fbpx

இளநீர் குடிப்பதால் முகப்பருக்கள் குறையுமா….?

கோடை காலம் வந்து விட்டாலே, நம்முடைய உடலில் இருக்கும் சூட்டை தணிப்பதற்கு இன்றளவும் கிராமத்தில் இருக்கும் பலர் விரும்பி சாப்பிடுவது இளநீர்தான். அந்த இளநீரில் நம்மைப் பொறுத்தவரையில் சூட்டை தணிக்கும் தன்மை இருக்கிறது என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால் அதில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த இளநீர் சாப்பிடுவது வெறும் தாகத்திற்காகவும், சூட்டை தணிப்பதற்காகவும் மட்டும் அல்ல, இந்த இளநீரில் நம்முடைய உடலுக்கு தேவைப்படும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. தற்போது இந்த இளநீரில் என்னென்ன விதமான சத்துக்கள் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

வெயில் காலங்களில் இந்த இளநீரை நாம் பருகுவதால், நம்முடைய உடலில் சூடு தணிந்து, குளிர்ச்சியான தன்மை ஏற்படும். அதே போல முகத்தில் ஏற்படும் பருக்கள் குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த இளநீரால், வயிற்றுக்குள் ஏற்படும் புண் குணமாகும் என்று சொல்லப்படுகிறது.

கோடை காலங்களில் உடலில் ஏற்படும் வறட்சியையும் இது கட்டுப்படுத்துகிறது. அதேபோல, சிறுநீர் எரிச்சலும், இளநீர் சாப்பிடுவதால், குறையும் என்று கூறப்படுகிறது. அதேபோல, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களும் இந்த இளநீர் சாப்பிடுவதால் நீங்கும் என்று தெரிகிறது. அதோடு, இந்த இளநீரை நாள்தோறும் பருகி வந்தால், சிறுநீர் வழியாக உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறி, எப்போதும் உடல் தூய்மையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Next Post

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசக்கூடாது..!! கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு ஐகோர்ட் தடை..!!

Tue Sep 26 , 2023
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், தன் நற்பெயருக்கு […]

You May Like