நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல பொருட்களின் வடிவமைப்புக்குப் பின்னால் இருக்கும் காரணங்களைப் பற்றி பெரும்பாலும் யோசிப்பதில்லை. அவற்றில் ஒன்று ஆண்கள் அணியும் சட்டை. குறிப்பாக, பெரும்பாலான சட்டைகளில் மார்புப் பாக்கெட் இடது பக்கத்திலேயே இருப்பதை அனைவரும் கவனித்திருப்போம். இது வெறும் ஃபேஷன் அல்ல; பல ஆண்டுகளாக உருவான பழக்கவழக்கங்கள், நடைமுறைத் தேவைகள் மற்றும் வரலாற்றுப் பின்னணியின் விளைவாக இந்த வடிவமைப்பு இன்று வரை தொடர்கிறது. வரலாற்றைப் பார்த்தால், ஆரம்ப […]

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் இரண்டு மாத பெண் குழந்தை மர்மமான முறையில் காயங்களுடன் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் தொடர்ந்து காயங்கள் தென்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர், உண்மையை கண்டறிய ரகசியமாக கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அந்த முடிவே அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. குதா கோர்ஜி பகுதியில் வசிக்கும் தம்பதியரின் 2 மாத குழந்தை அடிக்கடி அழுததால், பெற்றோர் அதை இயல்பானதாகவே கருதினர். […]

பொதுவாகவே, நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணம்தான் நிலைக்கும். ஆனால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால், அந்தப் பணம் நீண்ட நாட்கள் நம்மிடம் நிலைக்காது. சில நேரங்களில், அப்படிப்பட்ட ஆசையே நம் வாழ்க்கையை சீரழித்துவிடும். அதற்கு உதாரணமாக, ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. புச்சிரெட்டிபாலத்தில் வேளாண்மை அதிகாரியாக வேலை செய்து வரும் இவருக்கு லாவண்யா […]

திருடர்கள் எதையெல்லாமோ திருடி பார்த்திருப்போம். பல கோடி மதிப்புள்ள பொருட்களைக் கூட திருடிச் சென்றிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், ஒருவர் வீட்டிற்குள் திருடன் நுழைந்தால், அங்கு இருக்கும் தங்கம், வெள்ளி, பணம் போன்ற விலையுயர்ந்த பொருட்களைத்தான் திருடுவான். ஏன், படங்களில் வருவது போல் ஃபிரிட்ஜ், டிவி போன்ற பொருட்களைக்கூட திருடிச் சென்ற சம்பவங்களைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஒரு விசித்திரமான திருடன், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் விட்டுவிட்டு, பெண்களின் உள்ளாடைகளை […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த நவிமும்பை, ஐரோலி பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான பலிராம் சூர்யநாத் குஷ்வாகா. இவருக்கு 40 வயதான சுனிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சுனிதாவுக்கும் 30 வயதான ராகுல் தசரத் பிரஜாபதி என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதளாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்களின் […]

குழந்தையை வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. எவ்வளவுதான் கவனமாக பார்த்து வளர்த்தாலும், ஒரு சில நொடிகள் ஏற்படும் கவனக்குறைவு கூட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு உதாரணமாக, கேரள மாநிலத்தில் நெஞ்சை ரணமாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேரளம் மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள குன்னம்புரத்தில் வசித்து வருபவர் முனீர். இவருக்கு 3 வயதான முகமது ரிசான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் காலை […]

40 வயதிற்கு பிறகு பெண்களின் உடலில் பல இயற்கையான மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும் போது வளர்சிதை மாற்ற வேகம் குறைவது, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது, தசை நிறை குறைவது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பது மிகவும் பொதுவானதாக மாறுகிறது. இதனுடன், நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி இல்லாமை, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் ஆகியவை இந்தப் பிரச்சினையை […]

மழைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்கியதும் வீடுகளில் சிலந்திகள் அதிகம் தோன்றுவது வழக்கமான ஒன்று. இதனால் பலர் அவற்றை விரட்ட பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, சில இயற்கை மணங்கள் சிலந்திகளுக்கு பிடிக்காததால், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்தி அவை வீட்டிற்குள் வருவதை குறைக்கலாம். அவற்றில் முக்கியமானது இலவங்கப்பட்டை. அதன் மணம் சிலந்திகளுக்கு பிடிக்காததால், அரைத்த இலவங்கப்பட்டை தூளை கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சிலந்திகள் நுழையக்கூடிய இடங்களில் […]

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சோதனையில், பொதுமக்களின் உடல்நலனை பெரிதும் பாதிக்கக்கூடிய வகையில் மிகப்பெரிய அளவில் கலப்பட பால் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் தாராஷிவ் மாவட்டம், பூம் தாலுகாவில் நடத்திய ஆய்வின் போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விற்பனைப் பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 2,30,470 […]