fbpx

மக்களே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா…! எல்லாம் அலர்டா இருங்க…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,551 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 70 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 2,202 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,41,07,588 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,34,45,624 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,600 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,05,59,47,243 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,95,835 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

4 பேரால் உயிருடன் எரிக்கப்பட்ட நபர்.. தலிபான் ஆட்சியில் தொடரும் அட்டூழியம்..

Fri Aug 5 , 2022
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.. அதன் ஒரு பகுதியாக, நான்கு பேர் கொண்ட குழு ஒரு நபரை உயிருடன் எரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன… மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இதையடுத்து இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.. குசாரா மாவட்டத்தில் அந்த 4 பேரும் கைது செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை […]

You May Like