மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் தமது நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு சென்னை வந்த அவருக்கு, விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர், பின்னர் கார் வாயிலாக ரமண […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ரஷ்யா மற்றும் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய், எரிவாயு போன்ற எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் நாடுகளை இலக்காகக்கொண்டு, அமெரிக்க செனட் சபை புதிய தடைகள் சட்ட மசோதாவிற்கு 86-11 என்ற கணக்கில் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீதான போரில் மாஸ்கோவின் பொருளாதார வலிமையை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் எரிசக்தியை இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். […]
மதுரை மாவட்டம் புதுராமநாதபுரம் ரோடு கணபதி மில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கீழமாசி வீதியில் உள்ள கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தா (33) ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாந்தா வேலை செய்த கடையில், பஞ்சவர்ணம் என்ற பெண்ணும் பணியாற்றியதால், அவரது வீட்டிற்குச் சாந்தா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, பஞ்சவர்ணத்தின் மகன் சரவண பிரபு (25) என்பவருடன் […]
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு தடை விதித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கலைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் கோவில் தரிசனத்திற்கு வரும்போது, அவர்கள் வருகை தரும் நேரம் மற்றும் உடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்பாக ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க […]
பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அன்வர்தீன் சிறையில் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முழுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே கைதிகள் சிறையில் அடைக்கப்படும் சூழலில், அரசின் நில மோசடியை அம்பலப்படுத்திய வழக்கில் தொடர்புடையவருக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த […]
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகை த்ரிஷா அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தற்போது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. கட்சியின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் அரசியல் செயல்பாடுகளுடன் த்ரிஷாவின் பெயர் தொடர்ந்து தொடர்புபடுத்தப்பட்டு வரும் நிலையில், அவரது அரசியல் வருகை குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் சூழலில், திரையுலகைச் சேர்ந்த சில முக்கிய […]
தமிழகத்தில் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் நெல் விளைச்சல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக தமிழக சந்தைக்கு வரும் அரிசியின் வரத்து குறைந்து, பல்வேறு அரிசி ரகங்களின் விலை சுமார் 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கும் […]
இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சோக சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பா மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 8) காலை சுமார் 7.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பைரகார் பகுதியில் இருந்து சம்பா நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணித்துக் […]
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மதுபான பாட்டில் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக தினசரி அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மதுபானங்களை பயன்படுத்திய பின்னர் காலியாகும் பாட்டில்களை சேகரித்தல், மறுசுழற்சி […]
இலங்கையின் நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, கடலில் நிலவிய சூறைக்காற்று காரணமாக […]

