குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த 28 வயது பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான கணவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி வெற்றிச்செல்வி, 28. இந்த தம்பதிக்கு 10 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் […]

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தி, மக்களுக்கு எளிதில் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில், அம்மாநில அரசு ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ என்ற புதிய வசதியை ராய்ப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதைப் போல, ரேஷன் அட்டைதாரர்கள் இனி மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையின்றி, 24 மணி நேரமும் தங்களுக்குத் தேவையான தானியங்களை இச்சேவை மூலம் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். சுமார் 2,500 கிலோ […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்திற்கு (FCRA) எதிராகவும் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முக்கியத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவற்றுடன் சேர்த்து, நடப்பு கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்களான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களும் இன்றைய பேரவைக் கூட்டத்தில் நடைபெறுகின்றன. மருத்துவக் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியான […]

தமிழ்நாட்டைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் உன்னத நோக்கில், “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” (Drugs Free Tamil Nadu – Mass Pledge) எனும் மாநிலம் தழுவிய மாபெரும் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் நடைபெறும் இந்த சிறப்பு வாய்ந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் […]

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் 58 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரியின் வாழ்த்துப்பாடல் முதலாவதாக பாடப்பட்டது அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதாவது, நேற்றைய தினத்தில் பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தனி தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். இந்த […]

தினமும் பயன்படுத்தும் தலையணை உறையை பலரும் கவனமாக சுத்தம் செய்வதில்லை. ஒருமுறை போட்டு விட்டால் பல நாட்கள் அல்லது வாரங்கள் வரை மாற்றாமல் பயன்படுத்தும் பழக்கமும் உள்ளது. ஆனால் தூங்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, எண்ணெய், இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்கு ஆகியவை தலையணை உறையில் படிந்து சேரலாம். குறிப்பாக முகம் மற்றும் தலைமுடியுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால், தலையணை உறை சுத்தமாக இருப்பது முக்கியம். […]

குழந்தைகளின் வளர்ச்சியில் படிப்பு, தூக்கம் மற்றும் சத்தான உணவு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தினசரி உடல் இயக்கமும் முக்கியமானது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன், டிவி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால், வெளியில் விளையாடும் நேரம் குறைந்து வருகிறது. குழந்தைகள் தினமும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர். பொதுவாக, 5 முதல் […]

சென்னையில் தெருநாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் இன்று (ஆகஸ்ட் 11) முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 2 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளும் வழங்கப்பட உள்ளன. 30 குழுக்கள் களத்தில் இறக்கம்:மாநகராட்சி சார்பில் இந்தப் பணிக்காக 30 சிறப்பு […]

இந்தியாவில் யுபிஐ தொடங்கபட்ட காலத்திலிருந்தே நுகர்வோருக்கு முற்றிலும் இலவசமாகவே வழஙகபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் ஒவ்வொரு இந்தியரும் எவ்விதமான பரிவர்த்தனை கட்டணமும் இன்றி இந்த உடனடி டிஜிட்டல் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ‘வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் மசோதா 2026’ மீதான விவாதத்தின் போது பேசிய அவர், இந்த மசோதாவானது 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகள் சட்டத்தின்’ […]

வழக்கு விசாரணை என்ற பெயரில் தனிநபர்களை அழைக்கும் போது காவல்துறை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சென்னை தி.நகரைச் சேர்ந்த ராஜா என்பவர், விசாரணை என்ற போர்வையில் காவல்துறையினர் தன்னை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில், “விசாரணை […]