fbpx

சாலை ஓரத்தில் சடலமாக கிடந்த ஓட்டுநர் மரணத்தில் மர்மம்….! மனைவியின் புகாரில் காவல்துறையினர் விசாரணை….!

தமிழகத்தில் தற்போது அகால மரண செய்திகள் அதிகரித்து விட்டனர். அதாவது, விபத்து காரணமாக மரணம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர், தூங்கிக் கொண்டிருந்த நபர் தூக்கத்திலேயே உயிரிழப்பது, சாப்பாடு சாப்பிட்டு முடிந்த பின்பு மயங்கி விழுந்து உயிரிழப்பது, நின்று கொண்டிருந்த மனிதன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.

அது இயற்கையான மரணமாக இருந்தால் கூட பரவாயில்லை இயற்கையான மரணம் போலவே ஜோடிக்கப்பட்ட திட்டமிட்ட படுகொலையாகவும் இருக்கின்றன. அவற்றை கண்டுபிடிக்கும் பணிகளில் காவல்துறையினரும் தங்களை முழு முயற்சியுடன் ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே களியல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38) இவர் கடந்த கோட்டில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருக்கின்றன. மணிகண்டன் மணி ஆத்திரம் நிறுவனத்தில் வேலைக்கு நால்வரும் காலை 9 மணிக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்பும் அதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் வழக்கம் போல வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்ட மணிகண்டன் இரவு 9 மணியை தாண்டிய பின்னரும் வீடு திரும்பவில்லை. ஆகவே சந்தேகமடைந்த அவருடைய மனைவி சுஜி பல பகுதிகளில் தேடிப் பார்த்தும், விசாரித்து பார்த்தும் இருக்கிறார்.

ஆனாலும் எங்கு தேடியும் மணிகண்டன் கிடைக்காத நிலையில், நேற்று காலை குழித்துறை அருகே பாகோடு பகுதியில் இருக்கின்ற ஒரு சாலையின் வாரத்தில் ஒரு நபர் இறந்து கிடந்ததாகவும், அவருடைய உடலை குழித்துறை அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த சுஜி, தன்னுடைய குழந்தைகளுடன் பதைபதைக்க குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த உடலை பார்த்தபோது அது மணிகண்டன் தான் என்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் அவருடைய உடலின் பல்வேறு பாகங்களில் காயங்கள் இருப்பதை பார்த்த சுஜி தன்னுடைய கணவரை யாரோ அடித்து கொலை செய்திருப்பதாக தெரிவித்து, மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு மார்த்தாண்டம் காவல்துறையினர் வடக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

குடிபோதையில் கணவன் செய்த செயல்..!! ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துப் போட்ட மனைவி..!!

Fri Feb 3 , 2023
வாலாஜாபேட்டை அருகே குடிபோதையில் தாக்க வந்த கணவரை, மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த ஒழுகூர் கிராமம் வடமேட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை – கலைச்செல்வி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்த ஏழுமலை, அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால், ஏழுமலைக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]
குடிபோதையில் கணவன் செய்த செயல்..!! ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துப் போட்ட மனைவி..!!

You May Like