fbpx

வேலை இல்லாத நபர்களுக்கு அரசு சார்பில் இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே…! வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…

படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு சென்னையில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி  நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தப்பட உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை – 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழிசார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 30- வயதிற்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

Also Read: மிகவும் ஆபத்து… பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரில் ISI முத்திரை இல்லை என்றால் உடனே இந்த எண்ணில் புகார் அளிக்கவும்…!

Vignesh

Next Post

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குமாதம் தோறும் உதவித்தொகை...!விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Fri Jul 8 , 2022
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் […]

You May Like