வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாரா (மச்சூவாபாரா) பகுதியில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர், அவரது மனைவி, மகள் மற்றும் 12 வயது மகன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பூட்டிய வீட்டிற்குள் சந்தேகத்திற்குரிய வகையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில் காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நால்வரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர்கள் ரங்பூர் ஜில்லா பள்ளியின் ஓய்வுபெற்ற […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
‘கடன் வாங்குவதும் தவறு, கடன் கொடுப்பதும் தவறு’ என்பது முன்னோர்களின் அனுபவ மொழியாக இருந்தாலும், தற்காலப் பொருளாதார சூழலில் கடன் பெறாமல் வாழ்வது பலருக்கும் சவாலான ஒன்றாகவே மாறியுள்ளது. அவசரத் தேவைகளுக்காகப் பணத்தை மட்டுமின்றி, அன்றாட பயன்பாட்டுப் பொருட்களையும் பிறரிடம் இருந்து இரவலாகப் பெற்றுப் பயன்படுத்துவது இயல்பான பழக்கமாகிவிட்டது. எனினும், பயன்படுத்திய பின் திருப்பி ஒப்படைத்தாலும் கூட, சில குறிப்பிட்ட பொருட்களைக் கடனாக வாங்கிப் பயன்படுத்துவது கடுமையான தோஷங்களையும் எதிர்மறை […]
சிவபெருமானை நோக்கியவாறு நந்தி வீற்றிருப்பது மரபு என்றாலும், மற்ற ஆலயங்களின் வாகன அமைப்பில் இருந்து மாறுபட்டு, கோவில் நுழைவு வாசலிலும் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த ஆன்மிக மற்றும் தத்துவ முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனந்தத்தை அருள்பவராகவும், சிவகணங்களின் தலைவராகவும் போற்றப்படும் நந்தி பெருமான், சிவபெருமானின் முதன்மை வாயிற்காவலராகவும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த யோக குருவாகவும் சாஸ்திரங்களில் போற்றப்படுகிறார். சிலாத முனிவரின் தவத்தின் பயனாக யாக பூமியில் தோன்றி, தனது […]
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். தஞ்சையில் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தான் நடத்திய போராட்டத்தின்போது டம்மி முதல்வர் என விமர்சித்ததற்கு அமைதி காத்த அரசு, காவிரி விவகாரத்தில் தண்ணீர் வரவில்லை எனக் கூறியதும் கோபமடைந்து தன்னைக் கைது செய்ததாக உதயநிதி தெரிவித்தார். பின்னர் வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியதோடு, ‘உதயநிதியை கைது செய்யவில்லை; விசாரித்து அனுப்புகிறோம்’ […]
உணவுப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள், தயாரிப்பு லேபிள்கள் மற்றும் நிறுவனங்களின் விதிமுறை இணக்கத்தை தீவிரமாக கண்காணித்து வரும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பல்வேறு உணவு மற்றும் குளிர் பான நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்திய மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் உணவு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது. தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள், […]
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்பத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்படும் நகைக் கடன் தொகையை கணிசமாக உயர்த்துவதற்குத் தமிழகக் கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 1,454 நகர்ப்புற வங்கிக் கிளைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பதிவாளரின் கீழ் இயங்கும் […]
சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையில் கார் ஒன்றிலிருந்து இறங்கி வரும் இளம் பெண்ணின் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி, அது தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கீர்த்தனா என பரவலாகப் பகிரப்பட்டு வந்த நிலையில், அதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். ஒரு பெண் தனது அன்றாட வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் இயல்பான வீடியோவை வைத்து அரசியல் தளத்தில் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைப்பது, அதைச் செய்பவர்களின் பலவீனமான மற்றும் பிற்போக்குத்தனமான […]
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 23), தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மாற்றங்களால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், […]
தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதிகார மட்டத்திலான ஊழலை வேரறுக்க, சிங்கப்பூர் நாட்டை பின்பற்றி மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “சர்வதேச அளவில் சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பெருமளவிலான ஊழல் குற்றங்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் சமரசமின்றி அமல்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக் […]
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். நேரு தான் ரேஷன் அரிசியையே உணவாக உட்கொள்வதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், நடைமுறையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தகுதியற்ற முறையில் ரேஷன் அரிசி விநியோகிக்கப்படுவதாகப் பரவலான புகார்கள் எழுந்துள்ளன என அவர் குறிப்பிட்டார். இத்தகைய குறைகளைக் களைந்து, பொதுமக்களுக்கு உயர்தரமான உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்குவதற்கு முதலமைச்சர் விஜய் […]

