fbpx

இரும்பு கம்பியால் அடித்த பள்ளி ஆசிரியர்…! 4 ஆம் வகுப்பு மாணவன் பலி…!

கர்நாடகாவில் மற்றொரு திகிலூட்டும் சம்பவத்தில், அரசு நடத்தும் பள்ளியில் ஆசிரியர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 4 ஆம் வகுப்பு மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்பது வயதான பாரத் பராகேரி என்ற மாணவன் கடக்கில் உள்ள நர்குண்ட் நகருக்கு அருகில் உள்ள ஹடாலி கிராமத்தில் இருக்கும் அரசு மாதிரி தொடக்கப் பள்ளியில் படித்து வந்தார். பரத் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவத்தின் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் காணாமல் போயுள்ளதாகவும், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது கோபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Vignesh

Next Post

பில் இருக்கா? இல்லையா ஒரே கேள்விதான்? அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும் "கோழி கொக்கரக்கோன்னு" வச்சு செய்த செந்தில் பாலாஜி....

Wed Dec 21 , 2022
பாஜக தலைவர் அண்ணாமலையின் கைக்கடிகார சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதன் பில்லை கேட்டு செந்தில் பாலாஜி ஒரு பதிவை போட்டுள்ளார். கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50000 இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, […]
இனி மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயர்வு..? தீயாய் பரவும் செய்தி..!! உண்மையை உடைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

You May Like