உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முழுமையாகத் தடை விதித்துள்ளது. கோயிலின் புனிதம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும், சாமி சன்னதிகள் மற்றும் பிரகாரங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் […]

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, கடந்த 10 நாட்களில் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால் இயற்கையான நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில், வனவிலங்குகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக, மசினகுடி […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் ரூ.4.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 79 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தலைமுடி காணிக்கை செலுத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.அதே நாளில் பக்தர்களுக்காக சுமார் 3.95 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது, என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், வைகுண்டம் கியூ […]

சமூக வலைதளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக் கூட காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் துரதிருஷ்டவசமானது என முதலமைச்சர் விஜய்க்கு, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் மக்களின் மாற்றுக்கருத்துகளையும் நியாயமான விமர்சனங்களையும் அலட்சியப்படுத்தியதே கடந்த காலங்களில் திமுக வீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தவெக […]

தமிழ்நாடு அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையின் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் கீழ், அரசு ஊழியர்கள், போட்டித் தேர்வர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் அறிவித்தார். ➣ அரசுப் பெண் பணியாளர்களுக்கு மூன்றாவது குழந்தைப் பேறுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பானது 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக (1 ஆண்டு) உயர்த்தி வழங்கப்படும். ➣ டிஎன்பிஎஸ்சி (TNPSC), எஸ்எஸ்சி (SSC), ரயில்வே […]

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், கேரள முதல்வர் சதீசன், […]

கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் வனப்பகுதியில் கடந்த 15ஆம் தேதி அதிகாலை ரோந்து சென்றபோது, வேட்டை கும்பல் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதால் தற்காப்புக்காகப் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 தமிழர்கள் உயிரிழந்ததாக கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காட்டில் காணாமல் போன தங்களது கால்நடைகளை தேடிச் சென்றவர்களையே வனத்துறையினர் திட்டமிட்டுச் சுட்டுக் கொன்றுவிட்டு பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் கிராம மக்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி […]

பாமகவை சாதி கட்சியாக முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், பாமக இதுவரை 6 இடஒதுக்கீடுகளை போராடிப் பெற்றுத் தந்துள்ளதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றம் […]

பொதுவாக இரவு நேரம் வந்தவுடன் சூரியன் மறைந்து, இருள் சூழ்வதுதான் பூமியில் நாம் காணும் இயல்பான நிலை. ஆனால் உலகின் சில வடக்குப் பகுதிகளில் மட்டும் கோடைக்காலத்தில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு இயற்கை நிகழ்வு ஏற்படுகிறது. நள்ளிரவு கடந்த பிறகும் சூரிய ஒளி தொடர்ந்து காணப்படும் இந்த அபூர்வ நிகழ்வுதான் ‘நள்ளிரவு சூரியன்’ (Midnight Sun) என அழைக்கப்படுகிறது. குறிப்பாக ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளில், சில […]

தெலங்கானாவில் பெண்களை முன்கூட்டியே கண்காணித்து, அவர்களிடம் இருக்கும் பணம், நகை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொண்டு, பின்னர் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் தாய் மற்றும் அவரது மைனர் மகன் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். சித்திப்பேட்டையில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கை விசாரித்தபோது, இதேபோன்று நடைபெற்ற மற்றொரு கொலைச் சம்பவத்திலும் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை நகரின் ராமக்காபேட்டை பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 8-ம் […]