குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு, சிட்னியில் உள்ள வேவர்லி உள்ளூர் நீதிமன்றம் 1,500 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.01 லட்சம்) அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர் ஒரு வருடத்திற்கு வாகனத்தில் பிரீதத்லைசர் லாக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறை நாட்களில், சோதனைச் சாவடிக்கு அருகில் தனது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற என். இளையராஜாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், இளையராஜாவின் எம்.எல்.ஏ. பதவிக்கு எதிராக தொடரப்பட்டிருந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட இளையராஜா வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியைச் சேர்ந்த […]
உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இயற்கைப் பேரிடர்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகின்றன. சில நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் பெரும் சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் புயல், கனமழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் பல மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் எதிர்பாராத அளவுக்கு கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமாவளவன் மேடைக்கு வந்தபோது அவரை நெருங்குவதற்காக தொண்டர்கள் ஒரே நேரத்தில் முன்வந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவரது உரையும் முழுமையாக நடைபெறவில்லை. மாநாட்டுக்காக காலை முதலே தொண்டர்கள் உளுந்தூர்பேட்டையில் திரண்டனர். மாலை திருமாவளவன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தபோது, அவரை வரவேற்கவும் சந்திக்கவும் […]
ரயில் நிலையங்களில் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்குவதற்குக் கூடுதல் செலவு செய்ய முடியாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பயணிகள் பலரும், அங்கு இலவசமாக வழங்கப்படும் குடிநீரையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்த தண்ணீரின் தரம் குறித்த ஆய்வில் ‘ஈ-கோலி’ பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகளுக்கு வாட்டர் கூலர்கள் மூலம் […]
முதல் திருமணத்தை சட்டப்படி முடிக்காமல் மற்றொரு திருமணம் செய்வதால், பல குடும்பங்களில் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க அசாம் அரசு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அசாம் அரசு பணியில் இருக்கும் ஒருவர், தனது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அவரது சம்பளத்தில் இருந்து 20 சதவீத தொகையை பிடித்தம் செய்து […]
சுதந்திர தினத்துக்கு முன்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஷெசாத் பட்டி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை தொடர்புகொண்டு, அவர்களை தனது குழுவில் இணைத்து வந்துள்ளார். வெளிநாடுகளில் வசித்து வரும் அவர், சமூக வலைதளங்களில் தன்னை […]
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 பேர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இரு மாநிலங்களுக்கு இடையேயான பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் காட்டமாகத் தெரிவித்துள்ளார். சாமராஜநகர் துப்பாக்கிச் சூடு […]
உத்தரப் பிரதேசத்தில் ஒரு விரைவு நீதிமன்ற நீதிபதி, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 22 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. பல்வேறு கொலை வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளித்து வரும் முஷாபர்நகர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரவிகுமார் திவாகரின் இந்த நடவடிக்கை தற்போது பேசுபொருளாகியுள்ளது. 46 வயதான ரவிகுமார் திவாகர், உத்தரப் பிரதேசத்தின் முஷாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கெனவே பல முக்கிய […]
Mac கணினிகளை பயன்படுத்தி வருபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. Mac-ன் Screen Sharing வசதியில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் சில சாதனங்களில் அத்துமீறி நுழைந்து தீங்கிழைக்கும் மென்பொருட்களை நிறுவியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், Mac பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பிரச்சினை, Mac-ல் மற்றொரு சாதனத்திலிருந்து கணினியின் திரையை அணுக […]

