மகாராஷ்டிராவில் கணவர் காணாமல் போனதாக கூறி நாடகமாடிய மனைவி, தனது காதலனுடன் இணைந்து அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவர் திடீரென காணாமல் போனதை அடுத்து, அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதற்கிடையே, கணவரை காணவில்லை என மனைவியும் வெளியில் கூறி வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், அப்பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக சட்டமன்றத்தில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது, வீடு கட்டும் திட்டங்களின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தவறுகளை ஒப்புக்கொண்டதற்காக பெரியசாமிக்கு நன்றி தெரிவித்ததுடன், எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் பேச வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய […]
தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்று பலரது கவனத்தையும் ஈர்த்தது. 110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதற்கு உறுப்பினர்கள் தெரிவித்த விதவிதமான கருத்துகள் அவையில் சுவாரஸ்யமான தருணங்களை உருவாக்கின. அறிவிப்பை வரவேற்று பேசிய மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், பல உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்த வாகனங்கள் இருந்தாலும், முதலமைச்சர் வழங்கும் காரில் […]
சினிமா திரையில் நாயகனாக வலம் வரும் நடிகர் விமல், தனது சொந்த ஊரில் காய்கறி விற்பனை செய்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருச்சி மாவட்டம் பண்ணங்கொம்பில் நடைபெற்ற வாரச் சந்தையில் அவர் காய்கறி கடையில் அமர்ந்து விற்பனை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. விமல் காய்கறிகளை விற்பனை செய்வதுடன், சந்தைக்கு வந்தவர்களை அழைக்கும் வகையில் கூவி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் […]
சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் குவித்துள்ள வசூல் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் 5 நாட்களில் உலக அளவில் ரூ.138 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தொடக்க நாட்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பின்னர் வசூலில் சற்று மந்தநிலை […]
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டங்காவைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவன், நீரில் இருந்து வெளியே வந்தாலே உடல் முழுவதும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி பெரும்பாலான நேரத்தை கிராமத்துக் குளத்திலேயே கழித்து வருகிறான். இரவும் பகலும் நீரிலேயே இருக்கும் அச்சிறுவனுக்கு ஊர் மக்கள் உணவைக் குளத்திலேயே வழங்கி வருகின்றனர். குடும்பத்தின் நிதி நெருக்கடியால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ள நிலையில், […]
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தொகுதிப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளவும், பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறியவும் ஏதுவாக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அரசு வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். வாகன பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் ஊதியத்திற்காக மாதம் ரூ.75,000 மற்றும் அலுவலக உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25,000 வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகை ஆண்டிற்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக […]
வளைகுடா பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, ஈரானுடனான அனைத்து வர்த்தக, வணிக மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளையும் ஐக்கிய அரபு அமீரகம் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. வளைகுடா கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக அமீரகம் குற்றம்சாட்டியுள்ளதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்த இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று அமீரக […]
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள நான்கு மாடி ஹோட்டல் ஒன்றில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில் திடீரென தீப்பற்றியது. இதில் மருத்துவச் சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட […]
முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில். முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகை ஆண்டொன்றுக்கு தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். தஞ்சை, கோவை, நெல்லை , மதுரை மற்றும் விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிசிக்சை மையங்கள் அமைக்கப்படும். சென்னை […]

