நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் மற்றும் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்துவதால் ஏற்படும் சிரமங்களைப் போக்க மத்திய அரசு முக்கிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுங்கச்சாவடிகளில் நெரிசல் குறைக்கப்பட்டு, அருகில் வசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படவுள்ளது. இதற்காக, சுங்கச்சாவடிகள் அருகே வசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு டிஜிட்டல் ‘இ-பாஸ்’ (e-pass) சேவைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இத்தகைய பாஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் மீண்டும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
IRCTC-யின் உணவு சேவை விதிமுறைகளின்படி, ரயில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும். இது காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவாக இருக்கலாம்; நேரத்திற்கு ஏற்ப உணவு பரிமாறப்படும். இந்த வசதி ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். தாமதமாகும் ரயில்களில் வழங்கப்படும் உணவு விவரங்கள் பின்வருமாறு: தேநீர் அல்லது காபி சேவையின் போது, பிஸ்கட்டுகளுடன் […]
நவீன காலத்தில், பலரும் இரவு நேர தூக்கம் தொடர்பான பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எந்தவிதமான சத்தமோ அல்லது அலாரமோ இல்லாமலேயே, நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்குத் திடீரென விழிப்பு ஏற்படுவதை பலர் அனுபவிக்கிறார்கள். இது ஒன்று அல்லது இரண்டு முறை நிகழ்வது இயல்பானதாக இருந்தாலும், தினமும் இரவில் மீண்டும் மீண்டும் விழிப்பு ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தக்கூடாது. இது போதிய உறக்கமின்மையால் மட்டுமல்லாமல், சில உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளாலும் […]
தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தவெக அரசு வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கை.. தவெக அரசின் இயலாமையை மூடி மறைக்கும் யுக்தியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து தப்பிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற போது அன்றைய நிதியமைச்சர் […]
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. ஆனால் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் எம்.எல்.ஏக்கள் 5 பேர் அடுத்தடுத்து […]
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையாகி உள்ளது.. இதுகுறித்து பேசிய அவர் “ இப்போது இந்த இடைத்தேர்தல்கள் வரப்போகிறது.. இந்த இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம் இருக்கிறது.. இப்போது தானே உங்களை மக்கள் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்தனர்.. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.. டிடிவி தினகரன் கட்சியில் இருந்து குதிரை […]
கோயில் வளாகங்களில் உள்ள கடைகளில் பூஜை பொருட்களின் விலை பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.. இதுதொடர்பாக அனைத்து கோவில் நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் “ அனைத்து கோவில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜை பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.. சுத்தமான தரமான பொருட்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும்.. பூஜை பொருட்களின் விலை […]
‘ஜி-7’ (G7) நாடுகளின் தலைவர்கள் நேற்று பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் கூடினர். அப்போது முக்கியமான உலகளாவிய சவால்களை விவாதிக்கவும், உக்ரைனுக்குத் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான முக்கிய ஒப்பந்தத்தை வரவேற்றும் பேசினர்.. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையிலான ஒரு சிறிய உரையாடல் சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது; இதன் மூலம் ‘மெலோடி’ (Melodi) […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.. எனினும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.. அக்கட்சி தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.. அவருடன் முதல் கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.. பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது.. […]
ஈரான்-அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்பட உள்ளது.. ஒருபுறம், ஹார்முஸ் பகுதியில் பல மாதங்களாகத் தேங்கிக் கிடந்த எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் உரங்கள் ஏற்றிய கப்பல்கள் மீண்டும் இந்தியாவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. மறுபுறம், உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார், தனது எரிவாயு உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கத் தயாராகி வருகிறது. இது சர்வதேச […]

