குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையே வெறுமையாகிப் போகிறது என வேதனைப்படும் மனிதர்கள் ஒருபுறம்… தங்களுக்குப் பிறந்த குழந்தைகளையே உறவுச் சிக்கல்களுக்காக கொடூரமாக கொல்லும் சம்பவங்கள் மறுபுறம். ஒரு உயிரைத் தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய வரமாக எதிர்பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்; அதே உயிரை எந்தத் தயக்கமும் இல்லாமல் பறிக்கும் கொடூரமும் அரங்கேறுகிறது. அதிர்ச்சியளிக்கும் இந்த முரண்பாட்டுக்கு மத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மகிழங்கோட்டை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
டெல்லியின் புறநகர் பகுதியான ஸ்வரூப் நகரில், 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் சடலத்தை வயல்வெளியில் வீசிவிட்டு இலைகள் மற்றும் சேற்றால் மூடி மறைக்க முயன்ற 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 13-ம் தேதி குஷாக் சாலை அருகே உள்ள ஒரு திறந்தவெளிப் பகுதியில் நாய்கள் ஏதோ ஒன்றை கடித்துக் குதறுவதை அப்பகுதி […]
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகப் பரவி வரும் செய்திகளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் ‘போலியான’ மற்றும் ‘தவறாக வழிநடத்தும்’ செய்தி என்று கூறியுள்ள அமைச்சகம், இதுபோன்ற தவறான பதிவுகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உண்மை கண்டறியும் குழு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போலி செய்தி எச்சரிக்கை!!! சமூக […]
வீட்டில் தினமும் சுத்தம் செய்தாலும், சில பொருட்கள் நம் கவனத்துக்கு வராமலேயே அழுக்கு மற்றும் கிருமிகளைச் சேர்த்துக்கொள்ளும். குறிப்பாக சமையலறையில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பொருட்கள் ஈரப்பதம், உணவுத் துகள்கள் மற்றும் கைகளின் மூலம் கிருமிகள் தேங்குவதற்கு வாய்ப்பளிக்கின்றன. டாய்லெட் சீட்டை மட்டும் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தாமல், தினசரி கைகளில் படும் மற்றும் உணவுடன் தொடர்பு கொள்ளும் பொருட்களையும் முறையாக பராமரிப்பது அவசியம். பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சமையலறை ஸ்பாஞ்ச் […]
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது. இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுகளையும், உலகளாவிய எரிசக்தி சந்தையையும் கடுமையாகப் பாதிக்கும் என்று இந்தியா எச்சரித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸில் ‘ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைச் சட்டம்’ (Sanctioning Russia and Iran Act) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. தனது 140 கோடி மக்களின் […]
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு, கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான ‘பொதுச் சுமை’ தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதாவது, 2022 ஆம் ஆண்டின் பழைய விதிகளின்படி, அரசின் நேரடி ரொக்க உதவி மற்றும் நீண்டகால மருத்துவமனை பராமரிப்பு ஆகியவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் புதிய விதிகளின் கீழ், உணவு உதவி (SNAP), மருத்துவ உதவி (Medicaid), மற்றும் வீட்டுவசதி உதவி போன்ற பிற அரசு நலத்திட்ட […]
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இந்தி கற்பிப்பது குறித்த தனது மனநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பள்ளிகளில் இந்தி கற்பிப்பதற்கு தமிழகம் தெரிவித்துள்ள எதிர்ப்பு தொடர்பான வழக்கை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, தமிழக மண்ணில் இந்தி கற்பிக்க […]
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், அபிஷேக் சர்மா புயல் வேகத்தில் ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்தார். அபிஷேக் சர்மா வெறும் 30 பந்துகளில் சதமடித்து, சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார். ஃபசல்ஹக் ஃபாரூக்கி, அஸ்மத்துல்லா ஒமர்சாய் மற்றும் ரஷீத் கான் ஆகியோரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அபிஷேக், 34 […]
திரைப்படங்களிலும் அறிவியல் புனைகதைகளிலும் நாம் வியந்து பார்க்கும் ‘டைம் டிராவல்’ என்பது வெறும் பொழுதுபோக்கு கற்பனையா அல்லது நிஜமாகவே மனிதனால் காலத்தைக் கடந்து செல்ல முடியுமா என்ற விவாதம் மக்கள் மத்தியில் எப்போதும் சுவாரசியமானது. நிகழ்காலத்தில் நின்றுகொண்டு கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ நேரில் காண முடியுமா என்ற கேள்விக்கு, அறிவியலும் நம்முடைய பிரபஞ்ச அமைப்பும் தரும் பதில்கள் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றன. திரைப்பட எந்திரம் நிஜமாகுமா? திரைப்படங்களில் காட்டுவது போல […]
உலகெங்கிலும் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான திருத்தலங்கள் இருந்தாலும், 108 திவ்ய தேசங்களையும் தாண்டி, வேறு எங்கும் காண இயலாத மிக அரிய திருவுருவங்களில் எம்பெருமான் அருள்பாலிக்கும் தலங்கள் சில உண்டு. வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய அத்தகைய 10 விசேஷமான பெருமாள் கோயில்களின் சிறப்புகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். ஆசியாவின் மிகப்பெரிய சயனப் பெருமாள் – திருமயம் (புதுக்கோட்டை): புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள குடைவரைக் கோயிலில், ஆசியாவிலேயே […]

