fbpx

#டெல்லி: டேட்டிங் ஆப் மூலம் காதலில் விழுந்த மாணவி.. 4 வது மாடியில் இருந்து குதித்த சம்பவம்..! 

டெல்லி முகர்ஜி நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் டேட்டிங் ஆப் மூலம் வேறு பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகியுள்ளார். இந்த பழக்கத்திற்கு பிறகு, அந்த இளைஞன் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளான். இளைஞரின் அழைப்பினை ஏற்று, அவரது வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மாணவிக்கு தெரிந்த இளைஞன், தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்ற மாணவியை அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது மாணவி தனது கற்பைக் காப்பாற்ற நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் தத்தளித்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தப்பியோட முயன்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

#திருச்சி: மனைவி தூக்கிட்டு தற்கொலை.. காரணம் இதுதான்..!

Sat Dec 24 , 2022
திருச்சி மாவட்டம்  பகுதியில் உள்ள பாளையம் கீழூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கனகராஜ். அவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.  மேலும் சரண்யாவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]
இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்..! ஹோட்டலில் பலான வேலைகளை பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி..!

You May Like