மகாராஷ்டிராவில் குழந்தை திருமணங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக, திருமண அழைப்பிதழ்களில் மணமகன் மற்றும் மணமகள் இருவரின் பிறந்த தேதிகளையும் அச்சிடுவதைக் கட்டாயமாக்குவது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. குழந்தை திருமணங்களைக் குறைப்பதற்கும், திருமணத்திற்கு முன் வயது சரிபார்ப்பு முறையை வலுப்படுத்துவதற்கும் அரசு மேற்கொண்டு வரும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்மொழிவு ஆராயப்பட்டு வருகிறது. நேற்று சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சட்டமன்ற உறுப்பினர் அதுல் பட்ல்கல்கர் […]

ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகளை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 139AA-இன் படி, ஆதார்-பான் இணைப்பு கட்டாயமாகும். ஜூலை 1, 2017 அன்று அல்லது அதற்கு முன் நீங்கள் பான் அட்டையைப் பெற்றிருந்தால், உங்கள் ஆதார் எண்ணை அதனுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். இலவசமாக இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை ஏற்கனவே முடித்துவிட்டது. தற்போது, ​​ரூ. 1,000 […]

சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட […]

மேற்கு கொல்கத்தாவின் தாரதாலா பகுதியில் புதன்கிழமை மதியம் கட்டுமானத்தில் இருந்த 3 மாடி கிடங்கு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர், சிக்கியிருந்த 21 பேர் மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகளை ஆய்வு செய்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, சுமார் 12 முதல் 18 பேர் உள்ளே சிக்கியிருப்பதாகவும், அவர்கள் இந்திய ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். முதல்வர் சுவேந்து அதிகாரி இதுகுறித்து […]

வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயரை சூட்ட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தாம்பரம் ரயில் நிலைய சாலை முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி ஸ்ரீஹரி நேரில் சந்தித்து கோரிக்க விடுத்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. இந்திய நாட்டிற்காக போராடி உயர்நீத்த வீரரின் மாபெரும் தியாகத்தை போற்றும் வகையில் வேளச்சேரி […]

சிங்கப்பூரில் வசிக்கும் தந்தையிடம் ஒன்பது வயது சிறுவனின் இடைக்காலப் பொறுப்பை (custody) ஒப்படைக்க புனே குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய் நீதிமன்றத்தின் பல உத்தரவுகளைப் புறக்கணித்ததோடு, தந்தையைத் தன் மகனுடன் சந்திக்க விடாமல் பலமுறை தடுத்ததால், தந்தையிடமே குழந்தையின் நலன் சிறப்பாகப் பாதுகாக்கப்படும் என்று நீதிமன்றம் கருதியது. ஒரு பெண் தனது திருமண உறுதிமொழிகளைக் காப்பாற்ற வேண்டும், கணவரை உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கவனித்துக்கொள்ள வேண்டும், அவருக்காகப் […]

விளம்பர மோகத்தால் திரு. ஜோசப் விஜய் அரசு மக்கள் பணத்தை வீணடிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ முதல்வர் திரு. விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 300 பேருந்துகளையும் […]

ஈரானின் மறைந்த உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. இந்த இறுதிச் சடங்குகள் ஜூலை 5 முதல் 9 வரை நடைபெறும். இருப்பினும், பிரதமர் மோடிக்கான அழைப்பு குறித்து இந்தியாவிடம் இருந்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை. மூன்று தசாப்தங்களாக ஈரானை ஆட்சி செய்த கமேனி, தெஹ்ரான் […]

யூரிக் அமிலம் தொடர்பான பிரச்சனை தற்போது பலரையும் பாதித்து வருகிறது. ஒரு காலத்தில் இப்பிரச்சனை பெரும்பாலும் முதியவர்களிடமே காணப்பட்டது; ஆனால் இப்போது இளைஞர்களிடமும் யூரிக் அமில அளவு அதிகரித்து வருகிறது. நம் உடலில் ‘பியூரின்’ (purine) எனப்படும் பொருள் சிதைவடையும்போது யூரிக் அமிலம் உருவாகிறது. இயல்பான நிலையில், சிறுநீரகங்கள் இந்த அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடுகின்றன. இருப்பினும், யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக உற்பத்தியானாலோ அல்லது சிறுநீரகங்களால் அதை முழுமையாக […]

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ நடிப்பின் உச்சத்தில் இருந்துவிட்டு, அரசியலுக்கு வந்த முதல்வருக்கு பேரவையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. பேரவைக்கு வெளியே சென்று எதிர்க்கட்சியினர் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.. திமுகவினர் வெளியே சென்று கருத்து கூறியதற்கு பதிலாக உள்ளேயே கூறியிருந்தால் முதல்வர் பதில் சொல்லி இருப்பார். திமுகவினரின் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் புறக்கணித்து விட்டனர்.. திமுகவை மக்கள் ஏற்காததால் தான் […]