ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூர் இன்று சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானில் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பாக்பூர், முன்னாள் தளபதி ஹுசேன் சலாமி கொல்லப்பட்ட பின்னர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் சுமார் 260 நாட்கள் ஐஆர்ஜிசி தளபதியாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம், முகமது பாக்பூர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை “எந்தவித தவறான […]

கொல்கத்தாவில் 47 வயது பெண் ஒருவர், தனது 22 வயது மகனுடன் கைகோர்த்து செல்வந்தர் ஒருவரை திட்டமிட்டு ஏமாற்றிய அதிர்ச்சி தரும் “ஹனி ட்ராப்” (Honey Trap) சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்த மாலதி சர்க்கார் என்ற அந்தப் பெண், தனது இளமைத் தோற்றத்தை மூலதனமாக வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். மாலதியின் மகன் அர்ஜுன், தனது ஜிம் நண்பரான ராகேஷ் மேத்தா மூலம் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விரிசல், தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 27 ஆண்டுகால தம்பதியினரின் இந்த மணமுறிவு முடிவிற்கு, விஜய்யின் தனிப்பட்ட செயல்பாடுகளே காரணம் என அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சங்கீதா தாக்கல் செய்துள்ள […]

மத்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கை, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரும் நிம்மதியை தரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, சொத்து பரிவர்த்தனைகளின் போது பான் (PAN) எண் விவரங்களை குறிப்பிடுவதில் நிலவி வந்த சில நடைமுறை சிக்கல்களை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பான் கார்டு கட்டாயம் : தற்போதைய சட்டப்படி, ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீடு போன்ற அசையா […]

ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தில், பெற்றோர் கட்டாயப்படுத்தி நடத்தி வைத்த திருமணம், முதலிரவு அறையிலேயே விவாகரத்தில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மிதிலேஷ் குமாரி, தான் ஒரு இளைஞரை காதலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், மகளின் காதலை ஏற்க மறுத்த பெற்றோர், அவருக்கு தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் திருமணத்தை உறுதி செய்தனர். தனக்கு இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பமில்லை […]

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பலருக்கும் பெரும் கவலையை தரும் விஷயமாக மாறியுள்ளது. உடல் எடையை குறைக்க ஜிம், கடுமையான உடற்பயிற்சிகள் எனப் பலரும் மல்லுக்கட்டி வரும் நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 38 கிலோ எடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைப்பது குறித்துப் பேசிய குஷ்பு, “எடையைக் குறைப்பது எளிது, ஆனால் அந்த எடையைத் தக்கவைப்பதுதான் சவாலானது” என்கிறார். இதற்காக […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், மதிமுகவில் இருந்து பிரிந்து திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள மல்லை சத்யா, தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டத்தில், வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வைகோ மற்றும் துரை வைகோ […]

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், சமர்லகோட்டா மண்டலத்தில் உள்ள வெட்லபலேம் என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் பலர் படுகாயமடைந்தனர்.. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. வெடிவிபத்து குறித்து […]

இந்தியா மற்றும் இலங்கையில் 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு ஐபிஎல் திருவிழாவை நோக்கி திரும்பியுள்ளது. மார்ச் மாதம் பிறந்தாலே ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொள்ளும் சூழலில், இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை எப்போது வெளியாகும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களே, இந்த அட்டவணை தாமதத்திற்கு முக்கியக் […]