இங்கிலாந்தில் 16 வயது பள்ளி மாணவருடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரில், பிரான்வென் ஜேம்ஸ் (30) என்ற முன்னாள் உடற்கல்வி ஆசிரியை மீது நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிப்பன்ஹாமைச் சேர்ந்த பிரான்வென் ஜேம்ஸ், கடந்த 2022-ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் உள்ள பிட்டர்ன் பார்க் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு பயின்ற 16 வயது மாணவர் ஒருவருடன் அவர் தகாத உறவில் […]

இந்தியாவில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பேக்கெட் உணவுகளுக்கு முன்புறத்திலேயே எச்சரிக்கை லேபிள் ஒட்டும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் ஒரு உணவுப் பொருளில் உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளதா என்பதை நுகர்வோர் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் பேக்கெட் உணவுகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் […]

இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சர்வதேச டி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘சுஸுகி கோப்பை’க்காக நடத்தப்படும் இப்போட்டி, ஜப்பானின் தோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 22 அன்று இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்குத் தொடங்குகிறது. இந்தியா – ஜப்பான் இடையிலான […]

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (39). அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த 34 வயதுடைய பெண் ஒருவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக மாதையன் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் 16 வயது மகள் கடந்த மூன்று வாரங்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் தொடர்ந்து வீட்டிலேயே முடங்கியுள்ளார். […]

அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள புரூக் உயர்நிலைப் பள்ளியில், மாணவிகள் மற்றும் நடனக் குழுவினர் உடை மாற்றும் அறைகளில் ரகசியக் கேமராக்களைப் பொருத்திய குற்றத்திற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எரிக் ஜேம்ஸ் (53) காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் பாதுகாப்புப் பிரிவு ஊழியர் ஒருவர், பேனா வடிவிலான மர்ம பதிவுக்கருவி இருப்பதை முதலில் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த புரூக் கவுண்டி ஷெரிப் […]

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2026 போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதி கோரி மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) கடந்த செப்டம்பர் 7 அன்று வெளியிட்ட தகுதி வரம்புகள் குறித்த சுற்றறிக்கையின்படி, குறிப்பிட்ட போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் மட்டுமே தகுதிச் சுற்றில் கலந்துகொள்ள முடியும். இந்த விதியை ஒருவருக்காக மட்டும் தளர்த்த முடியாது […]

தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள சூழலில், ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் தவிர மற்ற 3 கட்சிகளும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு களப்பணியைத் […]

தமிழ் அறிஞரும், பேராசிரியர், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 90. 13,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி சாதனைப் படைத்த அவர், திருக்குறளுக்கும் உரை எழுதிய சிறப்புக்குரியவர் ஆவார். பேச்சாற்றலாலும் இயல்பான நகைச்சுவையினாலும் பட்டிமன்றக் கலையைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா. 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். குன்றக்குடி அடிகளாரின் […]

திபெத் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், இந்திய நேரப்படி அதிகாலை 4.02 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி 28.365 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 87.594 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்தது. பூமிக்கு அடியில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு […]

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரத்தீஷ் விவகாரம் தற்போது சட்டப்பேரவை விவாதத்திலும் இடம்பிடித்துள்ளது. ரத்தீஷ் பெயர் அவையில் இடம்பெற்றபோது உதயநிதி ஸ்டாலின் காட்டிய எதிர்வினையை மையமாக வைத்து ஆளும் தரப்பும் எதிர்க்கட்சியும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. சட்டப்பேரவையில் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் சில முக்கிய துறைகள் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது ரத்தீஷ் பெயர் முன்வந்துள்ளது. இந்த விவகாரத்தில் முந்தைய ஆட்சிக்கால நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ரத்தீஷ் […]