பெங்களூருவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக அவரது உடல் அமைப்பை விவரித்து பில்லில் அச்சிடப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள ‘சப்கோ தி கிராப்டரி’ (Subko The Craftery) என்ற உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கு உணவை உட்கொண்டுவிட்டு பில்லைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். பில்லில் வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக “Little fat black shirt” […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மும்பையின் புலேஷ்வரம் பகுதியில் புகழ்பெற்ற ‘புலேஷ்வரச்சா ராஜா விநாயகர் சிலையைக் கொண்டு செல்லும் ஊர்வலத்தின் போது, பிரம்மாண்டமான சிலை திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்தனர். சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 22) சுமார் 9:51 மணியளவில் புலேஷ்வரத்தில் உள்ள கபூர்கானா அருகில் உள்ள ஜெய அம்பே சவுக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பிரிஹன்பும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விபத்து எப்படி நடந்தது? […]
மத்தியப் பிரதேசம் சிந்தவாரா மாவட்ட மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வார்மர் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு குழந்தைகள் தீக்காயமடைந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் வார்மர் (குழந்தைகளுக்கான வெப்பமூட்டும் கருவி) இயந்திரத்தின் பிலமென்ட்டில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக இந்த விபத்து நேரிட்டது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளைக் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு: திமுக கிளைச் செயலாளருக்கான அதிகபட்ச […]
ஒடிசாவில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் தன்னுடன் வந்து சேரவேண்டும் என்று மூடநம்பிக்கையின் காரணமாக, இளைஞர் ஒருவரை தலையைத் துண்டித்துக் கொன்று, அவரது தலையை பூஜை அறைக்கு அடியில் புதைத்த திடுக்கிடும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சத்ருகன் சாகு (40) மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 18 முதல் காணாமல் போன 45 வயதான சந்தோஷ் கார்செல் […]
டோக்கியோ பகுதி உட்பட கிழக்கு ஜப்பானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குறைந்தது 23 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படியும், இபாராகி மாகாணத்தின் தெற்குப் பகுதியில் 70 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் இப்பகுதியின் அளவை அமெரிக்க புவியியல் […]
வெயில், தூசி, மாசு மற்றும் அதிக வியர்வை போன்ற காரணங்களால் உடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆனால், அனைவரும் தினமும் குளிக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ஒரே பதில் இல்லை. ஒருவரின் உடல் செயல்பாடு, காலநிலை, வியர்வையின் அளவு மற்றும் சருமத்தின் தன்மையைப் பொறுத்து குளிக்கும் முறையை மாற்றிக்கொள்ளலாம். Cleveland Clinic-ன் தோல் மருத்துவர் டாக்டர் ஷில்பி கெதர்பால் கூறுகையில், பொதுவாக தினமும் ஒருமுறை குளிப்பது நல்ல பழக்கமாக இருந்தாலும், […]
சாணக்கியர் இந்தியாவின் புகழ்பெற்ற சிந்தனையாளர்களில் ஒருவராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல் ஆலோசகராகவும் அறியப்படுகிறார். அவர் எழுதியதாகக் கருதப்படும் ‘சாணக்கிய நீதி’ நூலில், மனிதர்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில், சில விஷயங்களை ஒருபோதும் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், அவற்றை சரியாக அணுகினால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் சாணக்கியர் கூறியதாக குறிப்பிடப்படுகிறது. அதில் முதலாவது வறுமை. ஒருவர் எந்த குடும்பத்தில் […]
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன்களான சீனாவின் லியு ஷெங் ஷு மற்றும் டான் நிங் ஜோடியை எதிர்த்து விளையாடிய இந்திய இணை, மூன்று செட்டுகள் வரை கடுமையாகப் போராடியது. எந்தவித தரவரிசையும் இன்றி களமிறங்கிய இந்திய ஜோடி, முதல் சுற்றில் உலக முதலிடமான சீன ஜோடியை […]
ஈரான் போரினால் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மோதலில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 770-ஐக் கடந்துள்ளதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போரை அமெரிக்கா தொடங்கியதிலிருந்து 18 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும், 756 பேர் காயமடைந்துள்ளனர் எனப் பென்டகனின் casualty reporting system தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா போரைத் தொடங்கிய நிலையில், தற்போது […]

