தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வரும் 2036ஆம் ஆண்டிற்குள் 1.50 லட்சம் கோடி அமெரிக்க டாலராக (1.5 Trillion USD) உயர்த்தும் தொலைநோக்கு திட்டத்துடன் தமிழக அரசு பல்வேறு அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலகளாவிய தொழில் முதலீடுகளைத் தீவிரமாக ஈர்க்கும் நோக்கில், புதிய தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் 21 நாட்களுக்குள் விரைந்து வழங்குவதை உறுதிசெய்யும் புதிய சட்டத்தை இயற்ற […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகத் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகம் […]
சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் மாநாட்டில், நதிநீர் உரிமைகள், நியாயமான நிதிப்பகிர்வு, நீட் விலக்கு மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் சதீசன், தெலங்கானா துணை முதலமைச்சர் […]
சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கலந்துகொண்டு பேசினார். நதிநீர் விவகாரங்களில் மோதல் போக்கை மாற்றிவிட்டு, மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார். அரசியல் எல்லைகளை நதிகள் அறிவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், கர்நாடக அரசு மற்ற மாநிலங்களின் உரிமைகளை மதிக்கிறது என்றும், அதே நேரத்தில் கர்நாடகத்துக்கான சட்டப்பூர்வமான நீர் பங்கை […]
தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி,”தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்” என்று கூறினார். தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான். அங்கிருந்த அனைத்து விவசாயிகளையும் ஒரே இரவில் தூக்கிப்போட்டுவிட்டு தண்ணீரையும் உறிஞ்சிவிட்டு அதன் வளத்தையும் கெடுத்துவிட்டார்கள். நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி […]
அமெரிக்காவின் தேசிய கடன் சுமை வரலாறு காணாத வகையில் 40 டிரில்லியன் டாலரைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவுகள், சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு போன்ற முக்கிய சமூக நலத் திட்டங்கள் மற்றும் பெடரல் பற்றாக்குறைக்கான வட்டி செலுத்துதல் அதிகரிப்பு ஆகியவை இந்த மாபெரும் கடன் அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் இந்த […]
ஈரானுக்கு நிதி உதவி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு நிதி அல்லது தளவாட உதவிகளை வழங்கும் நாடுகள் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். ஈரான் மீதான தற்போதைய ராணுவ நடவடிக்கை, வரலாற்றிலேயே எந்தவொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கை என்று அவர் வர்ணித்துள்ளார். தான் தவிர வேறு […]
மாத சம்பளத்தில் எவ்வளவு வந்தாலும், மாத இறுதியில் பணம் எங்கே செலவானது என்றே தெரியாமல் போகிறதா? தினசரி வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை செய்யாமல், சில எளிய பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தின் தேவையற்ற செலவுகளை கணிசமாக குறைத்து, சேமிப்பை அதிகரிக்க முடியும். பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு பதிலாக முழுமையான உணவுப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் முன்கூட்டியே நறுக்கி, கழுவி பேக்கிங் செய்யப்பட்ட காய்கறிகள் வசதியாக இருந்தாலும், அவற்றுக்கு கூடுதல் விலை செலுத்த […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை, மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்திய கள்ளக்காதலன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சாலநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி குருவலட்சுமி (42). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் […]
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறைகளை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய அரசு […]

