தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வடகொரியா குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாகப் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தென்கொரியக் கூட்டுப் படைத் தலைமைத் தளபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வோன்சான் நகரிலிருந்து காலை 6 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. சுமார் 700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பறந்து […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உலகிலேயே காதலின் ஆகச்சிறந்த அடையாளமாக பார்க்கப்படும் தாஜ்மஹாலை மாதிரியாகக் கொண்டு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவிக்காக 4 படுக்கையறை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் பிரகாஷ் சௌக்சி என்பவரால் கட்டப்பட்ட இந்த வீட்டின் அழகையும், அதன் பின்னணியில் உள்ள காதலையும் விவரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அசல் தாஜ்மஹாலைப் போலவே […]
மழை பெய்யும் நாட்களில் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தாலும், ஜன்னல் கண்ணாடி மட்டும் ஈரமாகி தண்ணீர் வழிவது பலருக்கும் தலைவலியாக இருக்கும். குறிப்பாக இந்த ஈரம் ஜன்னல் சட்டத்தில் நீண்ட நேரம் இருந்தால், மரம் மற்றும் சுவர் பகுதிகளில் சேதம் ஏற்படுவதோடு பூஞ்சையும் உருவாகலாம். இதற்காக பெரிய செலவு செய்யாமல் வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய ஒரு எளிய வழியாக ஸ்டீல் கரண்டி தந்திரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதலில் தெரிந்துகொள்ள […]
மூச்சை எவ்வளவு நேரம் அடக்கி வைத்திருக்க முடிகிறது என்பதை கொண்டு ஒருவரின் நுரையீரல் ஆரோக்கியத்தை முழுமையாக மதிப்பிட முடியாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, ஒருவர் நீண்ட நேரம் மூச்சை அடக்கும் போது நுரையீரலின் திறன் சிறப்பாக இருப்பதாக பலரும் தவறாக கருதுகின்றனர். ஆனால், மூச்சை அடக்கும் தருணத்தில் உடலுக்குள் முற்றிலும் வேறு விதமான உடலியல் மாற்றங்களே நிகழ்கின்றன. நாம் மூச்சை அடக்கிய உடனேயே, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை […]
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கப் போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் தடையை “இரும்புச் சுவர்” என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதற்கு எதிராக ஈரானால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். ஈரானின் ராணுவ […]
அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி மறைந்ததைத் தொடர்ந்து கால்பந்து விளையாட்டு உலகிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் இழப்பிற்குப் பிறகு விளையாட்டுக்கு சிறிது காலம் இடைவெளி விட்டுள்ள மெஸ்ஸி, தனது எதிர்காலம் குறித்தும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தைக்கு அஞ்சலி செலுத்திப் பதிவிட்டுள்ள மெஸ்ஸி, “அப்பா, நீங்கள் எங்களை விட்டுப் […]
மன்னார் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் இதற்கு நிரந்தர தீர்வு கோரி கோரிக்கை வைத்து வந்தாலும் இந்த பிரச்சினை முடிந்தபாடில்லை. தமிழக முதல்வர் விஜய்யும் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி […]
மன அழுத்தம், உறவுகளில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கை குறித்த குழப்பங்களுக்கு மத்தியில், தங்களைத் தாங்களே புரிந்துகொள்ளும் முயற்சியில் பலரும் சுய சிந்தனை முறைகளை நாடுகின்றனர். அந்த வகையில், ஜப்பானில் பின்பற்றப்படும் ‘Naikan’ என்ற சுயபரிசோதனை முறை தற்போது கவனம் பெற்று வருகிறது. நன்றியுணர்வு, தனிப்பட்ட பொறுப்பு மற்றும் உறவுகளின் மதிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த அணுகுமுறை, ஒருவரின் செயல்கள் மற்றும் பிறருடனான உறவுகளை ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது. […]
சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) சில முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. மின் வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளன. பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள்:கே.கே. நகர் பகுதியில், காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா […]
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயம் முதலில் பாட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றாலே கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக […]

