சேலம் மாவட்ட பகுதியில் உள்ள ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் ஹர்ஷிதா (31).
இவருக்கும் மதுரையை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்த ஹர்ஷிதா, தான் பணிபுரியும் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்படத் தொடங்கியதையடுத்து அவர் பணிபுரிந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கடந்த 21ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.