fbpx

#Covid-19: 24 மணி நேரத்தில் மட்டும் 5,521 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,521 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,322 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,44,95,359 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,39,25,239 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,165 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,15,26,13,044 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,76,305 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மிரட்டல் பவுலிங்கால் பாகிஸ்தானை பந்தாடி ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது இலங்கை அணி..!!

Mon Sep 12 , 2022
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 15-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 20 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்த தொடரில், ஹாங்காங், வங்கதேசம் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர்-4 (SUPER-4) சுற்றுடன் நடையைக் கட்டின. சூப்பர்-4 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை […]
மிரட்டல் பவுலிங்கால் பாகிஸ்தானை பந்தாடி ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது இலங்கை அணி..!!

You May Like