fbpx

#சேலம்: நீச்சல் கற்றுக் கொடுத்த போது ஏற்பட்ட சோகம்.. தாயின் கண்முன்னே மகன் மற்றும் கணவர் உயிரிழந்த பரிதாபம்..!

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள பாப்பாம்பாடியில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் தனது மனைவி பிரியா மற்றும் பிரஷிதா என்ற மகள் மற்றும் பிரவிஷ் என்ற மகனுடன் வசித்து வந்துள்ளார். 

மகன் பிரவிஷ் அதே பகுதியிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா தன்னுடைய குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகிலிருக்கும் விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளார். 

இதனை தொடர்ந்து ராஜாவும் மகன் பிரவிஷும் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மகன் ராஜாவின் கழுத்தை இறுக பிடித்துக் கொண்டதால் அவரால் நீச்சல் அடிக்க முடியவில்லை.

சிறிது நேரத்திலே இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மகள் மற்றும் மனைவி காப்பாற்றுங்கள் என கத்தியுள்ளார். அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து இருவரையும் தேடி பார்த்துள்ளனர். 

இது பற்றி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு படையினர் தந்தை மற்றும் மகனின் உடல்களை மீட்டனர். பிறகு உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Rupa

Next Post

#திருப்பத்தூர்: வீட்டின் உள்ளே செல்ல முயன்று மாடி ஏறிய கணவர் விழுந்து பலி.. உறக்கத்தில் இருந்த மனைவி..!

Mon Jan 23 , 2023
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசுக்கு (30) . இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.  இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். காலிங் பெல் வேலை செய்யாததால் மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். அசதியில் தூங்கி கொண்டிருந்த புனிதா போனை எடுக்கவில்லை. இதனால் விபரிதமாக யோசித்த […]

You May Like