தமிழகத்தில் தவெக அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடையும் தருவாயில், இதுவரை அரசால் செயல்படுத்தப்பட்ட முக்கியச் சாதனைகள் மற்றும் முன்னோடித் திட்டங்கள் குறித்த துறைவாரியான அறிக்கையை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதவியேற்றது முதல் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மற்றும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில், 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் திட்டங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்பவர், பல்வேறு பெயர்களில் போலியாக சமூக ஊடகக் கணக்குகளை தொடங்கி வந்துள்ளார். இதன்மூலம் முகம் தெரியாத பல ஆண்களுடன் நட்பாக பழகி, அவர்களை தனது வலையில் வீழ்த்தியுள்ளார். ஆரம்பத்தில் இனிமையாக பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் இவர், தனியறைகளில் அவர்களுடன் இருக்கும் தருணங்களை ரகசியமாகப் படம் பிடிப்பதையும், ஆபாசப் படங்களைப் பரிமாறிக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் […]
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வரும் 14ஆம் தேதி வரை சிறப்புத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மண்டல இணை ஆணையர்கள், துணை மற்றும் உதவி ஆணையர்கள், கோவில் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ➣ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அறநிலையத்துறை திருக்கோவில்களிலும் ஆகஸ்ட் 10 முதல் 14 வரை (5 […]
தமிழகத்தில் அனைத்து அரசு தொடர்பான நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக கட்டாயமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தனித்தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனோன்மணியம் சுந்தரனாரால் 1891ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘மனோன்மணியம்’ என்னும் புகழ்பெற்ற நாடக நூலில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 1970-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம், அரசு […]
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாநகர், புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், சுமார் 6 […]
நடிகரும் பாஜக மூத்த நிர்வாகியுமான சரத்குமார், தன்னை எளிதில் காண்பதற்கு ஆதரவாளர்கள் கையில் ‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தமது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆதரவாளர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய சரத்குமார், ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு நெருங்கிய பிணைப்பை உருவாக்கவும் இத்தகைய யோசனையை முன்வைப்பதாக குறிப்பிட்டார். […]
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’, இந்த ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக புதிய சாதனை படைத்துள்ளது. உலகளாவிய வசூலில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படத்தை பின்னுக்குத் தள்ளி இந்தப் படம் முதலிடத்தை பிடித்துள்ளதாக சமீபத்திய வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.312.86 […]
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த கணவர், மனைவியின் செல்போனை சோதித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படும் சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்ய மனைவி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை கணவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். மஹபூபாபாத் மாவட்டம் சிலாகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் காடே ராஜேஸ்வர் ராவ். கம்மம் பகுதியில் உள்ள தனியார் […]
காதல் உறவில் ஏற்பட்ட சந்தேகம் மற்றும் பொறாமை, இளம்பெண்ணின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்ற சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை விட்டு வேறொரு ஆணுடன் காதலி பழகுவதாக அறிந்த இளைஞர், அவரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் கரம்புடி பகுதியைச் சேர்ந்தவர் பாலா சைதுலு. சிலகலூரி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஹசீனா (24). இருவரும் […]
திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவை செயல்படாது என்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது சொந்தத் தொகுதிகளுக்குத் திரும்பியுள்ளனர். அதன்படி, அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் […]

