உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஆலோக் குப்தா (27), கடன் பிரச்சனை காரணமாக தனது சொந்த நண்பர்களாலேயே அடித்து படுகொலை செய்யப்பட்டு, மத்திய பிரதேச வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் தொழில்முறை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த ஆலோக் குப்தா, கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திடீரென மாயமானார். மகனைக் காணாமல் […]

டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக தன் மீதும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேருவின் திருச்சி தில்லை நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 பேர் கொண்ட குழுவினர் வீடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாக அமைச்சராக நேரு இருந்தபோது, […]

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (19). காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த சசிகுமாரின் மகள் நட்சத்திரா (18) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோகுலகிருஷ்ணன் தனது காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நட்சத்திராவின் தாயார் முகமது தமீம், தனது மகளுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு […]

“கையில் பணம் இருக்கிறது என்பதற்காக வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை” — தனியாக இருந்த ஒரு தருணம் நடிகை லதா ராவுக்கு இந்த உண்மையை ஆழமாக உணர்த்தியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அருகில் இருந்து ஒரு வார்த்தை கேட்கக்கூட யாரும் இல்லாத சூழலை சந்தித்த அவர், பணத்தைவிட உறவுகளின் மதிப்பு எவ்வளவு பெரியது என்பதை உருக்கமாக பகிர்ந்துள்ளார். ஹைதராபாத்தில் தற்போது தனியாக ஒரு அறையில் தங்கியிருக்கும் லதா ராவுக்கு உடல்நிலை […]

கேரளாவில் நள்ளிரவில் நடந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. குருவாயூர் பகுதியில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி மாணவர்கள் காரில் பயணம் செய்துள்ளனர். இரவு சுமார் 11.40 மணியளவில் பனம்பிக்குன்னு பகுதியில் […]

உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 17,500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண ஆணையர் அலுவலகம் வெளியிட்ட […]

பெங்களூரு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக நம்ப வைத்து, பெண் பயணியை பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஊழியரை ரயில்வே நிர்வாகம் உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளது. ஒடிசா மாநிலம் நுவாபடா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இரண்டு உறவினர்களுடன் வேலை தேடி பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த புதன்கிழமை திட்லாகர் பகுதியில் இருந்து ரயிலில் பயணத்தை தொடங்கியுள்ளனர். […]

ஈரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஈரானின் அரசு சார்ந்த ‘நூர்நியூஸ்’ (Nournews) செய்தி வெளியிட்டுள்ளது. […]

கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை நிலச்சரிவைத் தொடர்ந்து நேபாளத்தில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 5,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இந்தத் துயரத்தின் சுவடுகள் இன்னும் மாறாத நிலையில், தார்ச்சுலா (Darchula) மாவட்டத்தில் ஏற்பட்ட புதிய நிலச்சரிவால் மீண்டும் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தார்ச்சுலா மாவட்டத்தின் அபி ஹிமால் பகுதியில் உள்ள பட்டார் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அதிக அளவிலான மண் மற்றும் இடிபாடுகள் […]

பொலிவியாவில் ராணுவ முகாமுக்குள் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிவியாவின் லா பாஸ் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வியாச்சா (Viacha) நகராட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ராணுவ முகாமின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியிலேயே வெடிபொருட்கள் […]