தமிழக அரசில் அடுத்தடுத்து நிகழும் அமைச்சரவை மாற்றங்கள் அரசியல் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், K.A. செங்கோட்டையனின் இலாகா மீண்டும் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையை கவனித்து வரும் அவருக்கு, பள்ளிக்கல்வித்துறை மீண்டும் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவெக ஆட்சி தொடங்கியபோது செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் பொறுப்பில் நீடிக்காமல், முதல்வர் விஜய்யிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து வருவாய் மற்றும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நவி மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் (6E 225 – VT-NOG), தரையிறங்கி நிறுத்தும் இடத்தில் உள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 9:02 மணியளவில், விமானம் ‘பே எண் 06’ (Bay No. 06) பகுதியில் நிறுத்தப்படும்போது இந்த விபத்து நிகழ்ந்தது. விமானம், ‘விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம்’ (VDGS) என்ற வழிகாட்டும் கம்பத்தின் மீது […]
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் 12 பேர், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் பஜ்ரா அறுவடைப் பணிக்காக வேனில் சென்றுகொண்டிருந்தனர். வியாழக்கிழமை அதிகாலை குண்ட்லி–மானேசர்–பலவல் (KMP) விரைவுச்சாலையில், கற்கோடா அருகே IMT பகுதியில் அவர்கள் சென்ற ஈகோ வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். வியாழக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பிலிபிட் மாவட்டம் […]
ஒரு காலத்தில் இந்திய குடும்பங்களில் அதிகம் அறியப்படாத ‘அவகேடோ’ பழம், தற்போது சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள் மற்றும் மக்களின் உணவு மேஜைகளில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. ஆரம்பத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பரப் பழமாகக் கருதப்பட்ட இது, தற்போது இந்தியாவின் ஆரோக்கியமான உணவு முறையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளதுடன், இந்திய விவசாயிகளாலும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு […]
காயம் காரணமாக இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா 2026 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இதனால், நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஈட்டி எறிதல் அணியில் அவருக்குப் பதிலாக யஷ்வீர் சிங் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யஷ்வீர் சிங், கடந்த ஜூலை மாதம் கிளாஸ்கோவில் 85.41 மீட்டர் தூரம் வீசி தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மீண்டும் ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நள்ளிரவு 2:55 மணியளவில் இந்த ராக்கெட் ஏவப்பட்டது. பலத்த மழைக்கு மத்தியிலும், 51.7 மீட்டர் உயரமும் 420 டன் எடையும் கொண்ட ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட், நள்ளிரவு வானத்தைப் பிளந்துகொண்டு கம்பீரமாக விண்ணை நோக்கிப் […]
துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை T20 போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையை படைத்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜின் (10,868 ரன்கள்) சாதனையை முறியடித்து, தனது […]
கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாளான கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீஜென்மாஷ்டமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணையும் வேளையில் கிருஷ்ணர் அவதரித்தார் என்பது ஐதீகம். வழக்கமாக இந்த இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது அரிது என்றாலும், இந்த ஆண்டு அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் பல மணி நேரம் ஒன்றாக இணைந்து வெள்ளிக்கிழமையில் அமைவது கூடுதல் விஷேசமாக […]
மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில், எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த புனித தினமே கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் பக்தர்களால் விரதமிருந்து போற்றி வழிபடப்படுகிறது. இத்திருநாளில் நாம் வைக்கும் வழிபாட்டின் மூலமாக, சாட்சாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணரே நமது இல்லங்களுக்கு நேரில் வருகை தந்து அருள்பாலிப்பதாக ஐதீகம் நிலவுகிறது. குறிப்பாக, மழலைச் செல்வம் இல்லாத தம்பதியினர் இந்நாளில் மனமுருகி விரதமிருந்து கண்ணனை […]
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை, விஷ்ணுவின் அவதார நாயகனான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமாக நாடெங்கும் மிகுந்த பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் அதர்மங்கள் தலைதூக்கி, தீய சக்திகளின் ஆதிக்கம் பெருகும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும் நல்லோரை காக்கவும் தான் யுகம்தோறும் அவதரிப்பதாக பகவத் கீதையில் கண்ணன் அருளிய வாக்கின்படி, தீமைகளை அழித்து நன்மைகளை துளிர்க்கச் செய்த புனித நாளாக இந்நாள் போற்றப்படுகிறது. பக்தர்கள் […]

