இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பலருக்கும் பெரும் கவலையை தரும் விஷயமாக மாறியுள்ளது. உடல் எடையை குறைக்க ஜிம், கடுமையான உடற்பயிற்சிகள் எனப் பலரும் மல்லுக்கட்டி வரும் நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 38 கிலோ எடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைப்பது குறித்துப் பேசிய குஷ்பு, “எடையைக் குறைப்பது எளிது, ஆனால் அந்த எடையைத் தக்கவைப்பதுதான் சவாலானது” என்கிறார். இதற்காக […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், மதிமுகவில் இருந்து பிரிந்து திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள மல்லை சத்யா, தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டத்தில், வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வைகோ மற்றும் துரை வைகோ […]

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், சமர்லகோட்டா மண்டலத்தில் உள்ள வெட்லபலேம் என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் பலர் படுகாயமடைந்தனர்.. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. வெடிவிபத்து குறித்து […]

இந்தியா மற்றும் இலங்கையில் 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு ஐபிஎல் திருவிழாவை நோக்கி திரும்பியுள்ளது. மார்ச் மாதம் பிறந்தாலே ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொள்ளும் சூழலில், இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை எப்போது வெளியாகும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களே, இந்த அட்டவணை தாமதத்திற்கு முக்கியக் […]

ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.. இந்த செய்தி நேற்று முதல் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனுவால் அவரது அரசியல் எதிர்காலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பெரும் அடி விழுந்துள்ளது. 2021 முதல் தானும் விஜய்யும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விஜய்க்கு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததகவும் சங்கீதா பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.. மேலும் இந்த […]

அமெரிக்கா, ஈரானில் “பெரும் போர்செயல்களை” தொடங்கியுள்ளதாக டொனால் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில், குறிப்பாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அலுவலகங்கள் அருகே பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த தாக்குதலை இஸ்ரேல் “முன்னெச்சரிக்கை தாக்குதல்” என்று விளக்கம் அளித்துள்ளது… ஈரான் மக்களுக்கு டிரம்ப் நேரடி அழைப்பு ஈரான் […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இன்று முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவுரை, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், இஸ்ரேல் அரசின் […]