வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார்.. தாரிக் ரஹ்மான் தலைமையில், பங்களாதேஷ் தேசிய கட்சி ( Bangladesh Nationalist Party BNP)யைச் சேர்ந்த வெற்றி பெற்ற எம்.பி.க்களும் செவ்வாய்க்கிழமை டாக்காவில் உள்ள தேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றனர். இந்த நிகழ்வு, நாட்டின் அரசியல் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்தப் பதவியேற்பு விழா, பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற 13-வது பாராளுமன்றத் தேர்தலில் […]

தமிழக சட்டமன்ற தேர்தலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக, எந்த அணியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தகவல்களின்படி, தேமுதிக மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இரு தரப்பிற்கும் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமாகவும், அதேசமயம் சுமூகமாகவும் முடிந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் நகர்வுக்கு அச்சாரமாக அமைந்தது, கோவையில் அண்மையில் […]

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்புத் துறை நிறுவனம் (BSNL), 2026 ஆம் ஆண்டிற்கான 120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி (SET) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன, மார்ச் 7 ஆம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலியிட விவரங்கள் மொத்த பதவிகள்: 120 தொலைத்தொடர்புத் துறை: 95 நிதித் துறை: 25 சம்பளம் : ரூ.24,900 – ரூ.50,500 வரை. முக்கிய தகவல் பணியமர்த்தல் நிறுவனம்: […]

ஆரோக்கியம் குறித்த தேடல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனைகளை விட, அனுபவம் என்ற பெயரில் பகிரப்படும் சமூக வலைதளக் குறிப்புகளே பலரையும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், “காலையில் ஒரு குவளை வெந்நீர் குடித்தால் நூற்றுக்கணக்கான நோய்கள் ஓடிவிடும்” என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், வெந்நீர் குடிப்பதன் மூலம் உடல் பருமனை அடியோடு குறைத்துவிடலாம் என்பதற்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் எதுவுமில்லை என்று […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் […]

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தை சார்ந்து இல்லாமல், பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்பதற்கு இந்த புதிய புள்ளிவிவரங்களே சாட்சி. ஒரு மாநிலத்தின் உண்மையான செழிப்பை அங்குள்ள மக்களின் தலா வருமானமே தீர்மானிக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் டாப் 5 பணக்கார மாவட்டங்களின் பட்டியல் பல ஆச்சரியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியாவின் பின்னலாடை தலைநகரான திருப்பூர். ‘டாலர் […]

2000களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர் பிரதியுஷா.. அவர் விஜயகாந்துடன் தவசி, முரளி உடன் மனுநீதி ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல் பூக்கள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.. நடிகை பிரதியுஷாவும் சித்தார்த் ரெட்ட்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.. ஆனால் இவர்களின் காதலுக்கு சித்தார்த் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.. இதனால் கடந்த 2002-ம் ஆண்டு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து […]

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்குமார் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இந்த பட்ஜெட் என்பது தமிழக மக்களின் தேவைகளை நிறைவு செய்வதைவிட, ஆளுங்கட்சியின் தற்பெருமைகளை பாடும் அறிக்கையாகவே உள்ளதாக அவர் சாடினார். திமுக அரசின் இந்த இறுதி பட்ஜெட்டில் முதலமைச்சரை பாராட்டு மழையில் நனைய வைத்ததை தவிர, உருப்படியான […]

இன்றைய தலைமுறை இளைஞர்களின் மிகப்பெரிய கனவு, அறுபது வயது வரை ஓயாமல் உழைக்காமல், சீக்கிரமே ‘நிதி சுதந்திரத்தை’ (Financial Freedom) அடைந்து நிம்மதியாக ஓய்வெடுப்பதுதான். இதற்காக பலரும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களைத் தேடி வரும் நிலையில், ’20-20 முதலீட்டுத் திட்டம்’ என்பது ஒரு வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ளது. 20 ஆண்டுகள் பொறுமையுடன் முதலீடு செய்து, அடுத்த 20 ஆண்டுகள் கைநிறைய வருமானத்தைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இது ஒரு […]

இந்திய வங்கித் துறையில் வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, உடனடி பணப் பரிமாற்ற முறையான ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் பான் கார்டு (PAN Card) தொடர்பான விதிகளில் அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரு கட்டங்களாக அமலுக்கு வர உள்ளன. முதற்கட்டமாக, […]