ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு மற்றும் நிதித் துறை சார்ந்த பல்வேறு முக்கிய விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். அந்த வகையில், பிறக்கவிருக்கும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ரயில்வே முன்பதிவு, வருமான வரி தாக்கல், சமையல் எரிவாயு விலை மற்றும் வங்கிச் சேவைகள் எனப் பல துறைகளில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை முறையிலும், மாதாந்திர குடும்ப வரவு செலவுத் […]

டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (ஜூலை 29) தீவிர சோதனை நடத்தினர். இந்த சூழலில் டாஸ்மாக் நிறுவன முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீதான எப்.ஐ.ஆர் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சென்ற திமுக ஆட்சியின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் புதிய ஊதிய மேட்ரிக்ஸ் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புதிய ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor) எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது அனைவரது மத்தியிலும் பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தைப் புதிய ஊதியக் குழுவின் நிலைக்கு உயர்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட பெருக்கல் அளவீடே இந்த […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி நியமன ஆணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து […]

தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகர்களாக வலம் வருபவர்கள் அரசியலில் களம் காண்பதும், அது குறித்த விவாதங்கள் எழுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமும், முதல்வர் மற்றும் தவெக தலைவருமான விஜய்யின் ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட், முன்னணி நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்து கூறியுள்ள கணிப்புகள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனியார் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில், […]

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, வழக்கம்போல் பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா பகுதியில் ஆவடி மாநகராட்சி சார்பில் இன்று சிற்றுண்டி வழங்கப்பட்டது. அப்போது, பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சாம்பாரில் உயிரிழந்த நிலையில் பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு, உணவருந்தி கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள்ளாகவே, அந்த உணவை உணவகம் மற்றும் விநியோக இடத்திலேயே பல ஊழியர்கள் உட்கொண்டிருந்ததால், உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்காக ஆவடி அரசு […]

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளராக வடிவேல் இராவணன் மற்றும் பொருளாளராக திலகபாமா ஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் தமிழக நலன் மற்றும் கட்சி வளர்ச்சி சார்ந்த மொத்தம் 31 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், மருத்துவர் ஐயாவின் கொள்கைகளை வென்றெடுத்து 2031-ஆம் ஆண்டில் பாமக ஆட்சியை அமைப்பதே […]

தமிழகத்தில் உள்ள சுமார் 37,595 அரசுப் பள்ளிகளில் பயிலும் 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மதிய உணவுத் திட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தற்போதைய சூழலில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இலவச மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தக்காளி […]

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூலை 29ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 […]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை மோதலால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ‘அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு’வை தொடங்கி, மீண்டும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்த போதிலும், எடப்பாடி பழனிசாமி அதற்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைக்க முன்வந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே […]