ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலியாக, நாளை (செப்டம்பர் 22) முதல் வெண்ணெய், ஐஸ்கிரீம் மற்றும் பால் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை குறைத்து அமுல் அறிவித்துள்ளது. நுகர்வோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அமுல் பிராண்டின் கீழ் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF), அதன் 700க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 22 […]

13,217 வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை ஐபிபிஎஸ் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன. Office Assistants (Multipurpose), Officer […]

இந்திய தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு பெரிய ஆறுதல் அளிக்கும் வகையில், H-1B கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்துவது குறித்த அதிபர் டிரம்பின் உத்தரவு, புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே உள்ளவர்களுக்குப் பொருந்தாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். “நாட்டிற்கு வருகை தருபவர்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் அல்லது இந்தியாவுக்கு செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பு அவசரமாக திரும்பிச் செல்லவோ அல்லது $100,000 கட்டணத்தை செலுத்தவோ தேவையில்லை. $100,000 என்பது […]

திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; உயர் கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் 15- ம் தேதி வரை நடைபெறும். இதன் வழியே படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலை https://deb.ugc.ac.in இணைய தளத்தில் அறிந்து […]

ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய வங்கதேச அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ‘திரில்’ வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை (‘டி-20’) 17வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த முதல் ‘சூப்பர்-4’ போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (22), குசால் […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய […]

ஆப்கானிஸ்தான் பாக்ராம் விமானத் தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும், இதை தலிபான் அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றால் ‘மோசமான விஷயங்கள் நடக்கும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளதாவது,”ஆப்கானிஸ்தான், பக்ராம் விமான தளத்தை அதை கட்டியவர்களிடம், அதாவது அமெரிக்காவிடம் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கப் போகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து […]

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.. பன்முகத்திறமை கொண்ட மோகன்லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்படுகிறது.. செப்டம்பர் 23-ல் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு தாதா சாகே பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நடிகர் மோகன்லாலில் திரைப்பயணம் பல […]

நாகையை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் இன்று திருவாரூர் தெற்கு ரத வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் நினைவுக்கு வரும்.. ஓடாமல் இருந்த இந்த திருவாரூர் தேரை ஓட்டுனது நான் தான் என்று மார்தட்டி சொல்லியது யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் அவரின் மகன் மாண்புமிகு சி.எம். நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாபக்கமும் கட்டையை போட்டு நிறுத்திவிடார்.. இதை […]