கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.. இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பண மோசடி குற்றச்சாடின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.. எனினும் அவர்கள் மீது வழக்குத்தொடர மாநில அரசு அனுமதி […]

இக்காலத்தில், பலரும் உடலுழைப்பு குறைவான வேலைகளையும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையையும் கொண்டுள்ளனர். இதனால், அதிக கொலஸ்ட்ரால் (கொழுப்பு) பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உடலில் LDL எனப்படும் ‘கெட்ட கொலஸ்ட்ரால்’ அதிகரிப்பது ரத்த நாளங்களில் அது படிவதற்கும், அதன் விளைவாக இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். இதற்காகப் பலர் மருந்துகளைச் சார்ந்திருக்கின்றனர். இருப்பினும், வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் […]

பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள கே. அண்ணாமலை செய்திகளில் முக்கிய இடம்பிடித்துள்ள நிலையில், அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இன்று லட்சக்கணக்கான மக்களால் அறியப்படும் பெயருடன் அவர் பிறக்கவில்லை. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையின் உண்மையான பெயர், ‘சிவ செந்தில் குமார்’ என்பது.. எனினும் அவர் பொது வாழ்க்கையில் நுழைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பள்ளிப் பருவத்திலேயே […]

எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெறுவது கடினமாகிவிடுமா? மனித இனத்தின் இருப்பே ஆபத்தில் உள்ளதா? ஆம், என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக், உண்ணும் உணவில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் மாறிவரும் காலநிலை ஆகியவை நம்மை மெளனமாக அழித்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதே இதற்குச் சான்றாகும். இப்போது அதே அச்சுறுத்தல் மனிதர்களையும் வந்தடைந்துள்ளது. நமக்குச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஆபத்தான வேதிப்பொருட்கள் உள்ளன. இவை நம் […]

தற்போது, ​​UPI பரிவர்த்தனைகளின் பெருக்கத்தால் ஏடிஎம் (ATM) பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் ஏடிஎம் இயக்குபவர்களுக்குச் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளன, மேலும் அவர்கள் ஏடிஎம்களில் பணத்தை நிரப்புவதைத் தவிர்த்து வருகின்றனர். இது ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை இப்படியே தொடர்ந்தால், வரும் நாட்களில் ஏடிஎம் சேவைகள் நிறுத்தப்படக்கூடும்.UPI வசதி வந்த பிறகும், பலர் இன்னும் ஏடிஎம்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள். […]

திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றும், வெறும் சில நாட்கள் மனைவியுடன் பேசாமல் இருந்ததற்காக மட்டும் ஒரு கணவரை குற்றவாளியாகக் கருத முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. மேலும் மனைவியைக் கொடுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 498A-ன் கீழ் விசாரணை நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தால் அந்தத் தீர்ப்பு […]