தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. மேலும் சசிகலா – ராமதாஸ் அணியும் களத்தில் உள்ளது.. அ.இ.பு.த.ம.மு.க என்ற கட்சியை சார்பில் வேட்பாளர்களை அறிவித்த சசிகலா தமிழ்நாடு முழுவதும் […]

செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நம் முன்னோர்களின் காலம் தொட்டே நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இரவு முழுவதும் செம்புப் பாத்திரத்தில் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பருகுவது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இருப்பினும், முறையான புரிதல் இல்லாவிட்டால், அதே செம்பு உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிரியாகவும் மாறக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். செம்புப் பாத்திரத்தில் உள்ள நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது […]

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.. மேலும் தங்களை பற்றி வைக்கும் விமர்சனங்களுக்கும் சுடச்சுட பதிலடி கொடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் இபிஎஸ்-ஐ என்று துரோகி என்று விமர்சித்த ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.. நேற்று காஞ்சிபுரத்தில் இபிஎஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடினார்.. அப்போது […]

சுமார் 200 மில்லியன் டாலர் (சுமார் 1,800 கோடி ரூபாய்) மதிப்புள்ள, அமெரிக்க கடற்படையின் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு ட்ரோன் ஒன்று ஹார்முஸ் நீரிணைக்கு மேலே காணாமல் போயுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன் மேம்பட்ட கண்காணிப்புத் திறன்களுக்காக அறியப்பட்ட இந்த ட்ரோன், ஒரு வழக்கமான பணியை முடித்துவிட்டுத் தனது தளத்திற்குத் […]

விளாத்திகுளம் துயரம்: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாலை, இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற பிளஸ் டூ மாணவி வீட்டிற்கு திரும்பாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதலில், அடுத்த நாள் (மார்ச் 11) கிராமம் அருகிலுள்ள புதர்பகுதியில், உடலில் காயங்களுடன் அந்த மாணவி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் ஆடைகள் களையப்பட்டிருந்த நிலையில் இருந்தது, இதன் காரணமாக பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம் என்ற […]

“சொன்னதைச் செய்வோம்… செய்வதைச் சொல்வோம்…” என்பது தி.மு.க-வின் முக்கிய அரசியல் வாசகமாக இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளின் ஆட்சியைப் பார்த்தால் அந்த வாசகம் நடைமுறையில் பல இடங்களில் பொருந்தவில்லை என்ற விமர்சனம் எழுகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சியைப் பிடித்த தி.மு.க, தற்போது 2026 தேர்தலை முன்னிட்டு புதிய தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பகுதி (அதாவது 70%-80%) வாக்குறுதிகளை […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, மணி பிளான்ட் (Money Plant) என்பது வெறும் ஒரு செடி மட்டுமல்ல; அது வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் ஒரு மங்களகரமான அடையாளமாகும். இதை வீட்டில் சரியான திசையிலும், சரியான முறையிலும் வைத்தால், அது உங்கள் அதிர்ஷ்டத்தையே மாற்றிவிடும். ஆனால், இவற்றை அறியாமல் செய்யப்படும் சில தவறுகள், குடும்பத்திற்குப் பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். அதாவது, நீங்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும், உங்கள் கையில் பணம் தங்காமல் போகலாம். எனவே, […]

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். பிருந்தாவனம் கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் படகில் சுமார் 25 பேர் பயணித்ததாகத் தெரிகிறது. சிருங்கார் காட் (Shringar Ghat) அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், பலர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. “மதுராவில் யமுனை நதியில் […]