உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் மஹ்மூதாபாத் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், பகலில் கணவருடனும் இரவில் காதலனுடனும் ஒரே வீட்டில் இணைந்து வாழ அனுமதி கோரி காவல் நிலையத்தில் வைத்த விசித்திரமான கோரிக்கை அங்கிருந்த போலீசாரையே நிலைகுலைய வைத்துள்ளது. சுபம் வர்மா என்பவருக்கும் அஞ்சு வர்மா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சுவிற்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நிதின் விஸ்வகர்மா என்ற வாலிபருடன் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசினார். அப்போது பேசிய அவர், “தான் ரூ.4 கோடிக்கு வீடு வாங்கியதாக பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருபவர்களுக்கு பகிரங்க சவால் விடுகிறேன். அத்தகைய வீட்டின் பத்திரத்தை யார் நேரில் கொண்டு வந்து காண்பிக்கிறார்களோ, அவர்களுக்கே அந்த வீட்டை பரிசாக முழு மனதுடன் அன்பளிப்பாக வழங்குவதாக தெரிவித்தார். தாங்கள் தீவிரமாக மக்கள் பணியாற்றுவதற்காக […]
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, திருமலையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலிஃபிளவர் சார்ந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. சமீபத்தில் உணவகங்களுக்குக் கொண்டுவரப்பட்ட காலிஃபிளவர்களில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் எவ்வித சுகாதாரக் குறைபாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கோபி மஞ்சூரியன், […]
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 23-ஆம் தேதி) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 45 ரன்களிலும், ராகுல் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து […]
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனை குறித்து சிறப்புப் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக இன்று (ஆகஸ்ட் 24) பெய்ஜிங் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. செப்டம்பர் 12, 13 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் […]
வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாரா (மச்சூவாபாரா) பகுதியில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர், அவரது மனைவி, மகள் மற்றும் 12 வயது மகன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பூட்டிய வீட்டிற்குள் சந்தேகத்திற்குரிய வகையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில் காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நால்வரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர்கள் ரங்பூர் ஜில்லா பள்ளியின் ஓய்வுபெற்ற […]
‘கடன் வாங்குவதும் தவறு, கடன் கொடுப்பதும் தவறு’ என்பது முன்னோர்களின் அனுபவ மொழியாக இருந்தாலும், தற்காலப் பொருளாதார சூழலில் கடன் பெறாமல் வாழ்வது பலருக்கும் சவாலான ஒன்றாகவே மாறியுள்ளது. அவசரத் தேவைகளுக்காகப் பணத்தை மட்டுமின்றி, அன்றாட பயன்பாட்டுப் பொருட்களையும் பிறரிடம் இருந்து இரவலாகப் பெற்றுப் பயன்படுத்துவது இயல்பான பழக்கமாகிவிட்டது. எனினும், பயன்படுத்திய பின் திருப்பி ஒப்படைத்தாலும் கூட, சில குறிப்பிட்ட பொருட்களைக் கடனாக வாங்கிப் பயன்படுத்துவது கடுமையான தோஷங்களையும் எதிர்மறை […]
சிவபெருமானை நோக்கியவாறு நந்தி வீற்றிருப்பது மரபு என்றாலும், மற்ற ஆலயங்களின் வாகன அமைப்பில் இருந்து மாறுபட்டு, கோவில் நுழைவு வாசலிலும் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த ஆன்மிக மற்றும் தத்துவ முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனந்தத்தை அருள்பவராகவும், சிவகணங்களின் தலைவராகவும் போற்றப்படும் நந்தி பெருமான், சிவபெருமானின் முதன்மை வாயிற்காவலராகவும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த யோக குருவாகவும் சாஸ்திரங்களில் போற்றப்படுகிறார். சிலாத முனிவரின் தவத்தின் பயனாக யாக பூமியில் தோன்றி, தனது […]
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். தஞ்சையில் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தான் நடத்திய போராட்டத்தின்போது டம்மி முதல்வர் என விமர்சித்ததற்கு அமைதி காத்த அரசு, காவிரி விவகாரத்தில் தண்ணீர் வரவில்லை எனக் கூறியதும் கோபமடைந்து தன்னைக் கைது செய்ததாக உதயநிதி தெரிவித்தார். பின்னர் வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியதோடு, ‘உதயநிதியை கைது செய்யவில்லை; விசாரித்து அனுப்புகிறோம்’ […]
உணவுப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள், தயாரிப்பு லேபிள்கள் மற்றும் நிறுவனங்களின் விதிமுறை இணக்கத்தை தீவிரமாக கண்காணித்து வரும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பல்வேறு உணவு மற்றும் குளிர் பான நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்திய மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் உணவு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது. தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள், […]

