உலக புகழ்பெற்ற எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான டைசன் (Dyson), வாயின் உட்பகுதியை துல்லியமாக கண்காணிக்கும் கேமரா, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மவுத்வாஷ் தெளிப்பான் வசதிகளுடன் கூடிய ‘கேமராஜெட்’ (CameraJet) என்ற அதிநவீன எலக்ட்ரிக் டூத்பிரஷை அறிமுகம் செய்துள்ளது. பாரிஸ் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனத்திற்கு அமெரிக்க மதிப்பில் 499.99 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 47,000 ரூபாய் என விலை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
முறையாக பல் துலக்காதது மற்றும் அதிகளவு இனிப்பு பண்டங்களை உண்பது போன்றவற்றால் பற்களில் பாக்டீரியாக்கள் தங்கி அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் பற்களை சிறுகச் சிறுக அரித்து கருப்பு புள்ளியாகத் தொடங்கி, நாளடைவில் பெரிய குழியாக மாறி பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. குளிர்ந்த உணவுகளை சாப்பிடும்போது பல்லில் கூச்சம் ஏற்படுவது, பற்களின் உணர்திறன் அதிகரிப்பது, இனிப்பு சாப்பிடும்போது தாங்க முடியாத வலி உண்டாவது ஆகியவை பல் சொத்தையின் முக்கிய அறிகுறிகளாகும். […]
உலகளவில் நிகழும் அதிகபட்ச உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக விளங்குவது இதய நோய்களே ஆகும். உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களே இதற்கு வழிவகுக்கின்றன. இருப்பினும், வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோவாஸ்குலர் பாதிப்புகளில் சுமார் 80 சதவீதத்தை எளிதாக தடுக்க முடியும் என்று உலக இதய கூட்டமைப்பு (WHF) சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவர் […]
ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஐபோன் அறிமுக விழா இந்த ஆண்டு நிறுவனத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அமைய உள்ளது. செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் நிகழ்வில், புதிய ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன், ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, புதிய ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்களும் இடம்பெற உள்ளன. “Surprise and Shine” என்ற பெயரில் […]
நடிகர் ரவிமோகனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவர் மீண்டும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருவரும் கோவாவில் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவிமோகன், தனது குடும்ப வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளால் கடந்த சில காலமாக செய்திகளில் இடம்பெற்று […]
மாண்டி தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாத விவகாரம், பாஜக எம்பி கங்கனா ரனாவத்தை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. பணிகளுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டும், பல திட்டங்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதிகாரிகளின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார். இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டியில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில், தொகுதியில் நடைபெற்று வரும் மத்திய அரசு திட்டங்கள் மற்றும் […]
நீதிமன்றத்தில் திருமணப் பதிவு நடைபெறவிருந்த நேரத்தில் மகளை மீட்க தாய் நேரடியாக களமிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இளைஞர் ஒருவர், வீட்டின் உரிமையாளரின் மகளுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அவரை அழைத்துச் சென்று நீதிமன்றத் திருமணம் செய்ய முயன்றதாக பெண்ணின் பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. மகள் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்த பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது […]
ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “யார் மீதும் பழிவாங்கும் நோக்கில் சும்மா பொய்யான வழக்குகளை பதிவு செய்ய முடியாது. போதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே புலனாய்வு அமைப்புகள் வழக்கு பதிவு செய்கின்றன. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அரசு பணிக்கு பணம் வாங்கி ஆள் சேர்த்த […]
கனவுகளைத் தொடர வயது ஒருபோதும் தடையாக இருக்க வேண்டியதில்லை. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்தியிருந்தாலும், மீண்டும் கற்றலைத் தொடங்குவதற்கான வாய்ப்பு எந்த வயதிலும் கிடைக்கலாம். இதற்கு அழகான உதாரணமாக மும்பையைச் சேர்ந்த ஒரு தாயின் புதிய கல்லூரி பயணம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தன்வி மல்ஹாராவின் தாய் டாக்டர் நளினி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாணவியாக கல்லூரிக்குச் சென்றுள்ளார். மகள் கல்லூரிக்குச் செல்லும் […]
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டைச் சுற்றி திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அவரது வீடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதலே தில்லைநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கே.என்.நேருவின் வீட்டுக்குள் சென்று சோதனையை தொடங்கினர். வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் வழக்கு […]

