fbpx

அடுத்த வாரத்தில் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.. விவரம் உள்ளே..

அடுத்த வாரத்தில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், விடுமுறை நாட்களை மனதில் வைத்து உங்கள் வேலையைத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜூலை மாதத்தில், நாடு முழுவதும் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இதில் அடுத்த வாரத்தில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.. ரிசர்வ் வங்கியின் (RBI) இணையதளத்தின்படி, வங்கி விடுமுறைகள் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது… எனினும் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்த வாரத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் :

  • ஜூலை 10, 2022: ஞாயிறு
  • ஜூலை 11 (திங்கட்கிழமை): ஈத்-உல்-அஷா (ஜம்மு மற்றும் காஷ்மீர்)
  • ஜூலை 13 (புதன்கிழமை): பானு ஜெயந்தி (சிக்கிம்)
  • ஜூலை 14 (வியாழன்): பென் டியன்க்லாம் (மேகாலயா)
  • ஜூலை 16 (சனிக்கிழமை): ஹரேலா (உத்தரகாண்ட்)

Maha

Next Post

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோருக்கு: ராணுவத்தில் சேர போவதாக போக்கு காட்டி இளைஞர் செய்த காரியம்...!

Sat Jul 9 , 2022
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஆல்ரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் 22 வயதான மேகன். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு மேகனின் பெற்றோர்கள் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க போகிறேன் என கூறி மோகன் அவரது பெற்றோர்களிடமிருந்து 250 ரூபாய் வாங்கி சென்றுள்ளார். அந்த பணத்தை […]

You May Like