மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிப் பேருந்து எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்தின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மதுரை கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த ஆம்னிப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்புறம் பயணிகளை ஏற்றிச் […]

ஏசியைப் பயன்படுத்துவது பலரின் அன்றாட பழக்கமாக மாறியுள்ளது. பகல் முழுவதும் வெப்பத்தால் சோர்வடைந்த பிறகு, குளிர்ச்சியான அறையில் உறங்குவது சுகமான உணர்வைத் தருகிறது. ஆனால், ஏசியை மிகவும் குறைந்த வெப்பநிலையில் இயக்குவது உடலுக்கு எப்போதும் நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, ஆரோக்கியமான தூக்கத்திற்கு ஏசியை எந்த வெப்பநிலையில் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். பலர் விரைவாக குளிர்ச்சியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏசியை 18 […]

உடல் பருமன் என்பது வெறும் தோற்றத்தை மட்டுமே பாதிக்கும் பிரச்சினை அல்ல. அது உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதித்து, காலப்போக்கில் பல தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும் முக்கியமான உடல்நல சவாலாக மருத்துவர்கள் கருதுகின்றனர். பலர் இதை அழகியல் சார்ந்த பிரச்சினையாகவே பார்க்கும் நிலையில், நீண்ட காலமாக கட்டுப்படுத்தப்படாத உடல் பருமன் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தவறான உணவுப் பழக்கம், அதிக கலோரி […]

பலாப்பழம் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் சத்தான பழங்களில் ஒன்றாகும். இனிப்பான சுவையுடன் மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் இயற்கை உணவாக இது கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் போன்ற பல சத்துக்கள் இருப்பதால், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுவதுடன், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற […]

தேர்வு காலம் வந்துவிட்டாலே, பல மாணவர்கள் சந்திக்கும் இரண்டு முக்கியமான சவால்கள் கவனம் சிதறுவதும், படித்த பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போவதும்தான். புத்தகத்தை முன் வைத்து மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாலும், மனம் வேறு எண்ணங்களில் அலைபாயும் சூழல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, நீண்ட நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன் பலரிடம் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலுக்கு உடற்பயிற்சி […]

பற்களின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாக்க, தினமும் சரியான முறையில் பல் துலக்குவது மிகவும் அவசியம். குறிப்பாக, காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது நல்ல பழக்கமாக பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காரணம், இரவு முழுவதும் தூங்கும் நேரத்தில் உமிழ்நீர் சுரப்பு குறைவதால், வாயில் பாக்டீரியாக்கள் அதிகரித்து பற்களின் மேற்பரப்பில் பற்காரை உருவாகத் தொடங்குகிறது. எனவே, காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது இந்த பாக்டீரியாக்களை அகற்றி, வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. […]

விழுப்புரம் கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான சுதா. கடந்த சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மதியம் பிறந்த நிலையில், சுதா இரவில் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ரகசியமாக வெளியேறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், இது குறித்து உடனடியாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், […]

கடந்த 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில் ரத்னகிரி – சிந்துதுர்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மகாராஷ்டிராவின் முன்னாள் எம்பி விநாயக் ராவத். இவரது மகன் ஜிதேஷ் ராவத்திற்கும் கிரிஜா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கிரிஜா ராவத் காவல் நிலையத்தில் அளித்த புகார் ஒன்று பெரும் அதிர்ச்சியை […]

சமீப காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவிகள் பல்வேறு இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. சில நேரங்களில் வீடுகளுக்கு அருகிலும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும் கூட இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி […]

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சில பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், இவர் ஆர்டர் செய்த பொருள்களை கொடுப்பதற்கு டெலிவரி பாய் ஒருவர் வந்துள்ளார். பொருட்களை கொடுத்த அவர், தனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும், கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். இதனால், மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணும் டெலிவரி பாயை தனது கழிவறையை பயன்படுத்த அனுமதித்துள்ளார். கழிவறைக்குச் […]