ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஜெய்ப்பூரில் வசித்து வரும் சரோஜ் சர்மா(65) மற்றும் மைத்துனரின் மகனான அச்சித்யா கோவிந்த் தாஸ்(33) என்ற அனுஜ் சர்மாவும் ஹரே கிருஷ்ணா என்கிற இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
மேலும் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். சென்ற 11ம் தேதி அன்று பெரியம்மாவை காணவில்லை என்று கோவிந்த்தாஸ் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
இதனால் அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்த்த போது தாஸ் பெரிய சூட்கேஸ் ஒன்றுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் தாசை காவல்துறையினர் கைது செய்து விசாரித்த போது தனது பெரியம்மாவின் தலையில் சுத்தியலால் தாக்கி சமையல் அறையில் வைத்து கொன்றுள்ளார்.
மேலும் உடலை குளியலறையில் வைத்து மார்பில் வெட்டும் கட்டர் பயன்படுத்தி 10 துண்டாக உடலை வெட்டியுள்ளார். அத்துடன் ஒரு பெரிய சூட்கேஸில் எடுத்து சென்று டெல்லிக்கு சென்று பல பகுதியில் வீசி வந்துள்ளார். இது குறித்து தாசை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.