fbpx

“என்னுடைய பணத்தை திருடிவிட்டார்”!. தந்தை மீது போலீஸில் புகார் அளித்த சிறுவன்!.

China: சீனாவில் தான் சேர்த்து வைத்த பணத்தை திருடிவிட்டதாக கூறி தந்தையின் மீது சிறுவன் போலீஸில் புகார் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம். இவ்வாறு கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இந்நிலையில் சந்திர புத்தாண்டையொட்டி தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட பணத்தை எனது தந்தை திருடி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்சு மாகாண பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் போலீசில் புகார் அளித்துள்ளான்.

உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது தான் சிறுவன் சரியாக படிக்கவில்லை என்பதால் அவனை தந்தை கண்டித்ததும், அந்த ஆத்திரத்தில் அவரை போலீசில் சிக்க வைத்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனுக்கு அறிவுரை கூறினர். உனது பணத்தை தந்தை பத்திரமாக வைத்திருப்பார். உனக்கு பணம் தேவைப்படும் போது அந்த செலவுகளை அவர் செய்வார் என அறிவுரை வழங்கினர்.

Readmore: ‘புதுசு புதுசா கிளம்பிட்டாங்க’..!! இந்த நம்பரில் இருந்து உங்களுக்கு ஃபோன் வந்தால் அலெர்ட்..!! பணம் பறிபோகும் அபாயம்..!!

English Summary

“He stole my money”!. Boy files police complaint against father!.

Kokila

Next Post

உட்கார்ந்த இடத்தில் நீண்ட நேர வேலை..!! காஃபி குடித்தால் உங்கள் மரணம் தள்ளிப் போகும்..!! புதிய ஆய்வு முடிவில் தகவல்..!!

Mon Feb 17 , 2025
Shocking information has been released that if you sit and work for more than 6 hours without drinking coffee, you have a 60% chance of dying.

You May Like