fbpx

போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்ற பிரபல ரவுடி அதிரடி கைது….!

சமீபகாலமாக தமிழகத்தில் ரவுடிகளின் அராஜகம் தலை தூக்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று நாள்தோறும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தாலும் கூட, விரும்பத்தகாத பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் காவல்துறையின் மீதும், தமிழக அரசின் மீதும் பொதுமக்கள் தங்களுடைய நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்.

ஒரு ரவுடி ஒரு சாதாரண மனிதனை கொலை செய்தாலோ, அல்லது கொலை செய்ய முயன்றாலோ அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு ரவுடி ஒரு காவல்துறை அதிகாரியை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சி செய்தால், அந்த ரவுடியை பாராட்டுவதா? அல்லது அந்த காவல்துறை அதிகாரியை தூற்றுவதா? என்று தெரியவில்லை.

மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலைய துணை ஆய்வாளர் அழகுமுத்து மற்றும் காவலர்கள் இரவு சமயத்தில் மாடக்குளம் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்தனர். அந்த காரில் இருந்து பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சார்ந்த பிரபல ரவுடி கூல் மணி என்கின்ற மணிகண்டன் (30) என்பவர் இறங்கினார்.

அவர் காரை விட்டு இறங்கியவுடன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு என் மீது வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியது நீதானே என்று தெரிவித்து எஸ்ஐ அழகுமுத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அதன் பிறகு இவ்வளவு நாட்களாக உன்னை தான் தேடிக் கொண்டிருந்தேன் என்று தெரிவித்து திடீரென்று காரில் இருந்த அரிவாளை எடுத்து அழகு முத்து வை எப்ப மகிழ்ச்சி தார் இதில் லாபகமாக எஸ்.ஐ அழகுமுத்து விலகிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, பிரபல ரவுடி மணிகண்டனை அவருடன் இருந்த காவல்துறையினர் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரவுடி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார் ஒரு குண்டு புதருக்குள் விழுந்து வெடித்தது. மற்றொரு குண்டு வெடிக்காமல் போனது. இதனை தொடர்ந்து, அந்த காரை அங்கேயே நிறுத்திவிட்டு மணிகண்டன் தப்பிக்க முயற்சி செய்து காட்டுப் பகுதிக்குள் ஓடினார். ஆனால் அவரை பின்தொடர்ந்து சென்று விரட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்திருக்கின்றனர்.

பிரபல ரவுடி ஒருவர் காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Next Post

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த மனைவி….!

Fri Jan 20 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள வெள்ள பந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா இவருடைய கணவர் சந்திரன். இந்த நிலையில், சித்ராவுக்கு சக்திவேல் என்ற நபருடன் முறை தவறிய உறவு இருந்துள்ளது இதனை அறிந்த சந்திரன் சித்ராவையும் சக்தி வேலையும் கண்டித்துள்ளார். அந்த வகையில், தங்களுடைய கள்ளக்காதலை தொடர முடியாதோ என்ற பயத்தில் சித்ராவும், சக்திவேலும் சேர்ந்து சந்திரனை கொலை செய்து இந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையில் புதைத்து விட்டனர். […]

You May Like