வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், பெங்களூருவில் வீட்டு உரிமையாளரே 20 வயது கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் 60 வயது வீட்டு உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு சாந்திநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயது மாணவி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ் திரையுலகில் திரையரங்கு வெளியீடு மற்றும் ஓடிடி ரிலீஸ் இடையிலான இடைவெளி தொடர்பான பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. தயாரிப்பாளர்களின் வருவாய், திரையரங்குகளின் நலன், ஓடிடி நிறுவனங்களின் ஒப்பந்தம் என பல்வேறு தரப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, புதிய படங்களின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்வைத்ததாக கூறப்படும் திட்டங்களில் ஒன்றாக பேசப்பட்டு வரும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளையும், அவர்களின் தாய்மார்களையும் கவுரவிக்கும் வகையில் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்துக்கான கொள்முதல் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஜூன் 22-ம் தேதி முதல் […]
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா, 50% வரி விதித்தது. பதிலுக்கு கனடாவும் வரி விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதலே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரிகளை விதித்து வரும் டிரம்ப், தற்போது கனடாவின் மீதும் இந்த வரி விதிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். […]
வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்தும் கொடுமை இன்னும் பல குடும்பங்களில் தொடரும் நிலையில், ஹரியானாவில் வரதட்சணையாக எஸ்யூவி கார் கேட்டு இளம்பெண்ணையும் அவரது ஒன்றரை மாத குழந்தையையும் கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டம் ராஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த சோஹில் கானுக்கும், நுஹ் மாவட்டம் சலம்பா பகுதியைச் சேர்ந்த சகுஃப்தாவுக்கும் […]
மனஅழுத்தம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. மகனின் பிடிவாதத்தை சமாதானப்படுத்தச் சென்ற பெற்றோர், அவரைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாய் பகுதியைச் சேர்ந்த முரளிதர் சந்த்குடே மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு 19 வயதில் குணால் என்ற மகன் இருந்தார். குணால் புதிய செல்போன் வாங்கித் தருமாறு […]
பாரம்பரிய இந்திய சமையலறைகளில் கறுப்பு நிறத்தில் இருக்கும் கனமான இரும்புக் கடாய், தோசைக்கல் உள்ளிட்ட பாத்திரங்களை இன்றும் அதிகம் பயன்படுத்துவதை பார்க்க முடியும். நவீன காலத்தில் நான்-ஸ்டிக் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும், இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவுக்கு தனி சுவை இருப்பதாக பலரும் கருதுகின்றனர். இதற்கு வெறும் பாரம்பரியம் மட்டுமல்ல; வெப்பம் பரவும் விதம், எண்ணெய் படலம் உருவாகும் தன்மை மற்றும் உணவுடன் இரும்பு ஏற்படுத்தும் இயற்கையான […]
ரஷ்யா-உக்ரைன் போரில் வடகொரியாவின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ரஷ்யாவுக்கு வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கி வந்த வடகொரியா, தற்போது ட்ரோன் இயக்குநர்களையும் அனுப்பியுள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் வாடிம் ஸ்கிபிட்ஸ்கி கூறிய தகவலின்படி, ரஷ்யாவில் புதிதாக சுமார் 8,500 வடகொரிய வீரர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 400 பேர் ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சி […]
கர்நாடகாவில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர்பான தனிப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பின்னணியில் சிறைக்குள் நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளும் தற்போது வெளியாகியுள்ளன. சிறையில் இருந்த ரவுடியுடன் அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருந்ததாகவும், இருவரது தொடர்பு தொடர்பான வீடியோ பதிவு தற்போது வெளியானதாகவும் போலீஸ் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், பெண் […]
சென்னையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்களை மறைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை சமையல் பாத்திரத்தில் வைத்து தடயங்களை அழிக்க முயன்றதுடன், மற்றொரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் விட்டுச் சென்ற சம்பவம் போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற […]

