நீர் தன்மை கொண்ட காய்கறியில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காயினை அடிக்கடி ஒரு வகையில் உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடலில் இருக்கும் சூடு குறைத்து , வெப்ப நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
சிறுநீர் வெளியேறாமலு அவதிப்படும் பலருக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. அதிலும் சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பித்தம் சமநிலையாக இருக்க உதவுகிறது.
இரத்தத்தைச் சுத்தம் செய்வதில் முதன்மையாக இருக்கிறது . மேலும் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. உடலை வலுப்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் சோகையைப் போக்குகிறது. குடலில் ஏற்படும் புண்ணை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
மூலநோய் உள்ளவர்களுக்கும் இந்த சுரைக்காய் எடுத்துக் கொண்டால் விரைவில் நலன் பெறலாம். மஞ்சள் காமாலை நோய்க்கும் சுரைக்காய் எடுத்துக் கொள்வது சிறந்த மருந்தாக அமைந்துள்ளது.