3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கச்சந்திரா சிங் இன்று புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.. கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்நாத் மருத்துவமனையில் கநான்காம் கட்ட கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. கடைசி நாட்களில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் அவரை மெக்கானிக்கல் வென்டிலேட்டர் ஆதரவுடன் வைத்திருந்தனர். மேலும், உடலை நிலைநிறுத்த தொடர்ந்து […]
தமிழக நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்பாகவும், இக்கட்டான சூழலில் கைக்கொடுக்கும் உற்ற நண்பனாகவும் என்றும் திகழ்வது தங்க நகைகள் மட்டுமே. அவசர தேவைக்காக யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லாமல், வீட்டில் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து உடனடியாக நிதித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது புதிய தொழில் தொடங்குவது என எந்தவொரு நிதி நெருக்கடிக்கும் நகைக்கடன் ஒரு எளிய தீர்வாக […]
கோடைக்காலத்தின் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க நாம் ஏசிகளை (AC) அதிகம் நாடுகிறோம். ஆனால், முறையான பராமரிப்பு இல்லையென்றால், அவை அதிக மின்சாரத்தை உறிஞ்சுவதோடு விரைவில் பழுதடையவும் வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டு ஏசியின் ஆயுளை கூட்டி, அதே சமயம் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நிபுணர்கள் வழங்கும் சில முக்கிய ஆலோசனைகளை இங்கே காண்போம். பலரும் ஏசி ஓடும்போது மின்விசிறியை (Fan) அணைத்து விடுவார்கள். ஆனால், ஏசி இயங்கும்போது குறைந்த வேகத்தில் ஃபேனை […]
பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் ஓடும் முதன்மையான கவலை, அவர்களின் கல்வி மற்றும் திருமண எதிர்காலத்தைச் சீராக அமைப்பதை பற்றியதாகவே இருக்கும். இதற்காக சிறுகச் சிறுகப் பணம் சேமிக்கப் பல வழிகளைத் தேடி அலைபவர்களுக்கு, மத்திய அரசின் ஒரு சிறப்பான திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பெண் குழந்தைகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் நுணுக்கங்களை நாம் விரிவாகப் பார்ப்போம். […]
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் பாதையை முற்றிலும் மாற்றிக்கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு தனி அணியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது தீவிர ஆதரவாளரான உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் […]
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக தங்களது கோரிக்கைகளுக்காக போராடி வந்த சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு இனிப்பான செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அரசுப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பணி நிறைவு கால பலன்களை அதிரடியாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுவரை சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய […]
அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த எல்லைப் பிரச்சனை, தற்போது ஒரு முழுமையான போராக வெடித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை, பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது அதிரடியாக குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே இப்போது நேரடிப் போர் தொடங்கிவிட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ஆசியப் […]
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காலம் நிறைவடைந்த பின்னரும், வளிமண்டல சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் இந்த திடீர் வானிலை மாற்றம் குறித்துச் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்றைய தினம் (பிப்ரவரி 27) தென் […]
அதிமுக கூட்டணிக்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது ஆதரவை உறுதி அளித்துள்ளதாக தீயாய் பரவிய செய்திகளுக்கு, அந்த அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தற்போது அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் நேற்று நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, வணிகர்கள் இந்த முறை இரட்டை இலைக்கே ஆதரவு எனப் பரவலான பேச்சு எழுந்தது. இந்நிலையில், அந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து விக்கிரமராஜா விரிவான விளக்கமளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியுடனான […]

