#திருவொற்றியூர்: அழுகிய நிலையில் வீட்டில் கிடந்த விசிக பிரமுகரின் சடலம்..!

திருவொற்றியூர் மாவட்ட பகுதியில் உள்ள எண்ணூரில் 4வது தெருவில் விசிக பிரமுகரான தனசேகர் (48) எனபவர் மனைவி தீபா (40) மற்றும் ஒரு மகன் இருக்கிறான். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். 


இந்த நிலையில் மனைவி தீபா மற்றும் மகன் பிரவீனுடன் திருவொற்றியூர் பகுதியில் தனது அம்மா வீட்டிலேயே வசித்து வருகிறார். இதனிடையில் தனசேகர் மிகவும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சில தினங்களுக்கு பிறகு குடியிருந்த வீடு பூட்டிக் கிடந்துள்ளது. 

நேற்று காலையில், தனசேகருக்கு கடன் தந்ந 2 நபர்கள், அதனை கேட்பதற்காக அவரின் வீட்டுக்கு வந்துள்ளனர். மேலும், அங்கு சென்ற நிலையில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது பற்றி எண்ணூர் பகுதி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது, தனசேகர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் இந்த நிலையில், அவரின் தலையில் காயம் இருந்ததாக கூறுகின்றனர். 

இதனையடுத்து காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் ப‌ரிசோதனை‌க்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று வீசிவிட்டு சென்ற 14 வயது சிறுவன்..!

Fri Dec 16 , 2022
சத்தீஸ்கர் மாநில பகுதியில் ராய்ப்பூரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் சென்ற வாரத்தில் காணாமல் போகியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காமல் போனதால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டிற்கு அருகில் காலி மனை ஒன்றில் சிறுமியின் உடலானது கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணையாக அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது 14 […]
n45242132016711713048155c854e747110de1dc9d35f946063c5bdeba8cd6c9d317beb2a2a7bb607373074

You May Like