fbpx

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு…? மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,577 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 47 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,313 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,39,38,764 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,32,86,787 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,211 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,03,21,82,347 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,69,241 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

"நான் என்ன பன்றேன்னு தெரியுமா..?" பிரதமரின் கேள்விக்கு 5 வயது சிறுமி சொன்ன பதில்...

Thu Jul 28 , 2022
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த பாஜக எம்.பி அனில் ஃபிரோஜியா, நாடாளுமன்றத்துக்கு தனது குடும்பத்தினருடன் பிரதமரை சந்தித்தார்.. அப்போது எம்.பியின் மகளுடனான உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியது.. எம்பியின் 5 வயதாகும் மகள் அஹானா ஃபிரோஜியாவிடம் தான் யார் என்று தெரியுமா என்று கேட்டார்.. அதற்கு, “ஆம், நீங்கள் மோடி ஜி என்று எனக்குத் தெரியும். நீங்க தினமும் டிவியில் வருகிறீர்கள் என்று அக்குழந்தை பதில் கூறியது.. இதைத் […]

You May Like