fbpx

நாடு எங்கே செல்கிறது? முத்த காட்சி புகைப்படத்தை வைத்து மிரட்டி மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோவில் கைது!

நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமைகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் பாலியல் வன்கொடுமை எப்போதாவது, எங்காவது ஒன்று என்ற நிலையில் தான் நடக்கும். ஆனால் தற்போது இந்த பாலியல் வன்கொடுமை அடிக்கடி நடந்து வருகிறது.இது தொடர்பான புள்ளி விவரத்தை ஆராய்ந்தால் அதிலிருக்கும் தகவலை கண்டு மனம் பதைபதைக்கும் விதமாகவே அந்த செய்தி இருக்கிறது.

ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டால் அவர்களை உடனடியாக கைது செய்யவும், சிறையிலடைக்கவும், எந்த விதமான சட்ட திட்டமும் இல்லாத காலத்தில் கூட இந்த பாலியல் ரீதியான வன்கொடுமை என்பது குறைவாகத்தான் இருந்தது.

ஆனால் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டால் அவர்களை கைது செய்யவும், தண்டனை காலம் முடியும் வரை வெளியில் வர முடியாத அளவிற்கு சிறையில் அடைக்கவும் தகுந்த சட்டங்கள் இருக்கின்றன.இப்படிப்பட்ட இந்த நவீன காலகட்டத்தில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடைபெறுகின்றன.

அதாவது, இப்படி ஒரு சம்பவம் மும்பையை அடுத்த கார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்திருக்கிறது. முத்தம் கொடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, 17 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியும், கைது செய்யப்பட்ட சிறுவனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அன்று பந்த்ராவின் கார்ட்டெர் சாலைப் பகுதியில் சிறுமியின் பிறந்தநாள் விழா நடந்திருக்கிறது. அப்போது அந்த 17 வயது சிறுவன் அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்ததை செல்பி எடுத்து வைத்திருக்கிறார்.

மேலும் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று அந்த சிறுமியை தொடர்ச்சியாக மிரட்டி, அக்டோபர் மாதம் 10ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் பலமுறை அந்த சிறுவன், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அனைத்தும் சமீபத்தில் சிறுமியின் கல்லூரிக்கு வந்து அங்கு வைத்து தன்னுடன் வெளியே வர மறுத்ததால், அந்த சிறுமியை அந்த சிறுவன் தாக்கியதை தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தோழி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி இருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய மகளிடம் அந்த சிறுமியின் பெற்றோர் கேட்டபோதுதான் இது தொடர்பான உண்மை தெரியவந்திருக்கிறது. அதன்பிறகு கேர்வாடி காவல்துறையினரிடம் புகார் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் சம்பவம் நடந்தது கார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், இந்த வழக்கு அந்த பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரினடிப்படையில் விசாரணையை ஆரம்பித்த காவல்துறையினர் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை கடந்த 9ம் தேதி வீடு தேடிச்சென்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.

Next Post

8 ஆண்டுகளாக காவல்துறையில் பணிபுரிந்த மோப்பநாய் தோனி இருதய கோளாறு காரணமாக உயிரிழந்தது! காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்!

Sun Dec 11 , 2022
ஏழையோ அல்லது பணக்காரரோ யாராக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் ஏதாவது ஒரு செல்லப்பிராணி இருக்கத்தான் செய்யும். அப்படி வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மனிதர்களை விட நம்மிடம் நன்றியுடன் இருக்கும். அந்த செல்லப்பிராணிகள் சில நேரங்களில் செய்யும் செய்லகளைப்பாத்தால் மனிதர்களை மிஞ்சுமளவிற்கு இருக்கும். கிராமமோ அல்லது நகரமோ எந்த பகுதியாக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரே செல்லப்பிராணி நாய் தான். நாய் என்பது நன்றியுள்ள ஜீவன் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள், […]

You May Like