சிஎஸ்கே கேப்டன் தோனி, இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், ஏதோ புதிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் […]

சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்து வருபவர் ஞானசெல்வன். இவரது மனைவி வகித்தாபுளோரா. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். கணவன் ஞானசெல்வன் ஆன்லைனில் ரம்பி விளையாடி, 1000 ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த வகித்தா கணவரிடம் இதுகுறித்து வாக்குவாதம் செய்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் இருந்த மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மெட்ரோ ரயிலில் சிறப்பு கட்டண சலுகை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேசமயம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவாயை ஈட்டுவதற்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையம் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் முழுமையாக பயனடைய மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து […]

மும்பை மற்றும் சுற்றி இருக்கும் பகுதிகளில் மாங்குரோவ் என அழைக்கப்படும் சதுப்பு நில காடு அதிகளவில் உள்ளது. இந்த காடுகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் நவிமும்பை, வசாய் போன்ற பகுதிகளில் சமூகவிரோத கும்பலால் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.. இந்தநிலையில் நவிமும்பையில் உரன் தாலுகாவில் இருக்கும் துடும் பகுதியில் லாரி நிறுத்தத்திற்காக மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்ட அதிர்ச்சி […]

தமிழகத்தில் பெட்ரோல்குண்டு கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்அறிக்கையில் ’’தமிழகத்தில் இந்து முன்னணி , ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகுள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு , தீ வைப்பு சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளனர். ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே […]

விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார். கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட  பல பகுதிகளிலும் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழ்நிலையில், சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு […]

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும், கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அடிக்கடி அதிர்ச்சி தரும் நாடு வடகொரியா. குறிப்பாக, அதன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனிடையே, அணு ஆயுத வல்லமை பொருந்திய அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன் தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது. […]

மதுரையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து, அதை ஆண் நண்பருக்கு அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் MBBS படித்து முடித்துவிட்டு கமுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். ஆசிக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள காளீஸ்வரி என்பவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட்., படித்து […]

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷியாவில் படைகளை அணி திரட்ட அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டார். அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்தியவர்களில் 730 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிராக போரிட படைகளை திரட்ட புதின் உத்தரவிட்டார். இந்நிலையில், ராணுவ ஆட்சேர்ப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. போரில் கலந்து கொள்ள விருப்பமில்லை என கூறி ஏராளமான ரஷியர்கள் வெளிநாடு தப்பிச் செல்கின்றனர். மேலும் […]

அங்கிதா பந்தாரி கொலை வழக்கில் இறுதிச் சடங்கு செய்வதற்கு அவரது உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர். உத்தரகண்டில் பவுரி மாவட்டத்தில் 19 வயது இளம் பெண் கடந்த 6 நாட்களுக்கு முன் காணாமல்போனார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று ரிசார்ட்டில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அங்கிதா பந்தாரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரிசப்ஷனிஸ்டான அங்கிதா பந்தாரியை கொலை செய்து […]