நாடு முழுவதும் 16 நிலையான மருந்து கலவைகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு மத்திய அரசு உடனடி தடை விதித்துள்ளது. சிகிச்சை ரீதியான நியாயம் இல்லாததாலும், பயனை விட ஆபத்துகள் அதிகம் இருப்பதாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Amoxicillin + Serratiopeptidase, Amoxicillin + Cloxacillin, Paracetamol + Lignocaine, Cefuroxime + Serratiopeptidase உள்ளிட்ட மருந்து கலவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மற்றும் தோல் பராமரிப்பு மருந்து […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
காய்கறிகள் என்றாலே, உடலைப் பாதுகாக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆகியவைதான் நம் நினைவுக்கு வருகின்றன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு காய்கறிகளில் வெண்டைக்காய்க்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. இது ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்களின் சிறந்த மூலமும் கூட என்று நிபுணர்கள் […]
செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான ChatGPT, ஒரு எளிய உரை அறிவுறுத்தலைப் பயன்படுத்தி, ஆபாசமான, பாலியல் மற்றும் வன்முறை நிறைந்த படங்களை உருவாக்கத் தூண்டப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்ச்சியான சவால்களை எடுத்துக்காட்டுகிறது. OpenAI இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டதுடன், இந்த விவகாரம் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பிறகு இது குறித்து விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட […]
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய […]
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.. தேர்தலுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக இந்த தேர்தலில் […]
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை […]
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த புதிய தாக்குதல்கள் காரணமாக, புதிதாக அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தின் எதிர்காலம் மற்றும் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த கவலையை எழுப்பி உள்ளது.. […]
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே பல்வேறு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன.. குறிப்பாக ஏற்கனவே அதிமுக, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் புதிதாக தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது போல சமூக வலைதளங்களில் தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் AI மூலம் உருவாக்கப்பட்ட பல போலி செய்திகளை தமிழக அரசு வெளியிட்டதாக கூறியும் பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் உண்மை செய்தி எது பொய் செய்தி எது […]
G7 உச்சிமாநாட்டின் போது சக உலகத் தலைவர்களிடம் “நான்தான் தலைவர்” (I’m the boss) என்று நகைச்சுவையாகக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்த நிகழ்வு இணையத்தில் வைரலானதற்குப் பிறகு அது குறித்துப் பதிலளித்துள்ளார். இந்தக் கருத்து சமூக ஊடகங்கள் மற்றும் சர்வதேச செய்தித் தளங்களில் வேகமாகப் பரவி விவாதப் பொருளாக மாறியது.. ‘தி ஆக்சியோஸ் ஷோ’ (The Axios Show) நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், அந்தக் கருத்து […]
ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கான அபராதத் தொகையை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை இப்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது கண்டறியப்பட்டால் குறைந்தபட்சம் ரூ. 250 அபராதம் விதிக்கப்பட்டது; இப்போது அது ரூ. 500 ஆக […]

