ஜப்பானின் நகோயா பகுதியில் இன்று சனிக்கிழமை தொடங்கும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து குளறுபடிகளால் ‘மிக மோசமான தொடர்’ என்ற விமர்சனத்தை சந்தித்து வருகிறது. 1964 மற்றும் 2021 ஒலிம்பிக் போட்டிகளை திறம்பட நடத்திய ஜப்பான், தற்போது 45 நாடுகளைச் சேர்ந்த 17,000-க்கும் மேற்பட்ட வீரர்களை ஹோட்டல்கள், கண்டெய்னர்கள் மற்றும் சொகுசுக் கப்பல்களில் தங்க வைக்க சிரமப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தச் சவால்களுக்கு இடையே இந்திய […]

20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜப்பானின் அய்சி – நகோயா நகரில் இன்று சனிக்கிழமை (செப். 19) அதிகாரபூா்வமாகத் தொடங்குகின்றன. 22 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், 45 நாடுகளில் இருந்து 10,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். மொத்தமாக 43 விளையாட்டுகளில், 71 பிரிவுகளில் அவா்கள் களம் காணவுள்ளனா். அய்சி – நகோயா நகரில் வரும் அக்டோபா் 4-ஆம் தேதி வரை இந்த விளையாட்டுத் திருவிழா நடைபெறவுள்ளது. ஒரு சில […]

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் (Kohat) மாவட்டத்தில் உள்ள பழைய போலீஸ் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்; பலரும் படுகாயமடைந்தனர். வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மசூதி மற்றும் காவல் வளாகத்தின் கதவு மீது தற்கொலைப்படை பயங்கரவாதி மோதி வெடிக்கச் […]

பண்டிகை காலங்களில் விரதம் இருப்பது இந்தியாவின் பல்வேறு மத மற்றும் ஆன்மிக மரபுகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது. உடல் சுத்தம், மனக் கட்டுப்பாடு, தியானம், இறைநாமத்தை உச்சரித்தல் போன்றவற்றுக்காக பலர் விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் விரத நேரத்தில் பசியை சமாளிக்க தேநீர், காபி போன்ற பானங்களை அதிகமாக அருந்துவது உடல்நலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். விரதம் இருக்கும் நாட்களில் பலர் பால் தேநீர், பால் சேர்க்காத தேநீர், கிரீன் டீ […]

சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று (18.09.2026) ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் ஆலோசனை நடத்தி, பருவமழையை எதிர்கொள்ள தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்னையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மாநகராட்சி பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என […]

ஆயுர்வேத மருத்துவ முறையில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகப் பேண ‘அபியங்கா’ எனப்படும் தினசரி எண்ணெய் மசாஜ் மிக முக்கிய வாழ்வியல் முறையாகக் கருதப்படுகிறது. உடலின் தன்மைக்கேற்ப சரியான இயற்கை எண்ணெயைத் தேர்ந்தெடுத்துத் தடவி வருவதன் மூலம், சரும வறட்சி நீங்கி பளபளப்பு கூடுவதோடு, தசை இறுக்கம் தளர்ந்து மன அழுத்தம் குறையும் என ஆயுர்வேதம் கூறுகிறது. நவீன அவசர காலகட்டத்தில் தினமும் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது பலருக்கும் […]

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொசுக்களால் பரவும் இந்த தொற்று சில நேரங்களில் உயிருக்கே உலைவைக்கும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் என்பதால், மக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என […]

வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்கள், மன அழுத்தம் மற்றும் இக்கட்டான ஆபத்துகள் சூழும்போது மனித மனம் அடைக்கலமாகத் தேடுவது இறைவனின் திருவடிகளைத்தான். அதுவரை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட, வாழ்வின் இக்கட்டான தருணங்களில் இறைவனின் அருள் தேவையாகிறது. அவ்வாறு சோதனைகள் நிறைந்த காலகட்டத்தில், உலகைக் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைச் சரணடைவது மிக விரைவான நற்பலன்களைத் தரும். முதலை காலைப் பற்றிய வேளையில், மரண பயத்தில் “ஆதிமூலமே” என கதறிய கஜேந்திரன் என்ற […]

தமிழ் மாதங்களில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் ஒன்றாக ‘புரட்டாசி’ மாதம் கருதப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த நாட்களாக பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த நாட்களில் பெருமாளை வழிபட்டு, விரதம் இருந்து, கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இன்று இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் வீட்டில் எப்படி வழிபடலாம் என்று பார்க்கலாம். புரட்டாசி சனிக்கிழமை அன்று அதிகாலையில் […]

சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு, திடீர் சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் (MGM) ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குப் பல்வேறு […]