திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையேயான கபடிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடி வந்தன. அப்போது, களத்தில் தனது அணிக்காக தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர் முகேஷ் (17), எதிர்பாராத விதமாக மைதானத்திலேயே திடீரென நிலைகுலைந்து சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். இதைப் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி அரங்கேறியுள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘எப்.கியூ.எல்’ (FQL) என்ற தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் களமிறங்கிய ஏஜெண்டுகள், கிராமப்புறப் பெண்கள் மற்றும் பொதுமக்களை நேரில் அணுகி குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய ஆயிரக்கணக்கான […]
உலக அளவில் புகழ்பெற்ற பல தீர்க்கதரிசிகளில், பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற பெண்மணியான பாபா வங்காவின் கணிப்புகள் இன்றளவும் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன. அமெரிக்க 9/11 தீவிரவாதத் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்துக் கூறியிருந்த இவர், 1996-ல் மறைந்த போதிலும் இன்னும் 3,000 ஆண்டுகளுக்கான உலக நிகழ்வுகளைத் தொகுத்து வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இவர் கணித்தபடியே போர்கள், சர்வதேசப் பொருளாதாரத் […]
சூறாவளிப் புயல்கள், கொடூர நிலநடுக்கங்கள், வரலாறு காணாத வெப்ப அலைகள், திடீரென உடைந்து சரியும் பனிப்பாறைகள் என 2026ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே மிக தீவிரமான இயற்கை பேரழிவுகளின் ஆண்டாக உருவெடுத்து விஞ்ஞானிகளையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, உலக வரலாற்றில் பல பெரும் பேரிடர்கள் நிகழ்ந்த ’26’ என்ற தேதி, இந்த ஆண்டும் நேபாள பனிப்பாறை சரிவு உள்ளிட்ட சம்பவங்கள் மூலம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. […]
காதல் முறிவால் ஏற்பட்ட கோபம், மகாராஷ்டிராவில் நடைபெற்ற அரசு பணிக்கான போட்டித் தேர்வு முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாக கூறப்படும் சம்பவத்தில் முடிந்துள்ளது. முன்னாள் காதலி தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், தான் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அவருக்கு எதிராக தேர்வாணையத்தில் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையான வினாத்தாள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் […]
தனியாக பயணம் செய்யும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. கனமழைக்கு மத்தியில் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆம்னி பேருந்தில் லிஃப்ட் கேட்ட 16 வயது சிறுமியை, அதில் இருந்த இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமி, […]
தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற விவாதத்தின் போது, டாஸ்மாக் பணியாளர்களின் 23 ஆண்டுகால சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான அதிரடி ஊதிய உயர்வு மற்றும் பணிச் சலுகைகள் உள்ளிட்ட 6 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார். டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் அரங்கேறும் கூடுதல் கட்டண வசூல் (MRP விதிமீறல்) உள்ளிட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதே வேளையில், […]
டெல்லி பவானா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3 வயது நர்சரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த புகாரில், அதே பள்ளியில் கேப் டிரைவராக பணியாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை சாக்லேட் கொடுத்து ஆசைவார்த்தை கூறி, பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக மாற்றம் ஏற்பட்டதை அவரது தாய் கவனித்துள்ளார். இதையடுத்து, குழந்தையிடம் அன்பாக விசாரித்தபோது, […]
சென்னையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் அளித்த சித்திரவதை காரணமாக, 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், புவனேஸ்வரி என்ற இளம்பெண், தனியார் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த 2024 செப்டம்பர் மாதம் திருமணமான இவருக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது புவனேஸ்வரியின் பெற்றோர் […]
கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் உள்ள சர்வோதயா அரசுப் பெண்கள் பள்ளியில் பயின்று வந்த அன்வி என்ற 10 வயது சிறுமி, வகுப்பிற்குப் பாடப் புத்தகங்களைக் கொண்டு வரவில்லை என்பதற்காக வெயிலில் பல மணி நேரம் நிற்கவைத்துத் தண்டிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளியில் அளிக்கப்பட்ட இக்கடுமையான தண்டனையால் சிறுமி கடும் வெயிலில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர […]

