தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. இதில் அப்பாவி பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், மற்றொரு புறம் பெண்களே தங்களுக்குநடக்கும் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கின்றனர். இதற்கு உதாரணமாக, சென்னையில் ஒரே நாளில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 25 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் வேலை […]

பணம் தர மறுத்த மனைவி மற்றும் மகள்கள் மீது நபர் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 65 வயதான செல்வராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு 60 வயதான விஜயலெட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 38 வயதான மேனகா என்ற மகளும், 25 வயதான மவுனிகா என்ற மகளும் உள்ளனர். மேனகா தனது கணவருடன் ஏற்பட்ட […]

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், இல்லாதூர் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான நிரோஷா. இவரது கணவர் திருவள்ளூர் மாவட்டம் மணவூரைச் சேர்ந்த 36 வயதான கார்த்திக். இருவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், இவர்களுக்கு தற்போது 10 வயதான மகன் மற்றும் 6 வயதான மகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு […]

மதிய உணவிற்கு எளிமையாகவும், குறைந்த நேரத்திலேயே சுவையான ஒரு குழம்பை செய்ய நினைத்தால், சௌ சௌ வைத்து இந்த பொரிச்ச குழம்பை செய்து பார்க்கலாம். வழக்கமாக சௌ சௌவை சாம்பார் அல்லது பொரியலாக மட்டுமே செய்வவர்கள், இந்த வித்தியாசமான ரெசிபியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். சூடான சாதம் மட்டுமல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடனும் இந்த குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த ரெசிபியை செய்வதற்கு தேவையான பொருட்கள்: […]

இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெரும்பாலான வீடுகளில் அரிசியை கழுவியவுடன் நேரடியாக குக்கர் அல்லது ரைஸ் குக்கரில் சமைக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. ஆனால், பழைய தலைமுறையினர் அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகே சமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இது வெறும் பாரம்பரிய பழக்கம் மட்டுமல்லாமல், உணவின் தரத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்த உதவும் ஒரு நடைமுறையாகவும் கருதப்படுகிறது. அரிசியை ஊறவைக்கும் போது அதன் தானியங்களில் இயற்கையாகவே சில மாற்றங்கள் […]

மழைக்காலம் தொடங்கியவுடன் இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் காட்சிகளில் ஒன்று மயில் தோகையை விரித்து ஆடுவதுதான். பலரும் மழை பெய்யப்போகிறது என்ற மகிழ்ச்சியால் மயில்கள் நடனமாடுகின்றன என்று நினைத்தாலும், உண்மையில் அதற்கு இயற்கை மற்றும் உயிரியல் சார்ந்த பல காரணங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக பருவமழை தொடங்கும் காலத்தில்தான் மயில்களின் இனப்பெருக்க பருவமும் ஆரம்பமாகிறது. இந்த நேரத்தில் ஆண் மயில்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவற்றின் […]

கடுமையான வெயில், காற்று மாசுபாடு மற்றும் தூசி போன்ற காரணங்களால் சருமம் அதன் இயற்கையான பொலிவை இழப்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு முகம் கருமையாகத் தோன்றுதல், எண்ணெய் பசை அதிகரித்தல், பருக்கள் வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சருமத்திற்கு போதுமான பராமரிப்பு அளிப்பது அவசியம். பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் சருமம் சற்று தடிமனாகவும், […]

பின்னணி பாடகர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இசைக்குயில் எஸ். ஜானகி. பல தசாப்தங்களாக இந்திய திரையிசையில் தனது இனிமையான குரலாலும், அபாரமான பாடும் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்த அவர், பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். அவரது இசைப் பயணத்தைப் போலவே, பாடும் முறைகள் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் அவ்வப்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன. எஸ். ஜானகி பல மொழிகளில் […]

சென்னை பல்லாவரம் பச்சையப்பன் தெருவில் வாடகைக்கு வீடு விடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி, 56 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பல்லாவரம் பச்சையப்பன் தெருவில், வாடகைக்கு வீடு தேடி புதிய நபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அருகருகே வசித்து வந்த இரண்டு வீட்டு உரிமையாளர்களும் தங்களது வீட்டை […]

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த பெண், மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தபோது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் 34 வயதான லட்சுமி. இவர் வழக்கம் போல், இன்று காலை தனது வீட்டின் […]