நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு இயற்கையாக உருவாகியுள்ள ஒரு பிரமாண்ட தடுப்பு ஏரி தற்போது நிரம்பி வழிவதாகவும், அடுத்த சில நாட்களில் அது உடையும் அபாயம் உள்ளதாகவும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சீன நீர்வள அமைச்சகத்தின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, இன்று காலை நிலவரப்படி இந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
போதைப்பொருள் பழக்கத்தைத்தடுப்பதிலும், ஆரோக்கியமான வலிமையான சமூகத்தை கட்டமைப்பதிலும் விளையாட்டுகள் மிக முக்கியப் பங்காற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேலோ இந்தியா மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர், நூற்றுக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தலைசிறந்த சாதனைகளைப் படைக்க வேண்டுமெனில், பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் நமது வீரர்கள் பரவலாக பங்கேற்க வேண்டும் என்றார். […]
மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (50) என்பவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனது மகன் ராஜாவை (30) இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த அய்யம்மாளின் மகன் ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில், அவரது தொடர் குடிப்பழக்கம் காரணமாக மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். […]
தமிழக அரசியல் களத்தில் ‘மக்கள் ஒற்றுமை கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கமால் பாஷா புதிய கட்சியின் பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ கொடியை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வில் பேசிய கட்சியின் தலைவர் கமால் பாஷா, “த.மு.மு.க. மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்துடன், பல கட்சிகளைச் சேர்ந்த […]
நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தை தொடர்ந்து பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி ஆற்றில் உருவான கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. ஆற்றின் கரையோரத்தில் இருந்த குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இதில் மாயமானவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக சரிவடைந்துள்ளது. நேற்று முன்தினம் சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ₹1,20,080-க்கு விற்பனையான தங்கம், நேற்று விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் நீடித்தது. இந்நிலையில், இன்று காலையில் சவரனுக்கு ₹560 குறைந்து ஒரு சவரன் ₹1,19,520-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹14,940-க்கும் வர்த்தகமானது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் 2-வது முறையாக தங்கம் விலை […]
கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பகட்ட வரவேற்பு சாதகமாக அமைந்துள்ளது. காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தொடக்கம் முதல் இறுதி வரை பொழுதுபோக்கு குறையாமல் நகர்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கவினின் இயல்பான நடிப்பும், நயன்தாராவின் கதாபாத்திரமும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தை பார்த்த ரசிகர்கள், கதைக்களம் முற்றிலும் புதிதானதாக […]
கடலூர் மாவட்டத்தில் கிணற்றில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், போலீசாரின் தொடர் விசாரணையில் எதிர்பாராத கொலை வழக்காக மாறியுள்ளது. 10 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த ஒருவரின் மரணம், குடும்பத்துக்குள் ஏற்பட்ட உறவு பிரச்சனையுடன் தொடர்புடையது என்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மனைவியுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபருடன் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கு காரணமானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஓரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா, […]
திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட கணவர், அவரை கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு ஒரு இளைஞர் வீட்டுக்கு வந்ததை அக்கம் பக்கத்தினர் தெரிவித்த நிலையில், திடீரென வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியையும் அந்த இளைஞரையும் ஒன்றாகப் பார்த்துள்ளார். இதையடுத்து ஏற்பட்ட தகராறு காவல்துறை புகார் வரை சென்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் சிர்கான் கிராமத்தைச் சேர்ந்த […]
பண்டிகை விளம்பரங்களில் இடம்பெறும் காட்சிகள் மற்றும் நடிகர்களின் தோற்றம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது எழுவது வழக்கம். அந்த வகையில், பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்த ரக் ஷா பந்தன் சிறப்பு விளம்பரம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த விளம்பரத்தை நகைக்கடை நிறுவனம் தற்போது அனைத்து தளங்களிலிருந்தும் நீக்கியுள்ளது. ரக் ஷா பந்தனை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் […]

