முதுமை என்பது தவிர்க்க முடியாத இயற்கை நியதி என்றாலும், தினசரி வாழ்க்கை முறையில் சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 60 வயதைக் கடந்தாலும் சருமத்தில் முதுமை தெரியாமல் இளமை பொலிவுடன் திகழ முடியும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு, எளிய உடற்பயிற்சி மற்றும் இயற்கையான சருமப் பராமரிப்பு ஆகியவை ஒருங்கே இணையும்போது முகத்தில் தோன்றும் சுருக்கங்களை விரட்டி, புதுப்பொலிவையும் தன்னம்பிக்கையையும் பெறலாம். முதுமையை விரட்டும் பப்பாளி – சந்தனம் ஃபேஸ் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
விநாயகர் வழிபாடு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை பிரசாதம்தான். விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டையை நைவேத்தியமாக படைப்பதற்கு பின்னால் ஆழ்ந்த ஆன்மீக தத்துவங்களும், சுவாரசியமான புராண வரலாற்று நிகழ்வுகளும் சொல்லப்படுகின்றன. இந்த நைவேத்தியம் யாருடைய பசியை தீர்க்கிறது மற்றும் இதன் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக அறிந்துகொள்வோம். அரசன் ஞானபாலிக்கு ஏற்பட்ட சாபம்: முழுமுதற் கடவுளான கணபதியின் தீவிர பக்தனாக வாழ்ந்து வந்தவன் ஞானபாலி என்ற உத்தம […]
வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் திகழ காக்கும் கடவுளான மகாவிஷ்ணு மற்றும் அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருள் அவசியமாகும். பொதுவாகவே ஏகாதசி திதியும், பெருமாளுக்கு உகந்த புதன் மற்றும் சனிக்கிழமைகளும் பெருமாள் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில், சனிக்கிழமையும் ஏகாதசி திதியும் ஒன்றிணைந்து வரும் நவம்பர் 1-ஆம் தேதி, இல்லங்களில் பொருளாதாரப் பற்றாக்குறையைப் போக்கி அபரிமிதமான பண வரவை ஈர்க்கக்கூடிய சக்திவாய்ந்த ஏலக்காய் வழிபாடு விசேஷமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. […]
சைவ வழிபாட்டில் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி திதி சிவபெருமானுக்குரிய மிக உன்னதமான நாளாக போற்றப்படுகிறது. திருவண்ணாமலை உள்ளிட்ட புனித தலங்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் ஈசனை வழிபடும் நிலையில், தமிழ் மாதங்களில் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு தனித்துவமான ஆன்மீக முக்கியத்துவம் உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் மகா அன்னாபிஷேகம் இத்திருநாளில்தான் அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சிவபெருமான் அன்னத்தின் வடிவானவர் என்பதால், அன்னாபிஷேகத்தின் போது சார்த்தப்படும் […]
தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து, இக்கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய 5 கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் […]
TN New Secretariat | சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தலைமை செயலக பொதுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி, ரூ.1,200 கோடியில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமை செயலக கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட திட்டத்தை தடையின்றி செயல்படுத்தும் வகையில் […]
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிப்பது தற்போது 80 சதவீதம் வரை குறைந்துள்ளதாக டாஸ்மாக் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். மீதமுள்ள 20 சதவீத முறைகேடுகள் எங்கு நடக்கிறது என தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கடந்த கால தவறுகள், புதிய மாற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து […]
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே நல்லூரான்பட்டியில், மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அரசு மானிய உர மூட்டைகளை வேறு சாக்குப் பைகளுக்கு மாற்றி, வணிக நோக்கில் விற்பனை செய்யும் முறைகேடு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் மத்திய அரசின் மானிய விலையில் உர மூட்டைகள் வழங்கும் திட்டத்திற்கு, 2026–27 ஆம் நிதியாண்டிற்கான […]
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் உடல்மொழி மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் இருந்ததாகவும், இது மனித மாண்புகளுக்கு எதிரானது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதல்வர் தரப்பில் ‘உள்நோக்கம் கொண்டதல்ல’ என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய உடல்மொழி கண்ணியமான அணுகுமுறை அல்ல; அது மனித மாண்புகளுக்கு எதிரானது. அரசியல் விமர்சனங்கள் வேறு, […]
கடலூரில் சாலையோர வீட்டு வாசலில் படுத்துறங்கிய 70 வயது மூதாட்டியின் காது மற்றும் மூக்கை அறுத்து கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்தது கவரிங் நகை என தெரிந்ததும் உடலை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலா (70) என்ற மூதாட்டி, கடந்த சில ஆண்டுகளாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள நகைக்கடைகளின் வெளியே சாலையை சுத்தம் செய்யும் […]

