சர்க்கரை நோய் அல்லது முன் நீரிழிவு (Prediabetes) உள்ளவர்கள் பொதுவாக சாதம், ரொட்டி, பிரெட், இனிப்பு போன்ற முக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், உணவுடன் சேர்த்து சாப்பிடப்படும் ஊறுகாய், அப்பளம், சட்னி போன்ற சிறிய துணை உணவுகள் குறித்து பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. உணவின் சுவையை அதிகரிக்கும் இந்தப் பொருட்கள், சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, ஊறுகாய், […]

அமாவாசை என்றாலே நம் முன்னோர்களை நினைத்து அவர்களை வழிப்படக்கூடிய ஒரு முக்கியமான நாள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய அமாவாசை தினம், மாதம் மாதம் வந்தாலும் இந்த மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அது தை மாதத்தில் வருகிற அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசியில் வரும் அமாவாசை ஆகும். இதில் முதலாவதாக வருவது தட்சிணாயன காலமான […]

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மனித விண்வெளிப் பயணங்களில் தங்களது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, தனது நிலவு தளத் திட்டத்தில் (Moon Base Programme) இணையுமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்கால நிலவு திட்டங்கள், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த இருநாடுகளின் பேச்சுவார்த்தைக்கு இடையே இந்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. அமைதியான முறையில் நிலவை ஆராய்வதற்கும், அங்கு […]

இந்தியாவில் பாலில் கலப்படம் செய்வது நீண்ட காலமாகவே முக்கிய உணவுப் பாதுகாப்பு பிரச்னையாக இருந்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் சோதனைகளில், நுகர்வோரின் உடல்நலத்தையும், பால் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் பல்வேறு கலப்பட முறைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செயற்கை மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பால் தயாரிக்கப்படுவதாக மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. FoodPharmer-க்கு அளித்த […]

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன. கலி, பெரேரா, மனிசலெஸ், மற்றும் கிப்டோ ஆகிய மேற்கு கொலம்பிய நகரங்களிலேயே அதிகப்படியான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. […]

LPG Gas | வீட்டு சமையல் எரிவாயு பயனாளிகள் ஆதார் வாயிலாக உண்மைத் தன்மையை சரிபார்க்க தவறினால், சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது என்று பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே என மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தகுதியான பயனாளிகளுக்கு அரசு வழங்கும் மானியம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க எண்ணெய் நிறுவனங்களுக்கு […]

உள்ளங்கை திடீரென அல்லது தொடர்ச்சியாக சிவந்து காணப்படுவதை பலர் சாதாரணமான சரும மாற்றமாக கருதி அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், ‘பால்மர் எரிதீமா’ (Palmar Erythema) என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் இந்த உள்ளங்கை சிவத்தல், உடலின் உட்புறத்தில், குறிப்பாகக் கல்லீரலில் ஏற்படும் நாள்பட்ட பாதிப்புகளின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் அறுவைசிகிச்சை இரைப்பைக் குடலியல் துறைத் தலைவர் டாக்டர் டி.எல்.வி.டி. பிரசாத் பாபு […]

வேலைப்பளு நிறைந்த காலையையோ அல்லது தூக்கமில்லாத இரவையோ கழித்த பிறகு, மதிய வேளையில் சிறிது நேரம் தூங்குவது பலருக்குப் புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தருகிறது. 10 முதல் 30 நிமிடங்கள் வரையிலான குறுகிய நேரத் தூக்கம் கவனச்செறிவை அதிகரிக்கும் என்றாலும், தினசரி நீண்ட நேரம் தூங்குவது அல்லது தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்வது உங்களின் உடல் கேட்கும் உதவியின் சமிக்ஞையாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து […]

சிவபெருமானின் வழிபாட்டில் வில்வ இலைகளுக்குதனித்துவமான முக்கியத்துவம் உண்டு. சிவலிங்கத்தின் மீது புனிதமான மூன்று இலைகள் கொண்ட வில்வத்தை படைக்காமல் எந்தவொரு சிவ பூஜையும் முழுமையடையாது என்று கூறப்படுகிறது. இந்த இலைகளின் ஆன்மீக முக்கியத்துவத்தை பக்தர்கள் நன்கு அறிந்திருந்தாலும், வில்வ இலைகளைப் பறிப்பதற்கான சரியான நேரம் குறித்து இந்து சாஸ்திரங்களும் மரபுகளும் சில விதிமுறைகளை வகுத்துள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. பொதுவாகப் பக்தர்கள் புனிதமான ஷ்ராவண மாதத்திலும், சிவபெருமானுக்கு உகந்த பண்டிகை […]

டெங்கு கொசு ஒழிப்பு மருந்து அடித்தபோது, மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தி சாலை உப்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மோகன். அதே பகுதியில் ராணி என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து […]