இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடியது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், பிரதமருக்கு அருகில் நின்று தேசியக் கொடியேற்ற உதவிய பெண் ராணுவ அதிகாரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்தப் பெண் ராணுவ அதிகாரியின் பெயர் கேப்டன் சோனியா சிங் சவுகான் என்பதாகும். இவர் நாடு முழுவதும் இணையத்தில் அதிக அளவில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மனித வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியும் தீராத கடன் சுமைகளும் ஒருவரது மன அமைதியை சீர்குலைத்து, நிம்மதியை இழக்க செய்யும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. இத்தகைய இன்னல்களில் இருந்து மீள்வதற்கும், இக்கட்டான சூழலை எதிர்கொள்ள தேவையான மன வலிமையை பெறுவதற்கும் ஆன்மீக ரீதியாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் என்பது இந்து சமய நம்பிக்கையாகும். குறிப்பாக, ஆன்மீக செம்மல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் அருளப்பட்ட எளிய துதிப் […]
தமிழ் பஞ்சாங்கத்தின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளை கொண்ட ஒரு மங்கலகரமான மாதமாக கருதப்படுகிறது. நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமாகவும், தடைகளை தகர்க்கும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் மாதமாகவும் இது திகழ்கிறது. அத்துடன், காயத்ரி ஜெபம் உள்ளிட்ட இறை வழிபாடுகளுக்கு உகந்த இந்த […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் திமுகவை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்தும் நோக்கில், கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தலைமை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக வரும் 22-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள திமுக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. தேர்தல் கள நிலவரங்கள், தோல்விக்கான காரணங்கள் மற்றும் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு […]
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபுளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 5.58 […]
டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்வின் போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. சில வரிகள் மட்டுமே பாட வேண்டும் என பாடகர்களுக்கு காங்கிரஸ் தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் இசை குழுவினர் முழு பாடலையும் பாடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் பாடலை நிறுத்துமாறு கையசைத்துள்ளனர். எனினும் பாடல் முழுமையாக பாடி முடிக்கப்பட்டது இது தொடர்பான […]
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர தமிழகப் பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் […]
சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்துள்ள தலைப்பாகைகள் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. ராஜஸ்தானி பாந்தனி, லெஹரியா ஸ்டைல்கள் மற்றும் மூவர்ண வடிவங்கள் என 2014 முதல் 2026 வரை அவர் அணிந்த தலைப்பாகைகளின் சிறப்பம்சங்களின் தொகுப்பு இதோ. 2026-ஆம் ஆண்டு தனது 13-வது தொடர் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற […]
சென்னையில் கழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் தமிழக டி.ஜி.பி.க்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், மனவேதனை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். […]
அருணாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 5 ராணுவ வீரர்கள் உள்பட பலர் மாயமாகியுள்ளனர்; இந்த பேரிடரில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை மற்றும் கடுமையான நீர் தேக்கத்தையும் பொருட்படுத்தாமல், அண்டை முாம்களில் இருந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் […]

