கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
காவிரி நீர் நமக்கு உயிர் ஆதாரம்; அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்கு சிறிதும் இல்லை. தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் பக்கத்து மாநிலத்திடம் பேசி தீர்வு காணும்போது அவமானம் நேரிட்டாலும், மக்களுக்காக அதைத் தாங்கிக் கொள்ளத் தயார்” என்று முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சனும், அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத்தும் […]
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல், 22 வயது வாலிபரை கத்தியால் குத்தியும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் அஸ்வின் வயது 22. கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அஸ்வினுக்கு விஷ்ணு என்ற நண்பர் இருந்தார். தினமும் இரவு விஷ்ணுவின் வீட்டில் தங்குவது அஸ்வினின் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜயிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜூன் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வழக்கறிஞர்களும் […]
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க விழிப்புணர்வு மிகவும் அவசியம். குறிப்பாக, தங்களுக்கு நேரும் தவறான தொடுதல் அல்லது அத்துமீறலை அடையாளம் கண்டு, அதை நம்பிக்கையான பெரியவர்களிடம் உடனடியாக தெரிவிக்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். அந்த வகையில், ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சி 8 வயது சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை வெளிப்படுத்த காரணமாக அமைந்துள்ளது. விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் குழந்தைகளுக்கு ‘குட் டச், […]
பள்ளி என்றாலே மாணவர்களின் பாதுகாப்பான உலகமாக இருக்க வேண்டும். ஆனால், துப்பாக்கிச்சூடு போன்ற கொடூர சம்பவங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே அரங்கேறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தின் பாங்காக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள நொந்தபுரி மாகாணத்தின் பாங் க்ருவாய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள […]
ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை, நெருக்கமாக பழகிய ஒருவருடனான உறவு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரது உடலை சூட்கேஸில் மறைத்து ஒடிசாவுக்கு ரயிலில் கொண்டு சென்று வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் டிரைவரான போலிசெட்டி சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷின் மனைவி கர்ப்பமாக இருந்த காலத்தில், வீட்டு வேலைகளுக்கு உதவுவதற்காக இளம்பெண் ஒருவர் பணிக்கு […]
அசாமின் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது பள்ளி மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியின் இறுதிச்சடங்கிற்காக தாயும் சகோதரரும் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். அவரது சகோதரர் அசாம் மாநிலத்திற்கு வெளியே வேலை […]
ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு தாய்க்கும் மறக்க முடியாத தருணம். அந்த நேரத்தில் ஏற்படும் வலி, பதற்றம் என அனைத்தையும் தாண்டி குழந்தையைப் பாதுகாப்பாக உலகிற்கு கொண்டு வருவது தாயின் அளவற்ற மன மற்றும் உடல் வலிமையை வெளிப்படுத்துகிறது. இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது வியட்நாமில் நடந்துள்ள ஒரு சம்பவம். வியட்நாமில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். மருத்துவமனையை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென […]
ஒரு காலத்தில் பெற்றோரின் வயதான காலத்தை தங்களின் பொறுப்பாக நினைத்த பிள்ளைகள் இருந்தனர். ஆனால், இன்றைய அவசர வாழ்க்கையில் பெற்றோருக்கான அன்பும், அரவணைப்பும், பொறுப்பும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது மும்பையைச் சேர்ந்த முன்னாள் துணி வியாபாரி ஒருவரின் மரணம். மும்பையைச் சேர்ந்த சிவச்சரன் ராம் ரத்தன் குப்தா, தனது மூன்று மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அவர்களில் […]

