சமீப காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவிகள் பல்வேறு இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. சில நேரங்களில் வீடுகளுக்கு அருகிலும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும் கூட இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி […]

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சில பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், இவர் ஆர்டர் செய்த பொருள்களை கொடுப்பதற்கு டெலிவரி பாய் ஒருவர் வந்துள்ளார். பொருட்களை கொடுத்த அவர், தனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும், கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். இதனால், மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணும் டெலிவரி பாயை தனது கழிவறையை பயன்படுத்த அனுமதித்துள்ளார். கழிவறைக்குச் […]

தேனி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் 49 வயதான பாலா என்கிற வேந்தர் பாலா. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி ராஜலட்சுமிக்கு 19 வயதான ஸ்ரீகாந்த் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதே போல் இவரது இரண்டாவது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக இவரை […]

இன்றைய காலகட்டத்தில் மூட்டு வலி, முழங்கால் வலி, மூட்டு விறைப்பு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகள் வயதானவர்களை மட்டுமல்லாமல் இளம் வயதினரையும் அதிகமாக பாதித்து வருகின்றன. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி இல்லாமை, உடல் எடை அதிகரிப்பு மற்றும் சத்தான உணவுகள் குறைவாக உட்கொள்வது போன்ற காரணிகள் இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், சரியான உணவுப் பழக்கவழக்கங்களையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றுவதன் […]

எவ்வளவு நேரம் தூங்கினாலும் உடல் புத்துணர்ச்சி இல்லாமல் சோர்வாகவே இருப்பதாக பலர் கூறுவார்கள். இதற்கு வைட்டமின் குறைபாடுதான் ஒரே காரணம் என்று நினைப்பது தவறு. உண்மையில், நீடித்த சோர்வுக்குப் பின்னால் பல்வேறு உடல்நலக் காரணங்கள் இருக்கலாம். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சோர்வை ஏற்படுத்தும் காரணங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை சரியான சிகிச்சையின் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். மற்ற சிலவற்றை கட்டுப்பாட்டில் வைத்தே வாழ வேண்டிய நிலை ஏற்படலாம். குணப்படுத்தக்கூடிய […]

தினமும் ஒரே மாதிரியான புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது தேங்காய் சாதம் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கறிவேப்பிலை மசாலா சாதத்தை ஒருமுறை செய்து பாருங்கள். வழக்கமான வெரைட்டி ரைஸ்களிலிருந்து சற்று வித்தியாசமான இந்த உணவு, மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும். இதில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் காரணமாக, பிரியாணியைப் போன்ற தனித்துவமான சுவை கிடைக்கும். அதே நேரத்தில், கறிவேப்பிலையின் சத்துக்களும் முழுமையாக கிடைப்பதால், இது […]

வெள்ளி கொலுசு மற்றும் மெட்டி போன்ற நகைகள் சில நாட்கள் பயன்படுத்திய பிறகு கருமை படர்வது இயல்பான ஒன்றுதான். குறிப்பாக வியர்வை, ஈரப்பதம் மற்றும் தினசரி பயன்பாடு காரணமாக அவற்றின் பளபளப்பு குறைந்து விடும். ஆனால் வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை பயன்படுத்தியே அவற்றை மீண்டும் புதிதுபோல் மின்னச் செய்யலாம். இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து […]

கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்த மலையாள நடிகையான சுவாசிகா, ‘லப்பர் பந்து’-க்குப் பிறகு பிஸியான குணசித்திர நடிகையாக மாறியிருக்கிறார். பின்னர் ‘மாமன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘நூறுசாமி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடித்துள்ள கருப்பு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். […]

கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக உலகம் முழுவதும் பலர் வித்தியாசமான மற்றும் சவாலான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது பிரேசில் நாட்டைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியினர் செய்த ஒரு வினோதமான முயற்சி கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் வேகமாக வைரலாகி வருகிறது. வித்தியாசமான சாதனைகள் மூலம் உலகின் கவனத்தை ஈர்க்கும் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில், தற்போது […]

பள்ளியில் ₹10 திருடியதாக ஆசிரியர்கள் பொய்க் குற்றச்சாட்டு கூறி அவமானப்படுத்தியதால், விரக்தியடைந்த எட்டாம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் அனேக்கல் தாலுகா மரசூரு கிராமத்தை சேர்ந்தவர் அருணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று, சிறுமி வழக்கம் போல் இரவு தூங்க சென்றுள்ளார். […]