காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவைக் கண்டித்து, கன்னட அமைப்புகள் வியாழக்கிழமை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த பந்த் போராட்ட அறிவிப்பு இருந்தாலும், கர்நாடகா முழுவதும் பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவைகள் வழக்கம்போலவே இயங்கி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை அன்று ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஒன்றிய பிரதேசத்தில் நான்கு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்த இரண்டாவது நிலநடுக்கம் காலை 9.54 மணியளவில் ஏற்பட்டது. இது வடக்கே 36.765 அட்சரேகையிலும், […]
தாய்லாந்தில் இருந்து கடந்த 4ம் தேதி டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 8 பணிப்பெண்கள் உட்பட, 145 பேர் பயணித்தனர். விமானம் நடு வானில் பறந்த போது, திடீரென பயங்கரமாக குலுங்கியது. அது பறந்து கொண்டிருந்த உயரத்தில் இருந்து திடீரென பல அடி தாழ்வாக பறந்ததால், பயணிகள் பீதி அடைந்தனர். பணிப் பெண்கள் சிலர், விமானத்திற்குள் இருந்த பயணிகள் மீது தடுமாறி விழுந்ததில், 17 பேர் […]
வீட்டில் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் பிரஷர் குக்கரை சுத்தமாக கழுவினாலும், அதன் மூடியில் இருக்கும் ரப்பர் கேஸ்கட்டை (Gasket) பலர் கவனிக்காமல் விட்டுவிடுவதாக ஆரோக்கிய வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சிறிய ரப்பர் வளையத்தை சரியாக பராமரிக்கத் தவறினால், அதுவே பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். பொதுவாக குக்கரை பயன்படுத்திய பிறகு, இந்த ரப்பர் வளையத்தின் அடியில் எண்ணெய் பிசுக்கு, சிறிய அளவிலான உணவுத் துகள்கள் மற்றும் ஈரப்பதம் […]
தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வடகொரியா குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாகப் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தென்கொரியக் கூட்டுப் படைத் தலைமைத் தளபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வோன்சான் நகரிலிருந்து காலை 6 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. சுமார் 700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பறந்து […]
உலகிலேயே காதலின் ஆகச்சிறந்த அடையாளமாக பார்க்கப்படும் தாஜ்மஹாலை மாதிரியாகக் கொண்டு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவிக்காக 4 படுக்கையறை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் பிரகாஷ் சௌக்சி என்பவரால் கட்டப்பட்ட இந்த வீட்டின் அழகையும், அதன் பின்னணியில் உள்ள காதலையும் விவரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அசல் தாஜ்மஹாலைப் போலவே […]
மழை பெய்யும் நாட்களில் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தாலும், ஜன்னல் கண்ணாடி மட்டும் ஈரமாகி தண்ணீர் வழிவது பலருக்கும் தலைவலியாக இருக்கும். குறிப்பாக இந்த ஈரம் ஜன்னல் சட்டத்தில் நீண்ட நேரம் இருந்தால், மரம் மற்றும் சுவர் பகுதிகளில் சேதம் ஏற்படுவதோடு பூஞ்சையும் உருவாகலாம். இதற்காக பெரிய செலவு செய்யாமல் வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய ஒரு எளிய வழியாக ஸ்டீல் கரண்டி தந்திரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதலில் தெரிந்துகொள்ள […]
மூச்சை எவ்வளவு நேரம் அடக்கி வைத்திருக்க முடிகிறது என்பதை கொண்டு ஒருவரின் நுரையீரல் ஆரோக்கியத்தை முழுமையாக மதிப்பிட முடியாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, ஒருவர் நீண்ட நேரம் மூச்சை அடக்கும் போது நுரையீரலின் திறன் சிறப்பாக இருப்பதாக பலரும் தவறாக கருதுகின்றனர். ஆனால், மூச்சை அடக்கும் தருணத்தில் உடலுக்குள் முற்றிலும் வேறு விதமான உடலியல் மாற்றங்களே நிகழ்கின்றன. நாம் மூச்சை அடக்கிய உடனேயே, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை […]
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கப் போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் தடையை “இரும்புச் சுவர்” என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதற்கு எதிராக ஈரானால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். ஈரானின் ராணுவ […]
அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி மறைந்ததைத் தொடர்ந்து கால்பந்து விளையாட்டு உலகிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் இழப்பிற்குப் பிறகு விளையாட்டுக்கு சிறிது காலம் இடைவெளி விட்டுள்ள மெஸ்ஸி, தனது எதிர்காலம் குறித்தும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தைக்கு அஞ்சலி செலுத்திப் பதிவிட்டுள்ள மெஸ்ஸி, “அப்பா, நீங்கள் எங்களை விட்டுப் […]

