யுபிஐ (UPI) மற்றும் ரூபே (RuPay) டெபிட் கார்டுகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ரூ.2,000 வரையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று சேவை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுபிஐ அல்லது ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மக்கள் ரூ.2,000 அல்லது அதற்கும் குறைவாக மேற்கொள்ளும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளோ அல்லது நிதி அமைப்புகளோ நேரடியாகவோ, […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உலக அளவில் புகழ்பெற்ற முன்னணி மென்பொருள் மற்றும் கிளவுட் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்யும் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது ஐடி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 6 மணியளவில் நிறுவனத்தின் மேலாண்மைப் பிரிவிலிருந்து பாதிக்கப்பட்ட ஊழியர்களின் மின்னஞ்சலுக்கு, “இன்றே உங்களுடைய கடைசி வேலை நாள்” என்ற ஒரு வரிச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விடுக்கப்பட்ட இந்த அதிரடி அறிவிப்பால் […]
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த சின்னமாயாகுளம் கிராமம் அருகே உள்ள காட்டு கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் இன்று காலை இரண்டு உடல்கள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இருவரும் மூக்கு மற்றும் கண்களில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக ஏர்வாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் ஏர்வாடி போலீஸார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் சம்பவ […]
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வீரா (எ) வீர முத்துகிருஷ்ணன் (26). பாஸ்ட் புட் கடை நடத்தி வந்த இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கபெருமாள் கோவில் அருகே ஆகாஷ் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து ஏரிக்கரையில் புதைத்த வழக்கில் இவர் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நீதிமன்ற வழக்கு தொடர்பாக இன்று […]
ஒரு நட்பு தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், அது பொதுவெளியில் பேசப்படும் அளவுக்கு சென்றுவிட்டால் அதற்கான பொறுப்பும் அதிகரிக்கிறது. குறிப்பாக சினிமாவையும் தாண்டி மக்கள் கவனிக்கும் இடத்தில் இருப்பவர்கள் தங்களது உறவுகளை கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை. இதையே நடிகை அம்பிகா, விஜய் – த்ரிஷா நட்பு தொடர்பான கேள்விக்கு பதிலாக சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு அரசியல் மற்றும் சினிமா விவகாரங்கள் குறித்து பேசிய அம்பிகாவிடம், விஜய் மற்றும் […]
PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, Claim எங்கே வந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. உறுப்பினர்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கும் வகையில் EPFO, WhatsApp-ஐ மையமாகக் கொண்டு புதிய டிஜிட்டல் சேவைகளை கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் சேமநல நிதி அமைப்பான EPFO, தற்போது அதிகாரப்பூர்வ WhatsApp Channel-ஐ தொடங்கியுள்ளது. EPFO தொடர்பான முக்கிய அறிவிப்புகள், சேவை சார்ந்த தகவல்கள் உள்ளிட்டவற்றை உறுப்பினர்களும் ஓய்வூதியதாரர்களும் இந்த […]
UPI மூலம் பணம் செலுத்தும் கோடிக்கணக்கான மக்களுக்கு முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கும், RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. 2007-ம் ஆண்டு Payment and Settlement Systems Act-ன் 10A பிரிவின் […]
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் வாக்கு எண்ணிக்கையைப் பார்த்த வேட்பாளர்களுக்கே அதிர்ச்சி காத்திருந்தது. பாஜக வேட்பாளர் ஒருவருக்கு வெறும் ஒரு வாக்கு மட்டுமே கிடைத்த நிலையில், மற்றொரு வேட்பாளருக்கு ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதில், தனது வாக்கும் குடும்பத்தினரின் வாக்குகளும் கூட காணவில்லை என ஒரு வேட்பாளர் புகார் அளிக்க முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட 10,245 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் […]
விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்றாலே விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை நினைவுக்கு வருவது வழக்கம். வீடுகளில் பல்வேறு சுவைகளில் கொழுக்கட்டை தயாரித்து விநாயகருக்குப் படையலிட்டு, பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது இந்த பண்டிகையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டு வழக்கமான கொழுக்கட்டைகளைத் தாண்டி, தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை ஒன்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள […]
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை விலகும் காலகட்டத்தில் வானிலை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் சுமார் 20 மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனுடன் மின்னல் […]

