மும்பை நிலச்சரிவு: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சக்காரிவு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து:மும்பையின் குர்லா பகுதியில் உள்ள சிராக் நகர் அருகே கவுசியா சாவ்ல் பகுதியில் அதிகாலை சுமார் 3.48 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியின் […]

வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் விளைவாகவே இந்த புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 12) அதிகாலை 5.30 மணியளவில் கணிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த […]

அரசியல் களத்தில் இறங்க தீவிர ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷின் நகர்வுகளையும், அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகளையும் உளவுத்துறை மூலம் தீவிரமாக முதல்வர் விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் கடந்த ஓராண்டாகவே அரசியல் பிரவேசம் குறித்து யோசித்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக தனது ரசிகர் மன்றத்தை முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது பிறந்த நாள் விழாவில் பிரத்யேக கொடியை […]

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தனது அனுமதியின்றி இணையத்தில் உலா வரும் 5,000-க்கும் மேற்பட்ட வலைதளப் பக்கங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள், போலி சமூக வலைதள கணக்குகள் மற்றும் சாட்போட்டுகளை (Chatbots) நீக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நடிகையின் அனுமதியின்றி ஆபாசமாக உருவாக்கப்பட்ட பக்கங்கள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை இணையத்திலிருந்து […]

ஒரு உறவில் அன்பு, நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தம்பதியிடையேயான நெருக்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவன் – மனைவிக்கு இடையேயான நல்ல நெருக்கம் அவர்களின் உறவை வலுப்படுத்துவதோடு, மனநிலை மற்றும் உடல் நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரத்தில், உறவில் நெருக்கம் குறைந்தால் கோபம், எரிச்சல், மன அழுத்தம் மற்றும் சோகம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஹைதராபாத் யசோதா […]

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க கோமியத்தை ரூ.10க்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அறிமுகம் செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோமியம் சேகரிக்கும் முன்னோடித் திட்டத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, பெண்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வாய்ப்பை உருவாக்குவது மற்றும் பால் தராத பசுக்களையும் தொடர்ந்து பராமரிக்க உதவுவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். இங்கு சேகரிக்கப்படும் […]

சர்க்கரை நோய் அல்லது முன் நீரிழிவு (Prediabetes) உள்ளவர்கள் பொதுவாக சாதம், ரொட்டி, பிரெட், இனிப்பு போன்ற முக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், உணவுடன் சேர்த்து சாப்பிடப்படும் ஊறுகாய், அப்பளம், சட்னி போன்ற சிறிய துணை உணவுகள் குறித்து பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. உணவின் சுவையை அதிகரிக்கும் இந்தப் பொருட்கள், சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, ஊறுகாய், […]

அமாவாசை என்றாலே நம் முன்னோர்களை நினைத்து அவர்களை வழிப்படக்கூடிய ஒரு முக்கியமான நாள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய அமாவாசை தினம், மாதம் மாதம் வந்தாலும் இந்த மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அது தை மாதத்தில் வருகிற அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசியில் வரும் அமாவாசை ஆகும். இதில் முதலாவதாக வருவது தட்சிணாயன காலமான […]

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மனித விண்வெளிப் பயணங்களில் தங்களது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, தனது நிலவு தளத் திட்டத்தில் (Moon Base Programme) இணையுமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்கால நிலவு திட்டங்கள், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த இருநாடுகளின் பேச்சுவார்த்தைக்கு இடையே இந்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. அமைதியான முறையில் நிலவை ஆராய்வதற்கும், அங்கு […]

இந்தியாவில் பாலில் கலப்படம் செய்வது நீண்ட காலமாகவே முக்கிய உணவுப் பாதுகாப்பு பிரச்னையாக இருந்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் சோதனைகளில், நுகர்வோரின் உடல்நலத்தையும், பால் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் பல்வேறு கலப்பட முறைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செயற்கை மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பால் தயாரிக்கப்படுவதாக மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. FoodPharmer-க்கு அளித்த […]