கரூர் மாவட்டம் நரசிம்மபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அருணன் ஆகியோரின் தாயார் தேவகி என்பவர் கடந்த 3ஆம் தேதி காலமானார். அவரது அஸ்தியைக் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக இருவரும் தங்கள் உறவினர்களுடன் கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அஸ்தியைக் கரைத்த பின்னர், அனைவரும் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது, அவர்களுடன் வந்த உறவினரான சீனிவாசன் (64) என்பவர் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று, […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து, பிணை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெல்லை மத்திய சிறை என்பது தி.மு.க.வினருக்கு முக்தி தரும் இடம். சிறைச்சாலை என்பது எங்களுக்கு […]
காவிரி நீர் உரிமை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்ததை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியாமலும், மேகதாது அணை திட்டத்தை தடுக்க இயலாமலும் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தின் கொந்தளிப்பை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது உரையாற்றிய, […]
ஓ.டி.டி-யில் தினமும் புதுப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், எந்த படத்தை பார்க்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். திகில், மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த படங்களை விரும்புபவர்களாக இருந்தால், இந்த வாரம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்றாக ‘டெத் விஸ்பரர் 3’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘டெத் விஸ்பரர் 3’ (Death Whisperer 3) திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. […]
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் நீலாங்கரை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் சஞ்சீவ் தனது வீட்டின் பால்கனியில் இருந்து அங்கிருந்த பரபரப்பான காட்சிகளை செல்போனில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவிரி உரிமை தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது […]
தவறுதலாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய பழக்கம் காதலாக மாறிய நிலையில், கணவரை விட்டு காதலருடன் சென்ற பெண், பின்னர் போலீஸ் விசாரணையில் சிக்கிய சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷோபா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரின் விருப்பப்படி குடுபள்ளி மண்டலம், குடிகோத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை […]
வெளிநாட்டில் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றிய கணவர், சந்தேகமும் குடும்பத் தகராறும் முற்றிய நிலையில் மனைவியையும் மாமியாரையும் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்த இரண்டு சிறுமிகள் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறிய நிலையில், இரட்டைக் கொலையை அரங்கேற்றிய நபர் ரத்தம் சொட்டிய ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ராமநாதபுரம் வைகை நகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (48). […]
மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, நற்பண்புகளை கற்றுக்கொடுத்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே, வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் சின்னாண்டாங்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் புவனா, அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றும் கலைமதி தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை […]
விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சக மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பண்ருட்டி அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் […]
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. உடல் எடையை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் இது உதவும் என்ற நம்பிக்கையால் பலர் இதை தினசரி பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், இதன் நன்மைகள் மற்றும் வரம்புகளை தெரிந்துகொண்டு பின்பற்றுவது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை ஈடுசெய்ய உதவுகிறது. […]

