fbpx

கோயில் கோபுரத்தின் மீது மோதிய விமானம் – கேப்டன் பலி…!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகே பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரம் மற்றும் மரத்தின் மீது மோதியதில் விமானி உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென, தாழ்வாக பறக்க ஆரம்பித்தது. சில நொடிகளில் குடியிருப்பு பகுதியில் இருந்த கோயில் மற்றும் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து ரேவா போலீசார் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

இதில் விமானம் பலத்த சேதமடைந்த நிலையில், விமானி உயிரிழந்தார். பயிற்சி மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த விமானியின் பெயர் விஷால் யாதவ் என்பதும், காயமடைந்த பயிற்சி விமானியின் பெயர் அன்ஷுல் யாதவ் என தெரியவந்துள்ளது. ரேவா மாவட்ட ஆட்சியர் மனோஜ் புஷ்ப் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு நன்வ்நீத் பாசின் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் விபத்துக்கான காரணங்கள் விசாரணைக்கு பிறகு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kokila

Next Post

நடுக்காட்டில் ஆடை இல்லாமல் தீ பிடித்து எறிந்த பெண்.. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்.!

Fri Jan 6 , 2023
திருப்பூர் பல்லடம் அருகில் இருக்கும் ராயபாளையம் பகுதியில் இருந்த பூஜா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த எட்டு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று இருவரும் காட்டுப் பகுதிக்கு சென்று அங்கே மிகவும் நெருக்கமாக இருந்தனர். அதன் பின் லோகேஷ்க்கு அருகில் ஆடை இல்லாமல் பூஜா படுத்திருந்தபோது தன்னை […]
சொந்த ஊருக்கு திரும்பிய உடனே..!! நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு..!! பதறியடித்து ஓடிய உறவினர்கள்..!! அதிர்ச்சி

You May Like