கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பானதுதான். ஆனால், சின்ன விஷயங்களுக்குக்கூட அடிக்கடி சண்டை ஏற்பட்டு, அது நீண்ட நேரம் நீடித்தால் உறவில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். இதுபோன்ற சூழலில் பிரச்சினைக்கான காரணத்தை மட்டும் தேடுவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் பேசும் விதத்தை மாற்றுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கோபமாக இருக்கும் நேரத்தில் உடனடியாக பதில் சொல்லாமல், சிறிது நேரம் அமைதியாக இருப்பது முக்கியம். கோபத்தில் பேசப்படும் வார்த்தைகள் பின்னர் […]

இந்தியாவின் சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், அந்த மரபை மாற்றி அமைத்து வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்நாட்டையே சேரும். கடந்த 1974 ஆம் ஆண்டு […]

கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரையும் கைது செய்து, அவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தற்போது மீனவர்கள் 9 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனை தொடர்பாக […]

திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை மருத்துவர்களான இரு சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இதில் அவர்களது மனைவிகளும் மருத்துவர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சகோதரர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையை யார் நிர்வகிப்பது என்ற பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரான அழகாநந்தா என்பவர் திடீரென மருத்துவமனையின் மூன்றாவது தளத்திற்கு சென்று அங்கிருந்த செவிலியர்களிடம் தகராறில் […]

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் எதிரொலியாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர் […]

சைதாப்பேட்டை தொகுதியில் திமுகவுக்கு வாக்களிக்காத பொதுமக்களை சாபமிடும் வகையில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டைக்கு கொண்டு வந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் வாக்களித்திருந்தாலே வெற்றி பெற்றிருக்கலாம் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது […]

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பாரதிய ஜனதா கட்சி நடத்த திட்டமிட்ட தேசியக்கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி, தியாகிகளின் தியாக வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக்கொடி பேரணி நடத்த பா.ஜ.க. சார்பில் காவல்துறை அனுமதி கோரப்பட்டது. முதலில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாகவும், […]

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த 11 வகையான மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மேற்கொண்ட ஆய்வில், குறிப்பிட்ட சில மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ளவற்றில் 10 வகை பிராந்தி மற்றும் ஒரு ரம் வகை இடம்பெற்றுள்ளதாக […]

குஸ்கா என்றாலே ஹோட்டல் பிரியாணியின் மணமும், சால்னாவுடன் சேர்ந்து சாப்பிடும் அந்த தனி சுவையும் நினைவுக்கு வரும். இறைச்சி அல்லது காய்கறிகள் இல்லாமலேயே, சரியான மசாலா மற்றும் அரிசி பக்குவத்துடன் செய்தால் குஸ்கா சுவையாக இருக்கும். பொதுவாக பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசியைப் பயன்படுத்தி குஸ்கா தயாரிக்கப்படுகிறது. ஹோட்டலில் கிடைக்கும் அதே மாதிரியான வாசனையும் சுவையும் வீட்டிலும் கிடைக்க வேண்டுமென்றால், கல்பாசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனைப் […]

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்வது மட்டுமின்றி, தினசரி உணவிலும் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக காலை நேரத்தில் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கக்கூடிய சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது உதவியாக இருக்கும். அந்த வகையில், பாரம்பரிய கருப்பு கவுனி அரிசியில் தயாரிக்கப்படும் கஞ்சி ஒரு நல்ல காலை உணவு தேர்வாக இருக்கலாம். கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனால் நீண்ட நேரம் […]