fbpx

எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிக்க முயற்சித்த பாஜக நிர்வாகி……! பதறிப்போன கரு நாகராஜன் செய்த செயல்….!

தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாக தமிழக அரசை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து பேச முயற்சி செய்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் உடனடியாக அவரிடம் இருந்து மைக்கை பிடுங்கி கொண்டார்.

பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் அந்த இரு கட்சிகள் இடையே கடந்த சில தினங்களாக வார்த்தை போர் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில் அது மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் இடத்தில் கரு நாகராஜன் செய்த இந்த செயல் பார்க்கப்படுகின்றது.இந்த போராட்டத்தில் பாஜகவின் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பூ, உமா ஆனந்த் மற்றும் பல மாநில நிர்வாகிகள் பங்கேற்றுக் கொண்டனர்.

Next Post

வேகமாக பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்…..! பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கிய அட்வைஸ்….!

Sat Mar 11 , 2023
பருவமழை காலங்களின் போது வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் பரவுவது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் இந்த காய்ச்சல் சீசன் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மாதம் வந்த பின்னரும் காய்ச்சல் பாதிப்புகள் குறையவில்லை. இதனால் தமிழக முழுவதும் 1000 பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை தமிழக அரசு நடத்தி இருக்கிறது. அந்த விதத்தில் சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டிருக்கிற காய்ச்சல் […]

You May Like