சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எல்பிஜி இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து, பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் மூலம் இ-கேஒய்சி (e-KYC) செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே இ-கேஒய்சி முடித்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. இண்டேன் கேஸ், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் இந்த ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை தங்களது எல்பிஜி விநியோகஸ்தர் அல்லது ஏஜென்சி மூலமாக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் க. சபரி ஐங்கரன். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 29-வது வயதில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான சபரி ஐங்கரன், தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக உள்ளார். கல்லூரிப் பருவத்திலிருந்தே சமூக சேவை மற்றும் அரசியல் சார்ந்த […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இன்றைய திமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, கிளைக் கழகங்கள்தான் நமது கழகத்தின் வலுவான கட்டமைப்புக்கு ஆணிவேர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக் […]
வரும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருதான ‘தேசிய நல்லாசிரியர் விருதுக்கு’ இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் இந்த இரு ஆசிரியர்களுக்கும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கௌரவமிக்க தேசிய விருதுக்கு, புளியம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் […]
2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பிறகு ஸ்பானிஷ் வீரர்களுடன் களத்தில் மோதலில் ஈடுபட்டதற்காக, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர மிட்பீல்டர் லியாண்ட்ரோ பரேடெஸுக்கு உலக கால்பந்து அமைப்பான பிஃபா 10 போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது. மேலும், அவருக்கு 90,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஆத்திரத்தில் ஸ்பெயின் வீரர்களுடன் பரேடஸ் கைகலப்பில் ஈடுபட்டதே இந்தக் கடுமையான நடவடிக்கைக்குக் காரணமாகும். இந்தச் சம்பவத்தில் பரேடஸ் […]
சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387! 101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் […]
சென்னை, தமிழ் நாட்டின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரம். 1996-ம் ஆண்டு வரை ‘மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரங்களுள் ஒன்று. இன்று, சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் சென்னையின் வாழ்வும், வரலாறும் ஆச்சர்யமானவை. சென்னை, பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள நகரம். இது, மதராசப்பட்டினம், மதராஸ், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் சிறிய கிராமமாகவே இருந்தது. […]
ஓணம் பண்டிகையை கொண்டாடச் சொந்த ஊர் செல்லும் கேரள மாநிலத்தவர்கள் வசதிக்காகச் சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமானங்களுக்குக் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. வார இறுதி விடுமுறையும் பண்டிகையும் இணைந்து வருவதால் பயணிகள் பலர் ரயில்களைத் தவிர்த்து விமானப் பயணங்களை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் வருகை திடீரென அதிகரித்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. வழக்கமான கட்டணங்களை […]
நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தியானது ஆரம்ப மதிப்பீட்டை விட சுமார் 11 சதவீதம் வரை குறையக்கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரும்பை தாக்கும் நோய்கள் மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் காரணமாக, உற்பத்தி 343 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 306 லட்சம் மெட்ரிக் டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.48.18-ஆக இருந்த சர்க்கரை விலை ரூ.55.70 ஆக உயர்ந்துள்ளது. உற்பத்தி […]
சிறு குழந்தைகள் என்றாலே முழுமையான உடல்நலத்துடன் இருப்பார்கள் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால், அரிதான சில சூழல்களில் குழந்தைகளுக்கும் திடீரென இதயத் துடிப்பு நின்று உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம். சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நேற்று முதலாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு ‘ஹார்ட் அட்டாக்’ காரணமாக இருக்கலாம் என […]

