அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்திற்குள் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடி, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக பதிவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட அரசியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்துள்ளது. இந்த நடைமுறையை மீறி, தேனி மாவட்டம் பெரியகுளம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகிய 3 பேருக்கும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, அதாவது FDA நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு விமல் ஏலக்காய் விளம்பரத்தில் இந்த 3 நடிகர்களும் நடித்திருந்தனர். விமல் என்ற பிராண்ட் பெயர் பான் மசாலாவுடன் சந்தையில் பரவலாக தொடர்புபடுத்தப்படுவதால், ஏலக்காய் விளம்பரமும் பான் மசாலாவை மறைமுகமாக […]
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 2 முக்கிய அமைச்சர்களின் செயல்பாடுகள், முதல்வர் விஜய்க்கு அரசியல் ரீதியாக புதிய தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என்ற பேச்சு டெல்லி அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் மீது தொடக்கத்திலேயே ஊழல் புகார்கள் எழ தொடங்கியுள்ள நிலையில், மற்றொரு அமைச்சர் மத்திய அரசையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் […]
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தற்போது மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி […]
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. டார்வின் நகரில் உள்ள மர்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வங்கதேச அணி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, வங்கதேச வீரர்களின் தரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஸ்டீவ் […]
கோவிட்-19 தொற்று என்பது கடுமையான காய்ச்சல் மற்றும் சோர்வுடன் முடிந்துவிடுவதில்லை; அதற்கு அப்பாலும் நமது உடலில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். மனித உடலில் பல ஆண்டுகளாக, ஏன் பல தசாப்தங்களாக அமைதியாக மறைந்திருக்கும் மற்ற வைரஸ்களை கொரோனா தொற்று தூண்டிவிடுகிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்திய ஆய்வின் முடிவுகளில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,154 கோவிட்-19 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான மரபணு ஆய்வில், […]
ஐபோன் பயனர்களை இலக்காக கொண்டு ‘மெர்சனரி ஸ்பைவேர்’ (Mercenary Spyware) எனப்படும் அதிநவீன உளவு மென்பொருள் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என 110 நாடுகளைச் சேர்ந்த தனது பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை அறிவிப்பை அனுப்பியுள்ளது. வழக்கமான சைபர் குற்றங்களை காட்டிலும் இந்த வகை ‘மெர்சனரி ஸ்பைவேர்’ தாக்குதல்கள் மிகவும் ஆபத்தானவை மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உத்திகளைக் கொண்டவை ஆகும். குறிப்பிட்ட நபர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் பொறுப்பில் […]
சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. சுதந்திர தின விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாக்னில்க் (Sacnilk) தரவுகளின்படி, தமிழ் மற்றும் தெலுங்கு சந்தைகளில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், இரண்டாம் நாளில் இந்தியாவில் ரூ.22.25 கோடி நெட் வசூலித்துள்ளது. இது முதல் நாள் வசூலான ரூ.15.35 கோடியை விட […]
மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரான அசீத் பானர்ஜி (74), பீர்பும் மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இறந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த கட்சி அலுவலகம் ராம்பூர்ஹட் நகரில் அவரது இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ளது. காவல்துறையினர் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், சம்பவ இடத்திலிருந்து ஒரு கடிதம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் […]
ஐரோப்பாவில் கடந்த ஜூன் மாதம் நிலவிய வரலாறு காணாத தீவிர வெப்ப அலை காரணமாக, வழக்கமான அளவை விடக் கூடுதலாக சுமார் 16,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய இறப்பு கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைக் கடந்தபோது, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி போன்ற வட ஐரோப்பிய நாடுகளில்தான் இறப்புகள் கணிசமாக அதிகரித்தன. இப்பகுதி மக்கள் இதுபோன்ற கடுமையான வெப்பத்திற்குப் பழக்கப்படாதவர்கள் என்பதும், அங்கு குளிர்சாதன […]

