மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் உத்தரபிரதேச மாநில இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லக்னோவில் உள்ள நாகாவில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர் இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு கைசர்பாக் பகுதிக்கு சென்ற அந்த இளம் பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இத்தகைய நிலையில், அந்தப் பகுதியில் இருக்கின்ற பொதுமக்கள் சாலையில் இளம் பெண் ஒருவர் ஆடைகள் கலைந்த நிலையில், அலங்கோலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் கைசர்பாக் பகுதியில் நின்று கொண்டிருந்த போது தன்னை ஓடும் காரில் கடத்திச் சென்று சிலர் மாறி மாறி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு அனைத்தும் முடிந்த பிறகு ஓடும் காரில் இருந்து தன்னை சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார் அந்த இளம் பெண். இந்த நிலையில் தான் படுகாயமடைந்த அந்த பெண் ரயில் நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள சாலையில் கிடந்திருக்கிறார். அவரை மீட்டு தற்போது காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்று கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது ஓடும் காரில் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.