fbpx

“அரசு பேருந்தில் அதிர்ச்சி.. மரப்பலகை உடைந்து விபத்து” மயிரிலையில் உயிர்தப்பிய பெண்மணி.!

சென்னை நகர பேருந்தில் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த பலகை உடைந்ததால் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் சென்ற பேருந்து என்.எஸ்.கே நகர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த மரப்பலகை உடைந்துள்ளது. இதனால் இருக்கையில் இருந்த பெண் பயணி நிலை தடுமாறி பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் பேருந்தில் கீழே விழுந்ததும் அலறி துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்கவே அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். இதனால் கீழே விழுந்த நபர் பேருந்து சக்கரத்தில் சிக்காமல் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். லேசான காயங்களுடன் மீண்டும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Post

மும்பை: ராஜ் தாக்கரேவுக்கு பரிசளிக்கப்பட்ட பாபர் மசூதி செங்கல்..!! நவ நிர்மான் சேனா தொண்டர் பெருமிதம்.!

Tue Feb 6 , 2024
உத்தரப்பிரதேச மாநில அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதிலிருந்து எடுக்கப்பட்ட செங்கல் நவ நிர்மான் கட்சியின் நிறுவனர் ராஜ் தாக்கரேவுக்கு பரிசு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நவ நிர்மான் கட்சியைச் சேர்ந்த பாலா நந்கனோகர் என்ற நபர் பாபர் […]

You May Like