மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் காலணிகள் நனையக்கூடாது என்பதற்காக, முதியவர் ஒருவரின் முதுகில் ஏறி சென்ற வருவாய் அதிகாரி, இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அரசு அதிகாரி மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் உள்ள மாதா கிராம பஞ்சாயத்து பகுதியில் கள ஆய்வுக்கு சென்ற வருவாய் அதிகாரி நிலேஷ்நம்தேவ் என்பவர் தண்ணீர் தேங்கியிருந்த […]

சருமத்தில் முகப்பரு, வறட்சி, எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்படுகிறதா? இதற்கு வெளிப்புறமாக பயன்படுத்தும் கிரீம்கள், சீரம்கள் மட்டுமே காரணத்தை தீர்க்காது. தினசரி உணவுப் பழக்கம், போதுமான தண்ணீர் குடிப்பது, சூரிய ஒளியில் செலவிடும் நேரம் உள்ளிட்ட பல விஷயங்களும் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது சருமத்தில் அழற்சி, முகப்பரு போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கலாம். அதே […]

தமிழ்நாட்டில் மக்கள் உட்கொள்ளும் உப்பின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து, உப்பின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மாநில உத்தி வகுக்கப்படும் என்றும், மக்களின் உண்மையான உப்பு உட்கொள்ளல் அளவைக் கண்டறிய மாநிலம் தழுவிய அளவில் சிறுநீர் மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 1.8 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் […]

சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட விநாடிகள் மூச்சை அடக்கி பிடித்தால் நுரையீரல் பலமாக இருப்பதாக கூறப்படும் காணொளிகள் வைரலாகி வரும் சூழலில், மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வயது வந்த நபர் ஒருவர் நிமிடத்திற்கு 12 முதல் 20 முறை சுவாசிப்பதே இயல்பானது. சமூக ஊடகங்களில் காட்டுவது போல அதிக நேரம் மூச்சை அடக்குவது நுரையீரலின் திறனை மேம்படுத்தாது; மாறாக, உடலில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பதை மூளை தாங்கிக்கொள்ளும் திறனை மட்டுமே […]

மண்ணைத் தொடுவது, புல்வெளியில் அமர்வது, மரப்பட்டைகளை தொட்டுப் பார்ப்பது போன்ற எளிய இயற்கை சார்ந்த செயல்பாடுகள் நமது தோலின் ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் கணிசமாகப் பலப்படுத்துவதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பின்லாந்து சுற்றுச்சூழல் நிறுவன ஆய்வாளர் மீரா க்ரோன்ரூஸ் நடத்திய பரிசோதனையில், மண் மற்றும் பாசியை வெறும் 20 விநாடிகள் கைகளில் தேய்த்தவர்களின் தோலில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் பல்வகை தன்மை (Microbiome diversity) அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. […]

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து வருவதால், அடுத்த பத்தாண்டுகளுக்குள் அது ஒட்டுமொத்த மனித இனத்தையே பூண்டோடு அழிப்பதற்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளர் இவான் ஹுபிங்கர் எச்சரித்துள்ளார். தற்போதைய மாடல்களால் ஆபத்து குறைவு என்றாலும், எதிர்காலத்தில் மனிதக் கட்டுப்பாட்டை மீறித் தானாகவே மேம்படும் ஏஐ அமைப்புகள் பேரழிவை உண்டாக்கக்கூடும் என்ற அவரது பதிவு உலகளவில் பெரும் விவாதத்தைக் […]

இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்.13 ஆகிய தேதிகளில்) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் மற்றும் சுமார் 1,300 சர்வதேசச் செய்தியாளர்களுக்கு, இந்தியப் பாரம்பரியத்தையும் கைவினைப் பொருட்களையும் பறைசாற்றும் வகையில் 9 சிறப்புப் பொருட்கள் அடங்கிய அன்புப் பரிசுப் பை வழங்கப்படுகிறது. இந்த சிறப்புப் பையில் இந்தியாவின் உணவுப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், […]

அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகை காலத்தை ரத்து செய்ய அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்ட வரைவு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. இதன் மூலம் எச்-1பி, எல்-1 உள்ளிட்ட பல்வேறு விசாக்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது நடைமுறையிலிருக்கும் விதிகளின்படி, எச்-1பி […]

வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கிழக்கு உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கங்கை, யமுனையில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி ஓடுவதால், வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பீகாரில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கோஷி நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு […]

திருப்பூர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் வீரமாருதி தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (40). மகளிர் சுயஉதவிக் குழு தலைவியான இவருக்கு, முதல் கணவர் இறந்த பிறகு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சமையல் மாஸ்டரான விஜயபாலன் (42) என்பவருடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் திருப்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையான விஜயபாலன் தொடர்ந்து […]