fbpx

சோக சம்பவம்..; பள்ளி மாணவிகள் உயிரிழப்பு… ரூ.2 லட்சம் நிவாரண அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!

நாமக்கல் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளுக்கு முதலமைச்சர் இரண்டு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்ற ஜனனி என்ற 14 வயது பள்ளி மாணவி, ரச்சனா ஸ்ரீ என்ற 15 வயது மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாணவிகள் இறப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இரங்கல் செய்தியில்; மாணவிகள் இறப்பு குறித்து அறிந்து மிகுந்த வேதனையுற்றதாகவும், மகள்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ‌

Vignesh

Next Post

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை...! வானிலை மையம் கணிப்பு.‌‌..

Sun Sep 11 , 2022
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்.14 ஆம் தேதி ஒருசில […]

You May Like