சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (39), ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளன. இருந்தபோதிலும், திருமண தகவல் மையங்கள் மூலம் மற்ற பெண்களையும் ஏமாற்றத் தொடங்கியுள்ளார். தேனாம்பேட்டையைச் சேர்ந்த, கணவனை இழந்த ஒரு இளம்பெண், இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். திருமண தகவல் மையம் மூலம் இவருக்கு சுரேஷ்குமார் அறிமுகமாகியுள்ளார். அப்போது, சுரேஷ்குமார் தான் இன்னும் திருமணம் ஆகாதவர் என்றும், அந்தப் பெண்ணின் குழந்தைகளைத் தனது […]

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (30), ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளம்பர் அன்பு கணபதி (28) என்பவருக்கும், ராஜதுரையின் மனைவி மதுவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ராஜதுரை இதனை அறிந்ததும், கணபதியை கண்டித்துள்ளார். ஆனால், கணபதி கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்நிலையில், இரு குடும்பத்தினரும் இந்த விவகாரம் குறித்துப் பேசி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். இனிமேல் ராஜதுரையின் மனைவியுடன் பேச […]

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் சீர்திருத்தங்கள் நாளை, செப்.22 முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசுகையில், ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 4 அடுக்குகளில் இருந்து (5%, 12%, 18% மற்றும் 28%) இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் ‘sin goods’ எனப்படும் ஆடம்பரப் பொருட்களுக்கு […]

உடல் பருமன் இன்று பலரின் பொதுவான பிரச்சனையாக உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். உடல் எடையை குறைக்க பலரும் ஜிம், டயட் என பல்வேறு முயற்சிகளை கடைபிடித்து வருகின்றனர். இருப்பினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. இதற்கு காரணம், நாம் தேர்ந்தெடுக்கும் உணவுப் பழக்கம்தான். எனவே, இந்தப் பதிவில் உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். இலை கீரைகள்: கீரை மற்றும் லெட்டூஸ் போன்ற […]

திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் பகுதியை அடுத்துள்ள எடையூர் சங்கேந்தி கர்ணகொடை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகள் கீதா (28). இவர், அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (33) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். காலப்போக்கில், கணவர் சரண்ராஜுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில், கீதா தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால், […]

நாட்டின் பொதுப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ‘சென்னை ஒன்’ என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார். சென்னையின் பல்வேறு போக்குவரத்து சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் இந்த புதுமையான செயலியை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் வடிவமைத்துள்ளது. இந்த செயலியின் அறிமுகம், CUMTA-வின் இரண்டாவது ஆணையக் கூட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், முதல்வர் இந்த செயலியைத் தொடங்கி வைப்பதோடு, அடுத்த […]

நவீன வாழ்க்கை முறை, வேலைப்பளு, உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, பலரும் காய்கறிகளை ஒரே நேரத்தில் வாங்கி ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கின்றனர். இது பாதுகாப்பான வழிமுறையாக தோன்றினாலும், சில காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைப்பது சுவையையும், ஊட்டச்சத்துக்களையும் கெடுக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், பிரிட்ஜில் வைக்கக் கூடாத காய்கறிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். பிரிட்ஜில் தவிர்க்க வேண்டிய முக்கிய காய்கறிகள் : வெள்ளரிக்காய் : நாம் […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த திடீர் அறிவிப்பு பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது. பிரதமர் என்ன பேசுவார் என்பது குறித்த தகவல்களை அரசு வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை. இதனால், இந்த உரை குறித்து தேசிய அளவில் கவனம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளைய தினம் (செப்டம்பர் 22) ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், இதுபற்றி […]

இந்தியாவில் பல்வேறு மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 32 மருந்து மாதிரிகள் தரமற்றவை என மத்திய மருந்து ஆய்வகங்கள் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் வழக்கமான ஆய்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு அதன் இணையதளத்தில் தரமற்ற மற்றும் போலியான மருந்துகளின் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான சோதனையில், மத்திய மருந்து ஆய்வகங்கள் […]

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவரின் மகன் தங்கவேல்சாமி (28). கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இவர் நெல்லை, வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநரான சுப்பையாவின் மனைவி பார்வதி (33) என்பவருடன் தங்கவேல்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவருக்கும் […]