fbpx

#BREAKING | செந்தில் பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு..!! ஜாமீன் மனுவும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அதிமுக ஆட்சியில் கடந்த 2014ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறைக்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கமான பட்டியலில், பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என கூறியது.

மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு திங்கட்கிழமைக்கு பதிலாக புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

Chella

Next Post

ரூ.10,000 முதலீடு செய்து மாதந்தோறும் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்..!! இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Fri Feb 16 , 2024
தேசிய ஓய்வூதிய திட்டம் அல்லது தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்பது ஓய்வூதியத்தின்போது மொத்த தொகையையும், அதன் பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தையும் வழங்கும் ஒரு திட்டமாகும். இன்றைய காலத்தில் ஓய்வூதிய திட்டமிடல் என்பது அத்தியாவசியமான திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த திட்டங்களில் சில உத்தரவாதமான வருமானத்தை உறுதி செய்கின்றன. மேலும், ஓய்வு பெறும்போது மொத்த தொகை கிடைக்கிறது. அந்த வகையில், தேசிய ஓய்வூதியத் திட்டம் அல்லது தேசிய ஓய்வூதிய அமைப்பு […]

You May Like