தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே 3 பேருடன் சென்ற கார், தனக்கு முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது எதிரே குமுளியில் இருந்து தேனி புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் இடித்து சாலையோர சுவற்றில் மோதியது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவத்திற்கு விரைந்து வந்த தேனி போலீசார், காரில் விபத்தில் சிக்கிய அமச்சியாபுரம் பகுதியில் […]

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கும் விவகாரம் குறித்து பல்வேறு தரப்பிலும் தொடர் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், எம்எல்ஏ-க்களுக்குக் கார் சொந்தமாக வழங்கப்படவில்லை என்றும், அது 5 ஆண்டுகாலப் பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அவையில் பலரும் மீண்டும் மீண்டும் கார் விவகாரத்தையே முதன்மைப்படுத்திப் பேசி வருவதாக குறிப்பிட்டார். இதற்கு தெளிவான விளக்கம் அளித்த அவர், அரசு […]

கர்நாடக மாநிலத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், தாவரக் கொழுப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘அனலாக் பன்னீர்’ (Analog Paneer) உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு காலத்திற்கு முழுமையான தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பிரபல ஹோட்டல்களில் கடந்த சில தினங்களாக உணவுப் பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி ஆய்வுகளில், பல […]

இன்றைய தலைமுறையில் பல பெற்றோர்கள், குழந்தைகளை கண்டிப்பதற்குப் பதிலாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அமைதியாக வழிநடத்தும் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக Millennials மற்றும் Gen Z தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்களிடையே Gentle Parenting எனப்படும் அணுகுமுறை அதிக கவனம் பெற்றுள்ளது. தாங்கள் சிறுவயதில் எதிர்கொண்ட கடுமையான அனுபவங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. ஆனால், குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பது போல இந்த அணுகுமுறை […]

குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் சில கூட்டு மருந்துகள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. Chlorpheniramine Maleate மற்றும் Phenylephrine Hydrochloride ஆகிய இரண்டு மருந்துப் பொருட்களையும் இணைத்து தயாரிக்கப்படும் அனைத்து வகையான Fixed-Dose Combination (FDC) மருந்துகளையும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மருந்துப் பொருட்களும் ஒரே மருந்தில் சேர்த்து பயன்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்படும் மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் […]

ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு புதிய கட்டண நடைமுறை கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்கிக் கணக்கில் இருக்கும் சொந்தப் பணத்தை எடுத்துக்கொள்வதற்கே கட்டணம் வசூலிப்பது ஏழை மக்களுக்கு எதிரான நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வங்கிச் சேவைகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஜீரோ பேலன்ஸ் கணக்குகள், […]

சினிமா படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில், மக்களின் அடிப்படை பிரச்சினையை நேரில் கேட்டறிந்த விஜய் அளித்த வாக்குறுதி தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக சாலை வசதியின்றி தவித்த கொடைக்கானல் அரசன் கொடை மலைக்கிராமத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடியில் இருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அரசன் கொடை கிராமம் உள்ளது. 250-க்கும் மேற்பட்ட […]

வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், பெங்களூருவில் வீட்டு உரிமையாளரே 20 வயது கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் 60 வயது வீட்டு உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு சாந்திநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயது மாணவி […]

தமிழ் திரையுலகில் திரையரங்கு வெளியீடு மற்றும் ஓடிடி ரிலீஸ் இடையிலான இடைவெளி தொடர்பான பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. தயாரிப்பாளர்களின் வருவாய், திரையரங்குகளின் நலன், ஓடிடி நிறுவனங்களின் ஒப்பந்தம் என பல்வேறு தரப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, புதிய படங்களின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்வைத்ததாக கூறப்படும் திட்டங்களில் ஒன்றாக பேசப்பட்டு வரும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளையும், அவர்களின் தாய்மார்களையும் கவுரவிக்கும் வகையில் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்துக்கான கொள்முதல் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஜூன் 22-ம் தேதி முதல் […]