலீடாகவும், சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பண்டிகைகள் மற்றும் திருமணங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ரொக்கமாகப் பணம் கொடுத்துத் தங்கம் வாங்குவதையே பலரும் விரும்புகின்றனர். இருப்பினும், தங்கப் பரிமாற்றங்களில் நடைபெறும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், மத்திய அரசு அவ்வப்போது கடுமையான ஒழுங்குமுறைகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஒரு நபரால் ரொக்கமாக எவ்வளவு […]

தூத்துக்குடி மாவட்டம், தாமரை மொழிப் பகுதியில் முன்விரோதம் காரணமாக உறவினரைக் கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் ஒருவரை, பழிவாங்கும் நோக்கில் ஒரு கும்பல் சினிமா பாணியில் காரை மோதி வீழ்த்தி, சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ தாமரை மொழிப் பகுதியைச் சேர்ந்த சிவசூரியன் (34) என்பவர், தனது உறவினரான கந்தையா (48) என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை […]

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பெரும்பாலான பயனர்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மாறி வருகின்றனர். எனினும், ஒரு நாளைக்கு 2 ஜிபிக்கும் குறைவாக தினசரி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ நிறுவனம் தற்போது ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.601 செலுத்தி, ஒரு வருடத்திற்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் […]

வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைவருக்கும் சமையல் வேலையைக் குறைக்கும் நண்பன் என்றால் அது இட்லி, தோசை மாவுதான். வார இறுதி நாட்களில் 5 நாட்களுக்கான மாவை அரைத்து ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பது பல வீடுகளில் வழக்கமான ஒன்றாகும். சில சமயங்களில், வானிலையில் ஏற்படும் மாற்றம், மாவை அரைக்கும் பக்குவம் அல்லது ஃபிரிட்ஜ்ஜில் ஏற்படும் சிறு பழுதுகள் காரணமாக மாவு எதிர்பாராத விதமாக அதிகமாக புளித்துப்போக […]

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சி நிர்வாகிகளைத் தயார் செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று (அக்.11) அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில், பூத் ஏஜெண்டுகளுக்கான பிரம்மாண்ட […]

அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பியுள்ள சுவாரஸ்யமான மின்னஞ்சல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி, பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்றாலும், […]