இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் ஆபாச உள்ளடக்கங்கள் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் போலியான ஆப்ஸ் மூலம், பயனர்களின் ஸ்மார்ட்போன்களை முடக்கி நிதித் திருட்டு நடத்தப்படுவதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‘இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’ (I4C) எச்சரித்துள்ளது. அதாவது, Night Play, Reloop, Kyss, Vimo, Rivo, Nexo, Vixa போன்ற ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என சைபர் பாதுகாப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதள […]

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் (CEO) கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த டிம் குக் (Tim Cook), ஆகஸ்ட் 31-உடன் அப்பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இன்று (செப்டம்பர் 1, 2026) முதல் ஜான் டெர்னஸ் (John Ternus) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய CEO-வாகப் பொறுப்பேற்கிறார். தனது கடைசி நாளில் ‘X’ தளத்தில் பதிவிட்ட டிம் குக், “ஆப்பிள் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த அன்புகள். நாளை எனது […]

உணவு விநியோக தளமான சோமேட்டோ (Zomato), தனது தளத்தில் போலி பனீர் மற்றும் செயற்கை சீஸ் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை விற்கும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது, பால் அல்லாத, தாவர எண்ணெய் மற்றும் கெமிக்கல் கலவைகளால் தயாரிக்கப்படும் ‘அனலாக்’ (Analogue) பால் பொருட்களுக்கு சோமேட்டோ “முழுமையான தடை ” (Zero-tolerance) கொள்கையை அறிவித்துள்ளது. இதுபோன்ற உணவுகளை விற்கும் உணவகங்கள் தளத்தில் இருந்து உடனடியாக […]

Dragon Fruit Benefits | தென் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட டிராகன் பழம் (Dragon Fruit), 19-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் மூலம் வியட்நாமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. மெக்சிகோ பூர்வகுடி மக்களால் ‘பிடாயா’ (Pitaya) என அழைக்கப்பட்ட இப்பழம், தனித்துவமான வடிவமும் சுவையும் கொண்டு தற்போது தமிழகத்திலும் வெற்றிகரமாக விளைவிக்கப்படுகிறது. கள்ளி வகையைச் (Cactus) சேர்ந்த […]

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் குழந்தைகள் விரும்பி உண்ணும் பாக்கெட் சிப்ஸ், குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் குழந்தைகளின் அன்றாட உணவாக மாறி வருவது அவர்களது உடல் நலனுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ் மற்றும் தின்பண்டங்களில் அதிகப்படியான உப்பும் கலோரிகளும் நிறைந்துள்ளதால், அவை குழந்தைகளின் உடல் எடையை மளமளவென அதிகரிக்கச் செய்கின்றன. எனவே, இவற்றிற்கு மாற்றாக வீட்டில் வறுத்த கொண்டைக்கடலை அல்லது தாமரை விதை (மக்கானா) […]

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வெளி ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே நிர்வாக முடிவுகள் மற்றும் கொள்கை ரீதியாக கூட்டணிக் கட்சிகள் அடுத்தடுத்து வழங்கி வரும் கடும் அழுத்தங்கள், த.வெ.க தலைமைக்குப் […]

உலக கால்பந்து அரங்கின் முடிசூடா மன்னனும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர நாயகனுமான லியோனல் மெஸ்ஸி (39), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பிரியாவிடை அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 2026 ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்த நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு தனது சர்வதேசப் […]

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சீதாராம் மற்றும் அருண்குமார் ஆகிய இரு நண்பர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். வாராந்திர விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, இருவரும் தங்களது அறையில் மது அருந்திக்கொண்டே சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, தன்னை விட சீதாராம் அதிக அளவில் சிக்கன் துண்டுகளை சாப்பிட்டதாக கூறி அருண்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையில் இருந்த […]

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையேயான கபடிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடி வந்தன. அப்போது, களத்தில் தனது அணிக்காக தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர் முகேஷ் (17), எதிர்பாராத விதமாக மைதானத்திலேயே திடீரென நிலைகுலைந்து சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். இதைப் […]

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி அரங்கேறியுள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘எப்.கியூ.எல்’ (FQL) என்ற தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் களமிறங்கிய ஏஜெண்டுகள், கிராமப்புறப் பெண்கள் மற்றும் பொதுமக்களை நேரில் அணுகி குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய ஆயிரக்கணக்கான […]