தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (20), மதுரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விஷ்ணுவின் சடலத்திற்கு அருகில் இருந்த ஒரு மரக்கிளையின் இலையில், “என் சாவுக்கு […]

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் நேற்றிரவு நடந்த கோர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் ஒரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நண்பர்களிடையே நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அதிவேகம் மற்றும் மது போதை காரணமாக துயரத்தில் முடிந்துள்ளது. இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற கார் […]

தங்கம், பல நூற்றாண்டுகளாக உலகளவில் செல்வத்திற்கும் பாதுகாப்பிற்கும் அடையாளமாகத் திகழும் உலோகம். அதன் தனித்துவமான பளபளப்பு, வேறு எந்த உலோகத்திற்கும் இல்லாத மதிப்பைத் தந்திருக்கிறது. குறிப்பாக, இந்தியாவைப் போன்ற ஆசிய நாடுகளில், இது சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. நாம் தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், உலகில் அதிகளவில் புதைந்துள்ள தங்க வளங்கள், எதிர்பாராத சில நாடுகளில் செறிந்துள்ளன. பூமிக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் இந்த மகத்தான […]

ஏழைகளுக்கு உதவுவதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற தாய்லாந்தின் ராணி அன்னை சிரிகிட் காலமானார்.. அவருக்கு வயது 93. நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிகி பாங்காக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது. “அவரது உடல்நிலை வெள்ளிக்கிழமை வரை மோசமடைந்தது, இரவு 9:21 மணிக்கு 93 வயதில் மருத்துவமனையில் காலமானார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்தின் தற்போதைய […]

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் தனது மகளைப் பலாத்காரம் செய்த ஓரினச்சேர்க்கை நண்பரின் ஆணுறுப்பை தந்தை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த 32 வயதான ஒரு நபர், தியோரியா மாவட்டத்தில் வாடகைக்கு எடுத்த ஒரு சிறிய அறையில், 32 வயதான ராம்பாபு யாதவ் என்பவரை தன்னுடன் சேர்த்துக் கொண்டார். இவர்களுக்கு இடையேயான நட்பு நாளடைவில் வளர்ந்து, இருவரும் ஓரினச்சேர்க்கை பார்ட்னர்களாக இணைந்து […]

திரைப்படங்கள் மற்றும் தனது விருப்பமான கார் பந்தயம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படம் ஜனரஞ்சகமாக அமையும் என்று இயக்குநர் அறிவித்துள்ளார். இதற்கிடையே, அஜித் தனது குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த ஆண்டில், மகிழ் திருமேனி இயக்கத்தில் […]

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இந்த நிலையில் தென்கிழக்கு […]

மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரி (CIA) ஜான் கிரியாகோ பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்கா ஒரு காலத்தில் கட்டுப்படுத்தியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. 15 ஆண்டுகள் CIA உடன் பணியாற்றிய கிரியாகோ, முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் ஒத்துழைப்பை பெற அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மில்லியன் கணக்கான உதவிகளை வழங்கியதாகக் கூறினார். மேலும் “நான் 2002 இல் பாகிஸ்தானில் பணியமர்த்தப்பட்ட போது, ​​என்ன நடக்கக்கூடும் என்று முஷாரப் பயந்ததால், […]