தமிழகத்தின் காவிரி நீர் உரிமைகளை நிலைநாட்ட தவறியதோடு, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக கூறி தவெக அரசை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுமார் 14 லட்சம் விவசாயிகள் வரை ரூ.2,500 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு ஆடிப்பூர திருவிழா வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பக்தர்களின் வசதிக்காகவும் திருவிழா சிறப்பான முறையில் நடைபெறவும், ஆகஸ்ட் 14 அன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் மாவட்டத்தில் இயங்கும் […]
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிடக் கோரும் விவகாரத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்கு நாள்தோறும் உரியப் பங்கீட்டு நீரைத் திறந்துவிட வேண்டும் எனக்கூறி, காவிரி ஒழுங்காற்றுக் குழு ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது. இருப்பினும், கர்நாடக அரசு வழக்கம் போல் நீர் திறக்க மறுப்பு தெரிவித்து வந்ததோடு, மேகதாது அணை விவகாரத்தையும் மீண்டும் கையில் எடுத்துப் பிரச்சனையை […]
நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு, தேசிய கீதத்திற்கு இணையான உயர்ந்த அந்தஸ்தை வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு மத்தியிலும், ஆளுங்கட்சியின் பெரும்பான்மையுடன் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய மசோதாவின்படி, ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலை […]
தமிழக அரசியலில் மேகதாது அணை விவகாரம் மீண்டும் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளும் த.வெ.க அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. மேகதாது விவகாரத்தில் திமுக முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”மேகதாது அணை விவகாரமானது கடந்த 2026 மே 10-ஆம் தேதிக்குப் பிறகுதான் தொடங்கியது என்பதைப் போல திமுக தலைமை பேசி […]
திரைத்துறையில் திறமையை விட சில நேரங்களில் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்ற வார்த்தையே அதிகம் பேசப்படுவதாக பல நடிகைகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். காலம் மாறினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும், பெண்களுக்கு எதிரான இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்ற ஆதங்கமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சீரியல் நடிகை ரேஷ்மா தனது ஆரம்பகால சினிமா அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய ரேஷ்மா, நடிப்பு வாய்ப்புகளைத் தேடி […]
இன்றைய காலத்தில் குழந்தைகளை ஒரு நிமிடம் கூட கண்காணிக்காமல் விடுவது ஆபத்தானதாக மாறியுள்ளது. வீட்டு வாசல், தெரு அல்லது அருகிலுள்ள பகுதி என எங்கு விளையாடினாலும், குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சிறிய கவனக்குறைவு கூட குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறலாம். அதனை உணர்த்தும் வகையில், 4 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் […]
போதைப்பொருள் விற்பனையாளர்கள், காவல்துறையிடம் சிக்காமல் இருக்க நாளுக்கு நாள் புதிய யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், ஆசிரியர் பணியில் இருந்த இரண்டு பெண்கள் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற சிறப்பு சோதனையை மேற்கொண்டனர். அந்த நடவடிக்கையின்போது ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சர்வசிக்ஷா […]
கள்ளக்காதல் என்பது ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, பலரது வாழ்க்கையையும் சீரழிக்கும் ஆபத்தான பாதையாக மாறி வருகிறது. சமூக வலைதளங்களில் உருவாகும் சில உறவுகள், நம்பிக்கை இழப்பு, மோதல் மற்றும் வன்முறையாக மாறி உயிரிழப்புக்கே வழிவகுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. ஈரோடு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான வினோதினி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யாவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் […]
திருமணம் என்பது இரு குடும்பங்களை இணைக்கும் புனித பந்தமாகக் கருதப்பட்டாலும், இன்றைய நவீன சமூகத்திலும் வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களின் முன்னேற்றம் என சமூகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்தாலும், வரதட்சணை தொடர்பான மனஅழுத்தம் மற்றும் குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சோக சம்பவமாக, திருப்பூர் மாவட்டத்தில் 32 வயது பெண் உயிரிழந்தது […]

