அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா, 50% வரி விதித்தது. பதிலுக்கு கனடாவும் வரி விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதலே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரிகளை விதித்து வரும் டிரம்ப், தற்போது கனடாவின் மீதும் இந்த வரி விதிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். […]

வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்தும் கொடுமை இன்னும் பல குடும்பங்களில் தொடரும் நிலையில், ஹரியானாவில் வரதட்சணையாக எஸ்யூவி கார் கேட்டு இளம்பெண்ணையும் அவரது ஒன்றரை மாத குழந்தையையும் கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டம் ராஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த சோஹில் கானுக்கும், நுஹ் மாவட்டம் சலம்பா பகுதியைச் சேர்ந்த சகுஃப்தாவுக்கும் […]

மனஅழுத்தம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. மகனின் பிடிவாதத்தை சமாதானப்படுத்தச் சென்ற பெற்றோர், அவரைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாய் பகுதியைச் சேர்ந்த முரளிதர் சந்த்குடே மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு 19 வயதில் குணால் என்ற மகன் இருந்தார். குணால் புதிய செல்போன் வாங்கித் தருமாறு […]

பாரம்பரிய இந்திய சமையலறைகளில் கறுப்பு நிறத்தில் இருக்கும் கனமான இரும்புக் கடாய், தோசைக்கல் உள்ளிட்ட பாத்திரங்களை இன்றும் அதிகம் பயன்படுத்துவதை பார்க்க முடியும். நவீன காலத்தில் நான்-ஸ்டிக் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும், இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவுக்கு தனி சுவை இருப்பதாக பலரும் கருதுகின்றனர். இதற்கு வெறும் பாரம்பரியம் மட்டுமல்ல; வெப்பம் பரவும் விதம், எண்ணெய் படலம் உருவாகும் தன்மை மற்றும் உணவுடன் இரும்பு ஏற்படுத்தும் இயற்கையான […]

ரஷ்யா-உக்ரைன் போரில் வடகொரியாவின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ரஷ்யாவுக்கு வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கி வந்த வடகொரியா, தற்போது ட்ரோன் இயக்குநர்களையும் அனுப்பியுள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் வாடிம் ஸ்கிபிட்ஸ்கி கூறிய தகவலின்படி, ரஷ்யாவில் புதிதாக சுமார் 8,500 வடகொரிய வீரர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 400 பேர் ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சி […]

கர்நாடகாவில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர்பான தனிப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பின்னணியில் சிறைக்குள் நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளும் தற்போது வெளியாகியுள்ளன. சிறையில் இருந்த ரவுடியுடன் அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருந்ததாகவும், இருவரது தொடர்பு தொடர்பான வீடியோ பதிவு தற்போது வெளியானதாகவும் போலீஸ் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், பெண் […]

சென்னையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்களை மறைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை சமையல் பாத்திரத்தில் வைத்து தடயங்களை அழிக்க முயன்றதுடன், மற்றொரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் விட்டுச் சென்ற சம்பவம் போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற […]

சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற ரயிலில் வீசப்பட்ட ரத்தக்கறை படிந்த சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆந்திரா சென்ற ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேசில் பெண்ணின் கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கிடந்ததை தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கண்ணாடி அணிந்த […]

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, மதுபோதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்த கணவனை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை கொலை செய்த பின்னர் மனைவி நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார். வாணியம்பாடி அடுத்த இளையநகரம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (43). இவரது மனைவி ரம்யா (35). தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். […]

சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எல்பிஜி இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து, பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் மூலம் இ-கேஒய்சி (e-KYC) செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே இ-கேஒய்சி முடித்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. இண்டேன் கேஸ், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் இந்த ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை தங்களது எல்பிஜி விநியோகஸ்தர் அல்லது ஏஜென்சி மூலமாக […]