அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு பணி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பொதுவாக சிரிப்புக்கான விஷயமாக கருதப்படும் குறட்டை, உண்மையில் இதய ஆரோக்கியத்திற்கான ஒரு தீவிர எச்சரிக்கை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கத்தில் ஏற்படும் இந்த ஒலி, பல நேரங்களில் ‘தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சுத்திணறல்’ (Obstructive Sleep Apnea – OSA) எனப்படும் கடுமையான தூக்கக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “குறட்டை என்பது நல்ல தூக்கத்தின் அடையாளம் அல்ல” என்றும், இது இரவில் சுவாசப் […]
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 4 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 23 முதல் 26 வரை 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் சேர முன்பதிவு அவசியம் என்றும், அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் […]
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ரேஷன் அட்டையின் வகையை மாற்றிக்கொள்ள முடியும். பொதுவாக, தமிழ்நாடு அரசு அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை அட்டைகள் (PHH), முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் (NPHH), சர்க்கரை ரேஷன் கார்டு மற்றும் பொருளில்லா ரேஷன் அட்டை என பல வகைகளில் அட்டைகளை வழங்குகிறது. உங்கள் தற்போதைய ரேஷன் அட்டை, உங்களின் தற்போதைய பொருளாதார நிலைக்கு பொருந்தவில்லை என்றால், அதை […]
திமுக தலைவர் மு.க.ஸ்ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23.09.2025 செவ்வாய் கிழமை, காலை 10.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கத்தில் நடைபெறும். அதுபோது, திமுக மக்களவை – […]
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகியா நாடுகள் அறிவித்துள்ளதால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடுமையான கோபத்தில் உள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த போரில் காசாவை சேர்ந்த பாலஸ்தீன மக்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டனா். மேலும் அவர்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதற்கு இஸ்ரேலின் […]
தமிழகத்தில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய […]
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அமைந்துள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில், சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஒரு சக்திவாய்ந்த ஆலயமாக திகழ்கிறது. புதுக்கோட்டை மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதல்களை வைத்து, அவை நிறைவேறியதும் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். சிறப்புகள் மற்றும் நேர்த்திக்கடன்கள் : இந்தக் கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக, இங்குள்ள முனீஸ்வரர் தானாக முளைத்தவர் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. […]
அம்பிகையை வழிபடுவதற்குரிய மிக முக்கியமான காலமாக நவராத்திரி திகழ்கிறது. இந்த நாட்களில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். முதல் 3 நாட்கள் துர்கையாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் தேவியரை வழிபடுவது வழக்கம். இதன் மூலம் அவர்களின் அருள் முழுமையாக கிடைக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு நவராத்திரி செப்டம்பர் […]
நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை இன்று (செப்டம்பர் 22) துவங்கி, அக்டோபர் 02ம் தேதி விஜயதசமியும் நிறைவடைகிறது. வழக்கமாக நவராத்திரி என்பது சரஸ்வதி பூஜை வரையிலான ஒன்பது நாட்களும், விஜயதசமி பத்தாவது நாளிலும் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் மிக அபூர்வமாக நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்படும். அப்படி இந்த ஆண்டும் அபூர்வமாக […]

