மத்திய கிழக்கு அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அவரது ஈரானிய பிரதிநிதியும் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இந்தியா செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது “ வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரும் ஈரான் வெளியுறவு அமைச்சரும் சமீபத்திய நாட்களில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினர். கடைசியாக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை குறித்த சமீபத்திய செய்திகளை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆன்லைனில் எரிவாயு முன்பதிவுகளைத் தேடும் நுகர்வோரை அவர்கள் குறிவைத்து புதிய வகையான மோசடிகளை செய்து வருகின்றனர். சிலிண்டரை உடனடியாக வழங்குவதாகவும், கூடுதல் சிலிண்டர்களை வழங்குவதாகவும் கூறி சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். முன்கூட்டியே பணம் செலுத்தினால் கேஸ் அவசரமாக வழங்கப்படும் என்று வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் போலி வலைத்தள […]
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதறம் உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் எல்பிஜி (LPG) குறிப்பாக வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.. இந்த நிலைமை மீண்டும் ஒரு புதிரான கேள்வியை எழுப்பியுள்ளது: எல்பிஜி சிலிண்டர்கள் ஏன் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன? இதுகுறித்து பார்க்கலாம்.. எல்பிஜியின் பரவலான பயன்பாட்டிற்கான முதன்மையான காரணம், குறைந்த அழுத்தத்தின் கீழ் அதன் திரவமாக்கலின் எளிமை. இது அதிக அளவு எரிவாயுவை சிறிய எஃகு […]
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு – பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து […]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது தொடர்ச்சியான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.. அவற்றில் தனது உரிமைகளை அங்கீகரிப்பது மற்றும் போரின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவை அடங்கும். மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி சர்வதேச சமூகம் ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பதும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான உத்தரவாதங்களை வழங்குவதும் ஆகும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறினார். […]
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த நிலையில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு […]
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டு, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டும், போதை பொருட்களை தடுக்க தவறியது, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்குவதாக தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. அதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தவெக […]
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB), சட்டவிரோதமாக திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் ஆடியோபுக் ஆகியவற்றை பகிர்ந்து வந்த 3,000-க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு அணுகலை முடக்குமாறு மெசேஜிங் தளமான Telegram நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொழில்நுட்ப சட்டத்தின் இடைநிலை சேவை வழங்குநர் பொறுப்பு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் ஆடியோபுக்குகளை பைரசி முறையில் பகிர்ந்து வந்த 3,000-க்கும் அதிகமான டெலிகிராம் சேனல்களை […]
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 26 கட்சிகள் இணைந்துள்ளன.. மறுபுறம் அதிமுக […]

