சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது திருமணமான பெண் கர்ப்பமாகி சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரது கணவர் மீது “போக்சோ” (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் போடப்பட்டது.
சேலம் மாவட்டம் மெய்யனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு மாத கர்ப்பிணியாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பற்றி டாக்டர்கள் விசாரித்தபோது, அவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் என்பதும், இதற்கிடையில், அவரது தாய் மாமன் மகனுக்கு உறவினர்கள் மூலம் அவரை திருமணம் செய்துவைத்ததும் தெரிந்தது.
இதுகுறித்து டாக்டர்கள் அளித்த தகவலின்படி, சேலம் மாவட்ட சமூக நல அலுவலர்கள் ஈஸ்வரி சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் தாய் மாமன் மெய்யனூர் பனங்காட்டை சேர்ந்த மாரியப்பன் மகன் நந்தகுமாரை (25) தேடி வருகின்றனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.