நினைவாற்றல், கவனம், சிந்தனை என மூளையின் அன்றாட செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு உணவுமுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே ஒரு உணவைச் சாப்பிடுவதால் மூளை ஆரோக்கியமாகிவிடும் என்றில்லை. அதற்கு பதிலாக, பல்வேறு ஊட்டச்சத்துகள் கிடைக்கும் வகையில் அன்றாட உணவில் காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், முழுதானியங்கள், கொட்டைகள், விதைகள் மற்றும் புரத உணவுகளைச் சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும். மூளையின் செயல்பாட்டுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் ஒன்று. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மராத்வாடா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்திற்குள் புகுந்து, அங்கு பணியாற்றி வந்த 23 வயது இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தித் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி காமராஜர் நகர் பகுதியில் அரசு சார்பில் ‘முதல்வர் மருந்தகம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா (23) என்ற இளம்பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாளராக வேலை பார்த்து […]
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ‘முண்டக்கண்ணு’ ஆனந்து (28). இவர் மீது பல்வேறு அடிதடி மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லித்தோப்பு பகுதியில் பாஜக பிரமுகர் விக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று மதியம் சுமார் 2 மணியளவில் ஆனந்த் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலை, கிருஷ்ணா நகர் […]
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாந்திரீக பரிகார நிலையம் நடத்தி வந்த போலி சாமியார் ஒருவர், பரிகார பூஜைக்கு வந்த பெண்கள் மற்றும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ எடுத்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். வாழப்பாடி அருகேயுள்ள வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா (50). இவர் ஆரம்பத்தில் பழைய ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற […]
ஆந்திராவை சேர்ந்த யூடியூபர் காந்தம் வைஷ்ணவி என்பவருக்கும், சித்தாரி ஹரிபாபு (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்தனர். கடந்த மார்ச் மாதம், 4 மாதக் கர்ப்பிணியாக இருந்த வைஷ்ணவி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அப்போது, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் தனது மகளை ஹரிபாபு சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டதாக வைஷ்ணவியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் கொலை வழக்குப் […]
டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது மற்றும் மதுபானங்களை விற்பனைக் கடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்திக் என்பவர், தனக்கு […]
மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவரை தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று நான்கு மாணவிகள் தாக்கியதாகவும், அங்கு அவரை மிரட்டி ஒரு ஆண் மாணவருடன் தொடர்பில் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு விவரம் தெரியவந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் ஆண் மாணவர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 65 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் புகாரைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், தலைமறைவாக இருந்த அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஊத்தங்கரை அருகே கிராமப் பகுதியில் வசித்து வருபவர் சின்னராஜ் (65). கால்நடை மருத்துவமனையில் பராமரிப்புத் துறை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீட்டில் இருந்தபோது அப்பகுதியில் விளையாடும் […]
ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசியப் போட்டிகளின் தொடக்க விழாவில், இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வீரர்களாக இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் குண்டு எறிதல் சாம்பியன் தஜேந்தர் பால் சிங் தூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியக் குழுவின் தலைமை அதிகாரி சகதேவ் யாதவ், மனு பாக்கரின் பெயரையும், இந்திய தடகளக் கூட்டமைப்பு தஜேந்தர் பால் சிங்கின் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 பாரிஸ் […]

