பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது என்று மாநில அரசுகள் முதல் மத்திய அரசு வரையில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் மாணவர்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்துகின்றன. இது போன்ற தாக்குதலால் மாணவர்களின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை அடுத்துள்ள ஹாக்லி கிராமத்தில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகின்றது. அந்தப் பள்ளியில் முத்தப்பா, எல்லப்பா மற்றும் கீதா உள்ளிட்டோர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த இரண்டு ஆசிரியர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் நேற்று காலை பள்ளி ஆரம்பித்த உடன் இருவரும் பள்ளியின் முதல் மாடியில் வழக்கம் போல தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஆசிரியர் முத்தப்பா ஆசிரியை கீதாவை அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த கீதாவின் மகன் பரத், ஆசிரியர் முத்தப்பாவை தடுத்து நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். கோபமுற்ற முத்தப்பா பரத்தை முதல் மாடியில் இருந்து கீழே தூக்கி எரிந்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பரத் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கின்ற ஆசிரியர் மொத்த முத்தப்பாவை தீவிரமாக தேடி வருகிறார்கள். பள்ளி ஆசிரியர் மாணவனை முதல் மாடியிலிருந்து தூக்கி எறிந்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆசிரியர் என்பவர் பொறுமையுடனும், நிதானத்துடனும் இருப்பது அவசியம். அப்போதுதான் ஒருவருக்கு அந்த ஆசிரியரால் கற்பிக்கவும் முடியும். தீய வழிகளில் சென்றால் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவும் முடியும். ஆனால் இப்படி முரட்டுத்தனமாக முன்கோபியாக இருக்கும் ஒருவருக்கு ஆசிரியர் பணியில் இருப்பதற்கே தகுதி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.