திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனலட்சுமி. இருவரும் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். இவர்களது மகள் பூவரசி, வயது 21, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இன்று காலை பழனிசாமி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டு வந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் அருண் முன்மொழிந்தார். நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அப்போது, நீட் தேர்வு முறைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு […]
சென்னையில் பொதுமக்களின் இணைய பயன்பாட்டை எளிதாக்கும் வகையில், 44 இடங்களில் இலவச வைபை (WiFi) சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இலவச வைபை (WiFi) வசதி 10.08.2026 முதல் மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய பகுதிகளில் இலவச வைபை (WiFi) வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முதற்கட்டமாக, மெரினா […]
மேற்கு கொலம்பியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 130க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத்தின்தகவல்படி, இந்த நிலநடுக்கம் 107 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் அதிர்வுகள் அண்டை நாடான ஈக்வடாரிலும் உணரப்பட்டன. கொலம்பிய […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியக் கிடாக்கறி விருந்துத் திருவிழா நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெண்களுக்கு அனுமதியின்றி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டது சிறப்பம்சமாகும். நத்தம் அருகே உள்ள பாதசிறுகுடி பொன்னர் சங்கர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் இந்த வினோத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழாவில், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்திய 101 ஆடுகள் சுவாமிக்குப் பலியிடப்பட்டன. […]
திமுக அரசின் திட்டங்களே பட்ஜெட்டில் இருப்பதாக கூறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு, இடம் மாறியதற்காக இவ்வளவு துதி பாட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 5 அன்றும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 அன்று வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் […]
அன்புக்குரிய ஒருவர் உயிரிழந்த பிறகு, அவரை கனவில் காண்பது போன்ற அனுபவங்களை சிலர் தங்களது துக்கத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வது உண்டு. ஆனால், இதுபோன்ற நம்பிக்கைகள் தீவிரமான மனவேதனையுடன் இணைந்தால் எதிர்பாராத விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு ஆந்திராவில் நடந்துள்ள சம்பவம் சோகமான உதாரணமாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜநகரம் அருகே உள்ள பத்துங்க பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் ராவ் (32). மாற்றுத்திறனாளியான இவருக்கும், அதேபோல் மாற்றுத்திறனாளியான சியாமளா […]
செல்லப்பிராணிகள் மீது பிரபலங்கள் பலரும் தனி அன்பு காட்டுவது வழக்கம். அந்த வகையில், செல்லப் பூனையை ஆசையாக வளர்த்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசன், உடல்நலப் பிரச்னை காரணமாக அதனை அதன் பழைய உரிமையாளரிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்புடன் பாடலிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தமிழ், […]
இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் வேகமாக அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள நாடாளுமன்றக் குழு, இதற்கான காரணங்களைக் கண்டறிய நாடு தழுவிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 177-வது அறிக்கையில், சிறுநீரக நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வெப்ப அழுத்தம், தொடர்ச்சியான நீர்ச்சத்து குறைபாடு, பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, அசுத்தமான […]
காரில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் டிராலி பேக்கில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு தலைமறைவானதாகக் கூறப்படும் பெண்ணின் காதலனைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சோடிகுமாரிக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரிஷப்குமாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் […]

