தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 19 பேராக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்சா வைரஸால் ஏற்படும் சுவாசத் தொற்று நோயாகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் H1N1 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. திடீரென ஏற்படும் […]

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தெற்கு கார்டோபன் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஆயுதக்குழுவினர் நேற்று நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். குவார்டாட் மற்றும் அபு ஹமாமா உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுவினர் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் […]

அரசாங்க உதவித் தொகையைச் சார்ந்து வாழக்கூடிய வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களின் மீது கடுமையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், உலகெங்கிலும் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் குடியேற்ற விசா நேர்காணல்களை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விசா நேர்காணலைத் திட்டமிட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் சந்திப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. அமெரிக்கக் குடியேற்றச் சட்டத்தின் […]

நேபாளத்தின் வடக்கு பகுதியில் திபெத் எல்லையையொட்டி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் நீர்வரத்து காரணமாக ராசுவா மாவட்டத்தில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தின் முழுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை சுமார் 9 மணியளவில் போதே கோசி ஆற்றில் திடீரென நீர்மட்டம் […]

மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் இருந்த பை காணாமல் போனதாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, எதிர்பாராத திருப்பமாக நாய் ஒன்று அந்த பையை தூக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் பையை மருத்துவமனை வளாகத்திலேயே கண்டுபிடித்து, அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை பத்திரமாக மீட்டுள்ளனர். மந்த்சோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் […]

ஹைதி நாட்டின் தலைநகருக்கு அருகில் உள்ள கென்ஸ்காஃப் கிராமத்தின் மீது ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஹைதியில் நடந்த மிகப்பெரிய பெருந்திரள் கடத்தல்களில் இதுவும் ஒன்றாகும் என்று அஞ்சப்படுகிறது. தேவாலயம் ஒன்றில் பாதுகாப்புத் தேடித் தஞ்சம் புகுந்த 22 பேர் உட்பட குறைந்தது 47 பேர் […]

நடிகை கவுதமி தொடர்புடைய நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தொழிலதிபர் அழகப்பன், நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கடந்த ஜூன் மாதம் அழகப்பனுடன் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். […]

பிறப்புச் சான்றிதழ் முதல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் வரை பல்வேறு அரசு சேவைகளுக்காக அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு புதிய டிஜிட்டல் முயற்சியை மேற்கொள்ள உள்ளது. பொதுமக்கள் தங்களது கைபேசியிலேயே சுமார் 500 அரசு சேவைகளைப் பெறும் வகையில் ‘வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி’ உருவாக்கப்பட உள்ளது. இந்த புதிய செயலி ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரே தளத்தின் மூலம் பல்வேறு துறைகளின் […]

கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. வழக்கு அவசரமாக எடுத்துக்கொள்ளப்படாது என்றும், வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வழக்கமான விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்டாலின் […]

டெபிட் கார்டை வீட்டில் மறந்து சென்றுவிட்டாலும் இனி கவலைப்பட வேண்டியதில்லை. UPI வசதி கொண்ட ஏடிஎம்கள் மூலம், கையில் டெபிட் கார்டு இல்லாமலேயே வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும். இதற்காக Google Pay, PhonePe, Paytm உள்ளிட்ட பிரபலமான UPI செயலிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் உள்ள பல வங்கி ஏடிஎம்களில் தற்போது படிப்படியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. UPI மூலம் […]