நாமக்கல் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளுக்கு முதலமைச்சர் இரண்டு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்ற ஜனனி என்ற 14 வயது பள்ளி மாணவி, ரச்சனா ஸ்ரீ என்ற 15 வயது மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாணவிகள் இறப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இரங்கல் செய்தியில்; மாணவிகள் இறப்பு குறித்து அறிந்து மிகுந்த வேதனையுற்றதாகவும், மகள்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.