திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம், வெள்ளக்குளம் வயல்வெளிப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், […]

சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஜூன் 8ம் தேதி அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்று திமுக ஐடி விங் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இந்த அவதூறு பதிவை நீக்குவதோடு, தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் நோட்டீஸ் அனுப்பினார். […]

புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரரின் வீட்டைப் பூட்டை உடைத்துத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் விடுத்த கோரிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது […]

கேரளாவை மட்டுமின்றி இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய சுகுமார குரூப் வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 42 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வரும் சுகுமார குரூப், தென்கிழக்கு ஆசிய நாடான புருனேயில் ‘ஜான் மேனன்’ என்ற பெயரில் தொழிலதிபராக வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், கேரளா க்ரைம் பிராஞ்ச் தற்போது இண்டர்போல் உதவியை நாட திட்டமிட்டுள்ளது. மலேசியா […]

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் தனக்கென ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர், பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், அவரது குடும்பத்தினரை சுற்றி வெளியாகியுள்ள தகவல் தற்போது ரசிகர்களையும் திரையுலகினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கைலாஷ் மலைக்கு யாத்திரை சென்றிருந்த தனது பெற்றோர் இருவரையும் தொடர்பு […]

மேஜர் லீக் சாக்கர் (MLS) சாம்பியனான லியோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மற்றொரு அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் “கிலி” கொன்சாலேஸ் (Cristian “Kily” Gonzalez) நியமிக்கப்பட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவைச் சேர்ந்த கொன்சாலேஸ், இடைக்காலப் பயிற்சியாளர் கில்லர்மோ ஹோயோஸின் கீழ் மியாமி அணி சந்தித்து வரும் மோசமான தோல்விகளைச் சரிசெய்யும் முயற்சியில் களமிறங்குகிறார். 52 வயதான கொன்சாலேஸ், தனது […]

இமாச்சலப் பிரதேசத்தில் பனிஏரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதோடு, downstream எனப்படும் கீழ்நோக்கிய பகுதிகளில் உள்ள நீர்மின் திட்டங்கள், குடியிருப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. ஐஐடி ரோபார் மற்றும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வின்படி, இமாச்சலப் பிரதேசத்தில் பனிஏரிகளின் எண்ணிக்கை 1990-ல் இருந்த 107 என்ற கணக்கிலிருந்து 2024-ல் […]

H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சலைத் தடுப்பதற்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருப்பது மட்டுமே போதுமானது அல்ல. கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும். அதே நேரத்தில், உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு தேவையான ஆதரவை வழங்க […]

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளால் பல்வேறு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அப்பர் திரிஷூலி ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக அரசு பிரத்யேக ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளது. நேபாள மின்சார ஆணையத்தின் தகவலின்படி, அப்பர் திரிஷூலி ஏ நீர்மின் திட்டப் பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியே […]

கோரமான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாளம் தவித்து வரும் நிலையில், உயிரிழந்த ஒரு பெண்ணின் உடலை இழுத்துச் சென்று அவரது காதணியைத் திருடிய கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், நாராயணி நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடலை இரண்டு நபர்கள் மரக்கட்டைகள் மற்றும் அப்பெண் முடியை பிடித்து வெளியே இழுக்கின்றனர். பின்னர், பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, […]