அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகை காலத்தை ரத்து செய்ய அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்ட வரைவு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. இதன் மூலம் எச்-1பி, எல்-1 உள்ளிட்ட பல்வேறு விசாக்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது நடைமுறையிலிருக்கும் விதிகளின்படி, எச்-1பி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கிழக்கு உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கங்கை, யமுனையில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி ஓடுவதால், வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பீகாரில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கோஷி நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு […]
திருப்பூர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் வீரமாருதி தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (40). மகளிர் சுயஉதவிக் குழு தலைவியான இவருக்கு, முதல் கணவர் இறந்த பிறகு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சமையல் மாஸ்டரான விஜயபாலன் (42) என்பவருடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் திருப்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையான விஜயபாலன் தொடர்ந்து […]
26 வயது இளைஞர் ஒருவர் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரது உடலுக்குள் கருப்பை மற்றும் கருக்குழாய்களைப் போன்ற அமைப்புகள் இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. விரிவான பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு மிகவும் அரிதான Persistent Müllerian Duct Syndrome (PMDS) என்ற பிறவிக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. டெல்லியின் ராஜோரி கார்டனில் உள்ள RG Hospitals மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அந்த இளைஞருக்கு 46,XY குரோமோசோம் அமைப்பு இருப்பது […]
இங்கிலாந்தில் 16 வயது பள்ளி மாணவருடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரில், பிரான்வென் ஜேம்ஸ் (30) என்ற முன்னாள் உடற்கல்வி ஆசிரியை மீது நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிப்பன்ஹாமைச் சேர்ந்த பிரான்வென் ஜேம்ஸ், கடந்த 2022-ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் உள்ள பிட்டர்ன் பார்க் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு பயின்ற 16 வயது மாணவர் ஒருவருடன் அவர் தகாத உறவில் […]
இந்தியாவில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பேக்கெட் உணவுகளுக்கு முன்புறத்திலேயே எச்சரிக்கை லேபிள் ஒட்டும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் ஒரு உணவுப் பொருளில் உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளதா என்பதை நுகர்வோர் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் பேக்கெட் உணவுகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் […]
இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சர்வதேச டி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘சுஸுகி கோப்பை’க்காக நடத்தப்படும் இப்போட்டி, ஜப்பானின் தோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 22 அன்று இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்குத் தொடங்குகிறது. இந்தியா – ஜப்பான் இடையிலான […]
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (39). அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த 34 வயதுடைய பெண் ஒருவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக மாதையன் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் 16 வயது மகள் கடந்த மூன்று வாரங்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் தொடர்ந்து வீட்டிலேயே முடங்கியுள்ளார். […]
அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள புரூக் உயர்நிலைப் பள்ளியில், மாணவிகள் மற்றும் நடனக் குழுவினர் உடை மாற்றும் அறைகளில் ரகசியக் கேமராக்களைப் பொருத்திய குற்றத்திற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எரிக் ஜேம்ஸ் (53) காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் பாதுகாப்புப் பிரிவு ஊழியர் ஒருவர், பேனா வடிவிலான மர்ம பதிவுக்கருவி இருப்பதை முதலில் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த புரூக் கவுண்டி ஷெரிப் […]
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2026 போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதி கோரி மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) கடந்த செப்டம்பர் 7 அன்று வெளியிட்ட தகுதி வரம்புகள் குறித்த சுற்றறிக்கையின்படி, குறிப்பிட்ட போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் மட்டுமே தகுதிச் சுற்றில் கலந்துகொள்ள முடியும். இந்த விதியை ஒருவருக்காக மட்டும் தளர்த்த முடியாது […]

