தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் கீழ்மட்ட வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 2) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கட்சியின் பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் தேசியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை அவர் டெல்லி சென்றிருந்தார். அங்கு தங்கியிருந்த சூழலில், நேற்று அதிகாலையில் அவருக்குத் திடீரெனத் தலைச்சுற்றல் […]

வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் வெளிநாட்டு வகை விலங்குகள் மற்றும் பறவைகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என மாநில வனத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மைக்காலமாக மக்காவ், பஞ்சவர்ணக் கிளி போன்ற அரிய வகை பறவைகள் மற்றும் லீமர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வனவிலங்குகளை வீடுகளில் வளர்ப்பதும், வணிக ரீதியாக விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இவற்றை தங்களின் வீடுகளில் வளர்த்து வரும் உரிமையாளர்களும், விற்பனை செய்யும் வியாபாரிகளும் தங்கள் […]

நேபாளத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் போது, திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில் பணியாற்றிய 265 தொழிலாளர்களை ஆபத்தில் தவிக்கவிட்டு சீன மேற்பார்வையாளர் ஒருவர் தப்பி சென்றதாகத் தப்பிய தொழிலாளி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சுரங்கப்பாதையில் நிலவிய பீதி: சுரங்கப்பாதை எண் 3-ல் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராஜ் சேத்ரி என்ற தொழிலாளி பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், பேரழிவு ஏற்பட்டபோது சுமார் 265 […]

2029 மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்று தவெக மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக விஜய் ஆதரிப்பார் என்ற காங்கிரஸின் கூற்றை தவெக நிராகரித்துள்ளது. டெல்லி தீர்மானிக்காது; தமிழகமே தீர்மானிக்கும்: இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற தவெக எம்.எல்.ஏ. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் பதவி குறித்த முடிவை […]

ரஷ்யாவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில், தன்னைத் தள்ளிய வாடிக்கையாளரை மனிதவடிவ ரோபோ ஒன்று பதிலுக்கு எட்டி உதைத்து தாக்க முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த வீடியோவில், கருப்பு நிற டி-சர்ட் அணிந்த நபர் ஒருவர், கடையில் நின்றிருந்த ரோபோவை அணுகி அதை தள்ளுகிறார். உடனடியாக அந்த ரோபோ தனது காலை அசைத்து, அவரை எட்டி உதைப்பது போல பதிலடி கொடுக்க முயல்கிறது. தொடர்ந்து […]

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது பகவான் கிருஷ்ணரின் திருவுருவச் சிலைகளிலும் படங்களிலும் கையில் புல்லாங்குழலும், கிரீடத்தில் மயில் இறகு அலங்கரிக்கப்படுவது வழக்கம். கிருஷ்ணரின் முதன்மை அடையாளமாக மாறியுள்ள இந்த மயிலிறகின் பின்னணியில் பல ஆன்மீகக் கருத்துகளும் சுவாரசியமான கதைகளும் அடங்கியுள்ளன. மயிலிறகின் பின்னணியில் உள்ள கதைகள்: பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் புல்லாங்குழல் இசைத்தபோது, அந்த இசையில் மயங்கிய மயில்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடின. இசை நின்றதும், மயில்களின் ராஜா தன் […]

இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்த இளைஞரின் மோசடி, அவரது செல்போன் ஆய்வுக்குப் பிறகு மேலும் அதிர்ச்சியான திருப்பத்தை சந்தித்துள்ளது. வேலைக்காக அணுகிய பெண்களுடன் நெருக்கமாக பழகியதுடன், அவர்களின் ஆபாச வீடியோக்களையும் செல்போனில் வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா படிகர். டிப்ளமோ படித்த இவர், பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் அதிகாரியாக பணியாற்றுவது போன்ற போலியான அடையாளத்தை இன்ஸ்டாகிராமில் உருவாக்கினார். […]

உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை, திடீர் வெள்ளம், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உத்தரப் பிரதேச அரசு தீவிரப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பாதிப்புக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் […]

ஆந்திரப் பிரதேசத்தில் மலேரியா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட குளோரோக்வின் மாத்திரைகளை உட்கொண்ட பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதில், 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போலவரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மலேரியா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக அப்பகுதி மக்களுக்கு குளோரோக்வின் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாத்திரைகளை உட்கொண்ட சிலருக்கு அடுத்தடுத்து உடல்நலப் […]