fbpx

#Breaking: கொரோனா சிகிச்சை பலனின்றி 60 பேர் உயிரிழப்பு…! 21 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு….

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 21,880 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 60 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 21,219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,38,47,065 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,31,71,653 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,930 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,01,30,97,819 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,06,997 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

’புத்தக பைகளை சுமந்த கைகள் பொட்டலங்களை சுமக்கிறது’..! முக்கிய வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை..!

Fri Jul 22 , 2022
தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் போற்றி வளர்க்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் நிலவும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி அறிக்கை வாயிலாகவும், தங்கள் ட்விட்டர் பக்கங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் வன்முறை சம்பவம் அரங்கேறியதற்கும், சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் செயல்படாததே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை […]

You May Like