fbpx

அதிமுக அலுவலக வன்முறை… ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தனித்தனியாக சம்மன்..

அதிமுக அலுவலகத்தின் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது..

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரம் ஏற்பட்டது.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்டதால் பதட்டம் நிலவியது.. பதாகைகள் தீ வைத்து எரிக்கபப்ட்ட நிலையில், வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டது..

இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்த நிலையில் அதிமுக அலுவலக பகுதியில் சட்டவிரோதமாக பலர் கூடும் போது விதிக்கப்படும் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்..

இந்நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்ற உத்தரவிடக்கோரி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது..

இந்த வன்முறையில் ஈடுபட்ட என சுமார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. மேலும் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பரவிய வீடியோ ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்..

இந்நிலையில் அதிமுக அலுவலகத்தின் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.. அதன்படி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேர் நாளையும், இபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேர் நாளை மறு தினமும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.. சம்மன் அனுப்பப்பட்ட தேனி,ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.. ச்

Maha

Next Post

முதல் படத்திலேயே பிரச்சனையை கிளப்பிய பிரிகிடா..! கோபத்தில் இயக்குநர் பார்த்திபன்..!

Mon Jul 18 , 2022
சேரி மக்கள் குறித்து அவதூறாக பேசிய இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் நடிகர் பார்த்திபன். இவரின் ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து இரவின் நிழல் படத்தை நடித்து இயக்கியுள்ளார். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு நான் லீனியர் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளையும் பாராட்டுகளையும் […]
முதல் படத்திலேயே பிரச்சனையை கிளப்பிய பிரிகிடா..! கோபத்தில் இயக்குநர் பார்த்திபன்..!

You May Like