காதல் திருமணம் என்பது இன்னும் பல பெற்றோரால் வெறுக்கப்படும், ஏன் அருவருக்கப்படும் விஷயங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்கள் பிள்ளைகளையே கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்களும் இந்த சமூகத்தில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அதே நேரத்தில், காதல் திருமணம் செய்த தனது மகளின் காலில் விழுந்து கெஞ்சும் பெற்றோரைப் பார்க்கும் போது, அது பலரின் மனதையும் கலங்கச் செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி […]

“ஆயிரம் உறவுகள் நம்மைத் தேடி வந்தாலும், தாயின் அன்புக்கு ஈடாக யாரும் இருக்க முடியாது” என்ற வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. தாயின் இடத்தில் யார் வந்தாலும், ஒரு தாய் போல அன்பும் அரவணைப்பும் காட்டுவது அனைவராலும் சாத்தியமில்லை. குறிப்பாக, தாய் ஸ்தானத்தில் இருக்கும் சில சித்திகள் செய்யும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த வகையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் […]

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணித்த மூன்று வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என கூறிய அமெரிக்கா, அதற்கு பதிலடியாக ஈரானின் 80-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக […]

முன்பெல்லாம் யார் என்று தெரியாதவர்களைக் கூட நம்பி பல காரியங்களை செய்திருக்கிறோம். அப்போது பெரும்பாலானோர் அந்த நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொண்டனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் நாம் மிகவும் நேசிக்கும் அல்லது முழுமையாக நம்பும் நபர்களே சில நேரங்களில் மிகப்பெரிய துரோகங்களைச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஏன், பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்ட சூழலில் மற்றவர்களை எப்படி எளிதில் நம்புவது […]

மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, அதிக வேகமான வாழ்க்கை, சத்துக்கள் குறைந்த உணவுப் பழக்கம் போன்ற பல காரணங்களால் தற்போது பலருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக மாரடைப்பு உள்ளது. முன்பு வயதானவர்களிடம் அதிகம் காணப்பட்ட மாரடைப்பு, தற்போது இளம் வயதினரிடமும் சில சமயங்களில் குழந்தைகளிடமும் கூட ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை […]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியா ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விலை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததும், உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் அதிகரித்துள்ளது. இதுவே இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், […]

பொதுவாக ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான சில உணவுகள் இருக்கும். வயது எவ்வளவு ஆனாலும், சில உணவுகள் மீது இருக்கும் விருப்பம் மட்டும் மாறுவதில்லை. குறிப்பாக, பெரியவர்களாக இருந்தாலும் சில உணவுகளை குழந்தைகளைப் போலவே விரும்பி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சில உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பே பலர் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், இதை சாப்பிட்டால் இந்த நோய் வரும், அதை சாப்பிட்டால் உடலுக்கு கேடு ஏற்படும் என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு […]

வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு நேரமும், பொறுமையும், தொடர்ந்து கவனம் செலுத்தும் பழக்கமும் அவசியம். குறிப்பாக, சிறு சிறு விஷயங்களைக் கூட கவனிக்காமல் விட்டால், வீடு சுத்தமாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு அழுக்காக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, பக்கெட், வாஷ் பேசின், பாத்ரூம் டைல்ஸ் அல்லது குழாய்களில் படியும் வெள்ளை நிற உப்புக் கறைகளை எடுத்துக்கொள்ளலாம். இவை அழுக்கு அல்ல […]

காதல் என்றாலே ஒருகாலத்தில் அழகு, இனிமை என்று பல வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் காதல் என்றாலே பலருக்கு பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அப்படித்தான் இருக்கின்றன. காதலுக்காக நடைபெறும் கொலைகள் ஒரு புறம் இருக்க, கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. காதல் என்றாலே அதில் உணர்வுகளும், சுவாரஸ்யமான திருப்பங்களும் நிறைந்திருக்கும் என்ற நிலை […]

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக சூப்பர் குட் பிலிம்ஸ் திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.பி. சௌத்ரியிடம் மேலாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் பாவா லட்சுமணன். பின்னர் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களிடையே பிரபலமான அவர், வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, ஆனந்தம், மாயி உள்ளிட்ட […]