இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. லண்டன் ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர், ஸ்டான்ஸ்டெட் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஏராளமான விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவையை வழங்கும் NATS நிறுவனத்தின் விமானச் செயலாக்க அமைப்பில் கோளாறு ஏற்பட்டதே இதற்கு காரணம். இதையடுத்து லண்டன் விமானத் தகவல் மண்டலத்தில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி போட அழைத்துச் செல்லப்பட்ட 2 வயது பெண் குழந்தை, ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு தவறான தடுப்பூசி செலுத்தப்பட்டதே மரணத்துக்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியதுடன், மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அவரது தந்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். தடுப்பூசி […]
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த 53 வயது நபர், வேலைக்கு வந்த கல்லூரி மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையில், கடையில் ஏற்கனவே பணியாற்றிய 4 பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். திங்கள் நகரில் ‘அன்னை வேளாங்கன்னி எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் பர்னிச்சர் கடை […]
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட தங்குமிட வசதிகள் குறித்து பிசிசிஐ அதிகாரிகளிடையே திருப்தியின்மை நிலவி வந்தது. இந்தியாவைப் போலவே வேறு சில நாடுகளும் இது குறித்து கவலை தெரிவித்தன. இருப்பினும், விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தங்குமிடம் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளில் தாங்கள் திருப்தியடைந்துள்ளதாகவும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் […]
“இன்னும் 4 ஆண்டுகள்தான்?” என்ற கேள்வியை எழுப்பும் வகையில், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, AI துறையில் பணியாற்றியவர்களே அதன் அதிவேக வளர்ச்சி குறித்து வெளிப்படையாக கவலை தெரிவிப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. AI பாதுகாப்பு துறையில் பணியாற்றிய Anthropic நிறுவனத்தின் ஆய்வாளர் ஜேக்கப் காக்ஸன் (Jacob Coxon), நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியதுடன், AI வளர்ச்சியின் தற்போதைய போக்கு குறித்து கடுமையான எச்சரிக்கையையும் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. அண்ணன் பிண்டுவை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது தம்பி ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிண்டு (35), தனது மனைவி பிரபாவதி (30), நான்கு குழந்தைகள் மற்றும் தம்பி ராஜேஷ் (20) ஆகியோருடன் தேன்கனிக்கோட்டை அருகே ஜார்க்கலட்டி கிராமத்தில் உள்ள பூந்தோட்டத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து […]
அமெரிக்கா – ஈரான் இடையிலான ராணுவ மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானைச் சேர்ந்த 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கி செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படைக் கப்பலை […]
கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தபடி, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியைப் பற்றிய சுவாரசியமான கருத்தை சட்டப்பேரவையில் முன்வைத்துள்ளார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் பேசப்பட்டும் நிறைவேற்ற முடியாமல் போன சில முக்கிய பணிகள், தற்போது விஜய் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளில் உரையாற்றிய பிரபாகர், தமிழகத்தின் முக்கியமான தேவைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் எடுத்த […]
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் காசர்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. 70 வயதான அண்ணன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரை இழந்த வேதனையில் இருந்த தம்பிக்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்படாஜே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட உப்ரன்கலா பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண பட் (70). அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது […]
வீட்டில் செய்யும் குழம்புக்கும், உணவகத்தில் பரிமாறப்படும் குழம்புக்கும் சுவையில் ஏன் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? அந்த சுவைக்கு எந்த ஒரு ரகசியப் பொருளும் காரணம் இல்லை. வெங்காயத்தை சரியாக வதக்குவது முதல் மசாலாவை பொறுமையாக சமைப்பது, தண்ணீரின் அளவை சரியாகக் கையாள்வது வரை ஒவ்வொரு சமையல் முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தச் சிறிய நுட்பங்களை சரியாகப் பின்பற்றினால், வீட்டிலேயே உணவக பாணியில் மணமும் சுவையும் நிறைந்த […]

