டெல்லியில் நியூ அசோக் நகர் பகுதியை சேர்ந்த சுனிதா (30) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு அவர் தாயாக இருக்கிறார். இந்த நிலையில், இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22 காணாமல் போன தாக கணவர் காவல்துறையிடம் புகார் வழங்கினார் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பகுதியில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் என்பது தெரிய வந்தது.
இந்த சூழ்நிலையில், காவல்துறை சார்ந்தவர்கள் சுனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது உறுதி செய்ய ப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை அந்த பெண்ணின் கணவர், பெண்ணுடன் வேலை பார்க்கும் நபர்கள், பக்கத்து வீட்டை சார்ந்தவர்கள் உள்ளிட்டோரை விசாரித்தருடன் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்னர் அந்த பெண்ணின் கணவர் செல்போனுக்கு ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு உங்களுடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் அதனுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார். அந்த செல்போன் என்னை வைத்து காவல்துறை தன்னுடைய விசாரணையை ஆரம்பித்தது.
அதேபோல சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் அந்த பகுதியில் ஒரு டாக்ஸி டிரைவர் சந்தேகத்திற்குரிய முறையில் நடந்து கொண்டதை காவல் துறையினர் கவனித்தனர். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டாக்ஸி டிரைவரான சிவ் சங்கர் முகிய்யா என்ற நபரை கைது செய்து விசாரித்தனர்.
அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அந்த பெண்ணை கொலை செய்தது அந்த டாக்ஸி டிரைவர் தான் என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார். இவருக்கும் அந்த பெண்ணுக்கும் 3 வருடங்களாக பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில், அந்த டாக்சி டிரைவர் பீகார் மாணவர்களை சார்ந்தவர் வேலைக்காக டெல்லியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார் அவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் இருக்கின்றன என்ற விவரம் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இத்தகைய சூழ்நிலையில், உயிரிழந்த பெண் சுனிதா மீது அந்த டாக்ஸி டிரைவருக்கு காதல் ஏற்படவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து அவர் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து அவர் வற்புறுத்தி இருக்கிறார்.
ஆனால் இதற்கு சுனிதா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் கொண்ட அந்த டிரைவர், சுனிதாவின் வீட்டிற்கு சென்று அவரை கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு உடலை வேறு இடத்தில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்ற காவல் துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.