வீட்டில் செய்யும் குழம்புக்கும், உணவகத்தில் பரிமாறப்படும் குழம்புக்கும் சுவையில் ஏன் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? அந்த சுவைக்கு எந்த ஒரு ரகசியப் பொருளும் காரணம் இல்லை. வெங்காயத்தை சரியாக வதக்குவது முதல் மசாலாவை பொறுமையாக சமைப்பது, தண்ணீரின் அளவை சரியாகக் கையாள்வது வரை ஒவ்வொரு சமையல் முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தச் சிறிய நுட்பங்களை சரியாகப் பின்பற்றினால், வீட்டிலேயே உணவக பாணியில் மணமும் சுவையும் நிறைந்த […]

அரசியல் தலைவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அமைச்சரவைக் கொண்ட இந்த நாட்டில், தற்போது இந்த ஊதிய உயர்வு 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அடிப்படை ஆண்டுச் சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து (1.7 மில்லியன் அமெரிக்க டாலர்) 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக (27 […]

பிரிட்டனின் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான (NATS) விமானச் செயலாக்க முறைமையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லண்டன் ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமானப் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, இங்கிலாந்து முழுவதும் 625 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஈசிஜெட் நிறுவனத்தின் 218 விமானங்களும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் 132 விமானங்களும் மற்றும் பல்வேறு […]

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸ் (5 இடங்கள்), விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அரசை அமைத்தது. இந்நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (செப். 9) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் […]

பெருவெள்ளத்தால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகத்திலிருந்து மீண்டு வரும் நேபாள நாட்டில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை இரவு 9:38 மணியளவில் பதிவானது. காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 196 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 143 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாள-சீனா எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாகத் திரிசூலி பள்ளத்தாக்கில் […]

குழந்தை பிறந்த பிறகு, பால் கொடுப்பது முதல் குழந்தையை தூங்க வைப்பது வரை ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோருக்கு பல சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக பால் குடித்த பிறகு குழந்தை அழுவது, உடலை நெளிப்பது அல்லது அமைதியின்றி இருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பால் குடிக்கும் போது குழந்தையின் வயிற்றுக்குள் செல்லும் காற்றும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், பால் கொடுத்த பிறகு குழந்தையை ஏப்பம் விடச் […]

டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலரும், முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவருமான ராகேஷ் மேத்தா ஐ.ஏ.எஸ். (74), நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் மனநல மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். செப்டம்பர் 6 அன்று நொய்டா செக்டார் 82-ல் உள்ள அவரது இல்லத்தில் சிலிங் ஃபேனில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலின் அருகில், தற்கொலைக்குக் காரணமான மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் குறிப்பிடும் […]

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 67 பேர் இறந்தனர். இச்சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், “கள்ளச்சாராயம் விற்பனைக்கு பெயர்போன இடங்களில் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மதுவிலக்கு, வருவாய் மற்றும் காவல்துறை […]

சட்டப்பேரவை விதிகளை மீறி ஆதாரமற்ற அவதூறுகளைப் பேசியதாக முதலமைச்சர் விஜய் மீது திமுக துணை கொறடா கோவி. செழியன் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின் போது முதலமைச்சர் விஜய் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய பேரவைக் கூட்டத்தில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “எனது நீண்ட சட்டமன்ற அனுபவத்தில் பல முதல்வர்களைப் பார்த்துள்ளேன்; அவர்கள் […]