ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலர், போன் பழுதானாலும் அல்லது புதிய போன் வாங்கினாலும் பழைய சார்ஜர்களை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். “சார்ஜ் ஆகுதே, பிரச்சினை என்ன?” என்று நினைப்பது சாதாரணம். ஆனால், பழைய அல்லது சேதமடைந்த சார்ஜர்களை நீண்ட காலம் பயன்படுத்துவது போன் மட்டுமல்ல, உங்கள் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 1. பேட்டரியின் ஆயுள் குறையலாம் ஒவ்வொரு போனுக்கும் அதற்கேற்ற மின்னழுத்தம் (Voltage) மற்றும் மின்னோட்டம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களில் ஒன்று ஃப்ரிட்ஜ். உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படும் ஃப்ரிட்ஜின் மேல் பகுதியை பலர் கூடுதல் சேமிப்பு இடமாக பயன்படுத்துகின்றனர். பாத்திரங்கள், மசாலா பொருட்கள், மருந்துகள் என பல பொருட்களை அதன் மேல் வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், சில பொருட்களை ஃப்ரிட்ஜ் மேல் வைப்பது அதன் தரத்தையும், வீட்டின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும். 1. மருந்துகள் சிலர் மாத்திரைகள், சிரப் பாட்டில்கள் போன்ற மருந்துகளை […]
கடந்த 2025ஆம் ஆண்டு கரூரில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதையும் உலுக்கிய இச்சம்பவம் குறித்து தற்போது சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை சமீபத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் […]
சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மீது தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கறிஞர் திருஞானசம்பந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் விதிகள் படி, வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் அறக்கட்டளை தொடர்புகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். ஆனால், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், திமுக அறக்கட்டளை பற்றிய தகவல்களை வேட்புமனுவில் […]
அரசுப் போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 2024ம் ஆண்டு பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. சமீப காலமாக வினாத்தாள் கட்சி விவகாரம் பூதாகரமாகி வந்த நிலையில், இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட திருத்த மசோதா லோக்சபாவில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் இச்சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்தப் போவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற இக்கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் கோழி உற்பத்தியாளர்களின் நடைமுறைகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வழக்கமாகச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் கறிகோழிகளுக்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பது முக்கிய நெறிமுறையாகும். ஆனால், உற்பத்தியாளர்கள் இந்த விதியைப் […]
தண்ணீரின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் வீணாகும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியமாகியுள்ளது. குறிப்பாக ஏர் கண்டிஷனரில் (ஏசி) இருந்து தினமும் வெளியேறும் தண்ணீரை பலரும் கழிவு நீர் என்று நினைத்து வீணாக்கி விடுகிறார்கள். ஆனால், அதை சரியான முறையில் பயன்படுத்தினால் வீட்டின் அன்றாட தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இந்த தண்ணீரை குடிப்பதற்கோ அல்லது சமையலுக்கோ பயன்படுத்தக் கூடாது […]
இன்றைய காலத்தில் வயது, வசதி அல்லது சூழ்நிலையை காரணம் காட்டி பலர் முயற்சியை கைவிடுகிறார்கள். ஆனால், வெற்றி என்பது வயதைப் பொறுத்தது அல்ல; மன உறுதியையும் உழைப்பையும் பொறுத்தது என்பதை சிலர் தங்கள் வாழ்க்கையால் நிரூபித்துக் காட்டுகிறார்கள். கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து உழைத்தால் வாழ்க்கையில் உயர முடியும் என்ற மிகப்பெரிய பாடத்தை, 76 வயதிலும் தனது உழைப்பால் வாழ்ந்து வரும் ஒரு பாட்டி அனைவருக்கும் உணர்த்தி வருகிறார். […]
திரையுலகில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் பல நடிகைகள் தங்களது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால், பெண்கள் தைரியமாக கருத்து தெரிவித்தாலே அவர்களை குறிவைத்து அவதூறு கருத்துகள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இழிவான விமர்சனங்கள் பதிவிடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களை மட்டும் குற்றம் சாட்டும் மனநிலை மாற வேண்டும் என்றும் நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டியில் தனது கருத்துகளை […]
கள்ளத்தொடர்பு, குடும்பத் தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை போன்றவை இன்று பல குடும்பங்களின் அமைதியை சீர்குலைத்து வருகின்றன. பெரியவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளின் விளைவுகளை, எந்தத் தவறும் செய்யாத குழந்தைகள் பலியாகும் அவலங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது. அந்த வகையில் தேனியில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னத்தம்பியின் மகன்கள் ஸ்ரீஹரிஷ் (11), சபரீஷ் (10). […]

